Wednesday, December 27, 2006

தூக்கிலேற்ற வேண்டியவன் ஜார்ஜ் புஷ்

“சதாமின் தூக்குத்தண்டனை கண்டிக்கத்தக்கது”


1945, ஆகஸ்டு 6, இரோசிமா, 1945 ஆகஸ்டு 9, நாகசாகி என்று ஜப்பானின் இரண்டு நகரகளில் குண்டு வீசி ஒரே நேரத்தில் 4 - இலடசத்திற்கும் மேற்பட்ட மக்களை கொண்று குவித்த கொடூரமான மனித நேயமற்ற அரசு அமெரிக்கா.

ஈரான் ஈராக் போர் உள்பட அமெரிக்கா இதுவரை அங்கு 6 1/2 இலட்சம் பேரை கொன்று குவித்துள்ளது. தற்போது நடந்த தாக்குதலில் மட்டும் அதிகாரப் பூர்வமாக 65 ஆயிரம் போரை கொன்றொழித்துள்ள அமெரிக்க வெறி நாய் அரசு சதாம் 142 பேரை கொன்றதாக கூறி சதாமுக்கு தூக்குத்தண்டனை அளித்துள்ளது.

எண்ணை வெறி பிடித்து அலையும் அமெரிக்கா மனிதகுலத்தின் எதிரியாகவும் வளர்ந்துள்ளது ஏகாதிபத்திய வெறிநாயாக அலைந்து திரியும் அது தன் கட்டுப்பாட்டிற்கு வாராத நாடுகளை கடித்து குதறிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக எண்ணை வளமிக்க நாடுகளை அது குறிவைத்து தாக்கி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாக்குதல், ஈரான் ஈராக் போர் தூண்டல் பாலஸ்தீனத்தில் தம் எடுபிடிகளை வைத்து தொந்தரவு செய்தல் என எத்தனையோ கொடுமைகள் நிகழ்த்தும் அமெரிக்கா ஈராக்கில் அமர்ந்து கொண்டு அங்கு நீதி வழங்குவது மிகவும் கேலிக் கூத்தானது.
உண்மையில் உலகின் கொலை வெறியன் புஷ் தூக்குத்தண்டனை பெற வேண்டியவன். உலக நாடுகளை தன் போர் வெறியால் சூறையாடும் அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்ப்போம். ஆயுத வியாபாரி புஷ் கொலை வெறியை எதிர்ப்போம்.

Tuesday, October 31, 2006

பெயர் மாற்றம் : புதுச்சேரி அரசு மெத்தனம்

பாண்டிச்சேரி என்பதை "புதுச்சேரி" என்று மாற்ற வேண்டும் என்பது புதுவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கை கடந்த 1-10-2006 அன்று நிறைவேறியது.

மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

ஆனால், இந்த உத்தரவு குறித்து புதுவை அரசு ஒரு அலட்சிய போக்கோடு நடந்து கொள்கிறது.

புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று செய்தித்தாளில் ஒரு விளம்பரம் செய்ததோடு முடித்துக்கொண்டது. பெயர் மாற்றம் செய்ததை விழா எதுவும் எடுத்து புதுவை அரசு அறிவிக்கவில்லை.

பல்வேறு விழாக்களை கொண்டாடிவரும் புதுவை அரசு இதற்கு விழா எடுப்பதில் எவ்வித அக்கரையும் காட்டவில்லை. பொதுவாக எந்த மாநிலத்திலும் இவ்வாறு விழா எடுக்காமல் பெயர் மாற்றம் செய்வதில்லை.

ஆனால், புதுவையில் உள்ள அரசியல் வாதிகள் இதைப் பற்றி கண்டு கொள்வதாகவும் தெரியவில்லை. ஏனெனில் புதுவை அரசியல் கட்சிகளுக்கு செல்ல வேண்டிய கமிசன் தொகை சரியாக அவர்கள் அவர்களுக்கு சென்று விடுகிறது. மற்ற மாநிலங்களைப் போல் அல்லாது ஆளும் கட்சி எதிர் கட்சி என்று பாராமல் தொகை சரியாக போய் சேர்ந்து விடும். இதுதான் புதுவையின் மற்றொறு சிறப்பு.

இவ்வாறு விழா எடுக்காமல் இருந்தமைக்கு வேறு காரணமும் சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த கோரிக்கையை புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மு. இராமதாசு தொடர்ச்சியாக இப்பெயர் மாற்றத்திற்கு பாடுபட்டவர் என்பது புதுவை மக்கள் அறிந்த உண்மை. இவர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர் என்பதால் காங்கிரசு அரசு அதனை காரணமாக வைத்து விழா எடுக்கவில்லை என்றும் சொல்லப் படுகிறது.

புதுச்சேரி எனப் பெயர் மாற்றம் செய்து ஒரு மாதம் ஆகியும் புதுவைத் தலைமை செயலகத்தில் இன்னும் "பாண்டிச்சேரி" என்றே உள்ளது. அரசின் வாகனங்கள் பலவற்றில் "பாண்டிச்சேரி அரசு" என்றே உள்ளது. புதுவைக்கு வரும் பேரூந்துகளில் இன்னும் பாண்டிச்சேரி என்றே அனைத்தும் எவ்வித மாற்றமும் நிகழாமலே உள்ளது. புதுவைத் தொடர்வண்டி நிலையத்தில் இன்னும் பாண்டிச்சேரி என்றே உள்ளது.

இந்நிலையில் புதுவையில் சில அமைப்புகள் அரசு அலுவலகம் மற்றும் பேரூந்துகளில் பாண்டிச்சேரி என்பதை மாற்றி புதுச்சேரி என்பதற்காக பெயர் மாற்று, பெயர் அழிப்புப் போராட்டம நடத்த இருப்பதாக செந்தமிழர் இயக்கத்தின் தலைவர் ந.மு. தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

மேலும், புதுச்சேரிக்கான ஆங்கில எழுத்து "PUDUCHERRY" என்பது புடுச்சேரி என்று உச்சரிப்பில் உள்ளது, அதனை "PUDHUCHERRY" H சேர்க்கவேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் சில அரசு வாகனங்களில் "PUDUCHERRY" என்றே எழுதப்பட்டுள்ளது.

அதே போல் புதுவை விடுதலை நாளையும் புதுவை அரசு கொண்டாடவில்லை.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவால் பிரஞ்சு அரசின் சிறப்புத்தூதர் பியர் லேந்தி மற்றும் பிரென்சு இந்தியாவுக்கான இந்திய கான்சல் ஜெனரல் கேவல் சிங் ஆகியோருக்கும் இடையே 1-11-1954 ஆண்டு ஆளுனர் மாளிகையில் காலை 6.45 மணிக்கு பேச்சு வார்த்தையின் அடிபடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடிப்படையில் தான் புதுச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனை விழாவாக கொண்டாடவேண்டும் என்று புதுவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்ததன் விளைவாக 2004 ஆண்டு மட்டும் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம அவர்களை வைத்து விடுதலைப் பொன்விழா நடத்தினார்கள். அதன் பின் விழா எதுவும் புதுவை அரசு எடுக்கவில்லை. இவ்வாண்டும் அத்தகைய கோரிக்கையை பலர் வைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே அது போனது.

ஆனால், இந்திய அரசும், பிரெஞ்சு அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இரு நாட்டு நாடாளுமன்றமும் அறிவித்த 16-08-1962 ஆண்டு அறிவித்ததை மட்டும் புதுவை அரசு விடுதலை நாளாகக் கடைபிடித்து வருகிறது.

Wednesday, September 20, 2006

பொருள் மாறும் திராவிடம்

பொருள் மாறிக் கொண்டே வரும் திராவிடம் தேவைப்படுகிற ஆய்வு!

திராவிடம் என்பது தமிழ் என்பதே ‘திரமிள்’- திரமிட்’ என்றும், பின்னர் ‘திராவிட’ என்றும் சமஸ்கிருத ஆரியத்தினரால் கூறப்பட்டு வந்தது என்பது பாவாணரின் தெளிவுரை.

“நாகர் நிலமாய் விரிந்திருந்த நாவலந் தீவின் மக்களான நாகர்களின் மொழியான தமிழ்-திரமிள்-திரமிடம்-திராவிடம் எனத்திரிந்து வழங்கப் பெற்றது” என்று ஆய்ந்து விளக்கினார் அம்பேத்கார்.


‘பவழத்தை’ - ‘பிராவளம்’ –என்றும், ‘படி’யை –ப்ரதி- என்றும் கூறியது போல் ‘தமிழை’த் திரமிள்- திரமிட்- திராவிட் என்றனர்.

தமிழ் என்பதை உலகத்தில் அன்றைய மொழி வழக்கினர் பலர் அவ்வகையில் ஒலிப்பு மாற்றியே சொல்லிவந்தனர். தமிழை ‘தமிரிகே’ என்று ரோமானியர்கள் டாலமி- ரேவண்ணா ஆகியோரின் உலகப் படவரைவில் குறிப்பிட்டிருந்தனர்.

அதே போல சமக்கிருத இலக்கியங்களில் தமிழை ‘த்ரமிட்’ என்றே குறிப்பிட்டு வந்தனர்.

ஆக தொடக்கத்தில் தமிழ் என்பதன் ஒலிப்புச் சிதைவே திராவிடமாக குறிப்பிடப்பட்டது. எனவே தான் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்குள் பரவியிருந்த சமணத்தால் தமிழ் பாலிமொழிக் கலப்பால் –தமிழர்கள் ‘திராவிடர்’ என்பதாக ஒலிப்பு ச்சிதைக்கப் பட்டு ‘திராவிடச்சங்கம்’ என்கிற வகையிலேயே இயங்கினர்.

அதன் பின்னர் தொடர்ந்து தமிழர்கள் தமிழைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் தமிழ் என்பதாகவும், ஆரியக் கருத்தொற்றியவர்களால் எழுதப்பெற்ற இடங்களில் எல்லாம் திராவிடம் என்பதாகவும் கூறப்பட்டது.


திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லல்ல. மாறாக அது சமக்கிருத சொல்..

................................


ஆரியத்தை எதிர்த்த தமிழிய இலக்கியங்கள் ஆரிய ஆதிக்க அரசுகளால் அழிக்கப் பட்டன. தமிழில் வளர்ந்து இருந்த சிறந்த வானியல், மருத்துவ, மெய்யியல் இசை மற்றும் பிற அறிவு சார்ந்த நூல்கள் சமக்கிருத மொழிமாற்றம் செய்யப்பட்டதோடு மூல தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டன. பிறக்காலச் சோழர்களது ஆட்சியிலும் நாயக்கர் காலத்திலும் மராட்டிய சரபோசி ஆட்சிக்கால அரசுகளும் இவற்றையே திட்டமிட்டு செய்தன.

18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த ‘கால்டுவெல்’ எனும் மொழியியல் அறிஞரால் திராவிடம் பற்றிய கருத்துக்கள் வலுப்பெற்றன.

இந்தச்சூழலில் ‘திராவிடம்’ என்கிற கருத்தும், ‘திராவிடர்’ எனும் இனக்கோட்பாடும் திராவிடம் எனும் மொழி இருந்ததாகவும் பெருமளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதே சூழலில் தமிழ் அறிஞர்கள் அதை ஒப்புக் கொள்ளவில்லை. திராவிடம் எனும் மொழியில்லை என்றும், தமிழிலிருந்து தான் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் ஆரியக் கலப்பால் உருக்கொண்டன என்பதை நிறுவினர்.

“ கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதிரத் துதித் தெழுந்து
ஒன்றுபல வாயிடினும்”

- என்னும் கருத்துக்களில் தமிழிலிருந்து பிறமொழிகள் தோன்றின எனக்கூறியதோடு, அம்மொழிகள் இணைந்த ‘திராவிடர்’ என்பதால், திராவிடர் எழுச்சிப் போராட்டமாகவும் மாறியது.

வேதங்களும் வைதீகமும் ஆரிய வர்க்கம் என்பதை இந்தியா என்பதகவும்...... பார்ப்பன எதிப்பு பார்ப்பனர் ஆளுமைக் குரிய நாடான இந்தியாவை மறுத்து திராவிட நாட்டு அடையாளமாக அந்த நான்கு மொழிகளின் பயன்பாட்டுக்குரிய பகுதியை அடையாளப் படுத்தியது.


திராவிடத்தை உருவாக்கிய ஆரியம்

இந்திய நாட்டிற்கு எதிராக திராவிடநாடு அடையாளப் படுத்தப் பட்டது திராவிட நாட்டு எழுச்சி தமிழகத்தில் வீறுகொண்டு எழுந்தது. இதற்கிடையில் திராவிடம் என்பதை மொழிக்கூறில் உள்ள ஒற்றுமை என்கிற வகையில் மட்டுமே ஒப்புக்கொண்ட தமிழ் அல்லாத பிற மொழியினரால் திராவிட நாடு கோரிக்கையோடு ஒன்று பட இயலவில்லை.


...............................
திராவிடம் என்பது வரையறுக்கப் பட்ட தேசமோ, ஒரு சமுகமோ, ஒர் இனமோ அல்ல என்பதால்தான் அதனால் ஒரே காரணம் கொண்டு எழுச்சியுறவோ, போராடவோ போராடி ஆரியத்தி வீழ்த்தவோ முடியாது என்கிற முடிவுக்கு வரமுடிகிறது.

.......................

திராவிடம், திராவிடம் என வரலாறு அறியாமல் இல்லாத திராவிடத்தை ஒரே அணியில் திரட்டுவதில் நம்பிக்கை கொண்டு அதில் தமிழ்த் தேச எழுச்சி அமிழ்ந்து போனதால் எற்பட்ட பின்னடைவு போக,.......

இந்தியப் பார்ப்பனியத்தின் மீதும், பார்ப்பனக் கட்டமைப்பின் மீதும் ஓங்கை அறைந்து அவற்றை உடைத்தெரிகிற பேராற்றலைத் தமிழ்த் தேச உணர்ச்சிக்கு ஊட்டி வளர்க்க வேண்டிய தேவைக்குரிய சூழலாகும் இது..............................

(முக்கியப்பகுதி மட்டுமே வெளியிடப் ப்ட்டுள்ளது)

நன்றி: உழைக்கும் மக்கள் தமிழகம்

Tuesday, August 08, 2006

புலிகள் ஆதரவு - அடங்கிப்போக வேண்டுமாம்

புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்கு சரியான காரணத்தை இந்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

அதனால் தான் தமிழக முதல்வர் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை விவாதிக்கலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் ஈழம் கிடைத்தால் அது தமிழகத்தில் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணியே இந்திய அரசு தமிழர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறது.

வங்கதேச விடுதலையை எந்த அடிப்படியில் இந்தியா ஆதரித்தது?. முன்பு கூட இலங்கை அரசை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் தான் இலங்கை போராளி அமைப்புகளுக்கு இந்தியா பயிற்சி அளித்தது. வங்க தேசத்திற்கு ஆதரவு அளித்த அதே அடிப்படையில் ஈழப்போராளிகளுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்.

இது அரசியல் சமுகப்பிரச்சனையேத் தவிர தனிப்பட்ட அரசியல் விரோத நடவடிக்கை இல்லை என்பதை உணர வேண்டும்.

  • தேசிய விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக இழிவு படுத்தாதே!
  • விடுதலைப் புலிகள் மீதான் தடையை நீக்கு!
  • தமிழ் ஈழத்தை அங்கீகரி!
  • சிங்கள இனவெறி அரசுக்கு உதவிகள் செய்யாதே!
  • சிங்கள இராணுவமே தமிழ் ஈழப்பகுதியிலிருந்து உடனே வெளியேறு!

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 27-07-2006 அன்று திருவண்ணாமலையிலும், 31-07-2006 அன்று திருப்பத்தூரிலும் புரட்சிகர இளைஞர் முண்ணனி என்ற அமைப்பு பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: சிங்கள இனவெறி அரசை கண்டித்து கடந்த 31ம் தேதி புரட்சிகர இளைஞர் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் பேரணி நடத்த
அனுமதி கேட்டுள்ளனர். பேரணி உட்பட ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 150 பெண்கள் உட்பட 400 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் எந்த பதட்டமும்
இல்லை. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த அளவுக்கு ஆர்ப்பாட்டம் நடப்பது ஏற்கத்தக்கது தான்.

ஜனநாயக்கப்பூர்வமான முறையில் முறியாக காவல்துறையின் அனுமதியின் அடிப்படையில் தான் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டத்தையும் பேரணியையும் நடத்தியுள்ளது. அதனால் தான் முதல்வர் கருணாநிதிகூட இது ஏற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். சட்டப்படி இந்த ஜனநாயக அமைப்பு முறையில் உள்ள முறைகளைப் பயன்படுத்தித்தான் இவர்கள் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

ஆனால், இத்தகைய சனநாயக உரிமைகளைக்கூட மறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதை பிரச்சனையாக்குவது இவர்களின் தமிழர் விரோதப் போக்கையே காட்டுகிறது.

தமிழனை அழிக்க தமிழ் மண்ணில் பயிற்சி கொடுக்கும் போது அதை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஞானசேகரன் சட்ட ஒழுங்கு மீது மிகவும் அக்கரையாக இருப்பதாகவும் இந்திய இரையாண்மை மீது அக்கரை உள்ளவர் போல் பேசி யிருக்கிறார். இந்திரா காந்தி கால கட்டதில் இலங்கை இரையாண்மைக்கு எதிராக காங்கிரசார் செயல்பட்டதை அவர் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

இராசீவ் கொலை காங்கிரசு காரர்களுக்கே தொடர்பு உள்ள நிலையில் மன்மோகன் சிங் அமெரிக்க உளவாளி என்ற தலைப்பில் முன்னணிப் பத்திரிகைகளில் வந்த தகவல் அடிப்படையில் சில தகவல்களை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.

"சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் சி.ஞானசேகரன் இப்பிரச்னையை கிளப்பினார்.

இலங்கையில் தமிழர்கள் போராட்டத்தை ராஜிவ்காந்தி கொலைக்கு முன்பு ஆதரிக்காதவர்கள் யாரும் இல்லை. இப்பிரச்னையில் கி.மு., கி.பி., என்பதைப் போல ராஜிவ் கொலைக்கு முன்பு, ராஜிவ் கொலைக்கு பின்பு என்று தான் பார்க்க வேண்டும். "

என்று அவர் குறிப்பிட்டது சோனியா விதவை ஆகிவிட்டார் என்பது தான் இவரின் வருத்தம். நாமும் அதற்காக வருத்தப்படலாம். ஆனால், இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இலங்கை அரசால் கொல்லப் பட்டு விதவைகளாக்கப் படும் போது அதனை கண்டிக்கக் கூடாது என்று அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி நியாயமாகும்.

Thursday, August 03, 2006

காவிரி நடுவர் மன்றம் - எறுமையில் பயணம்

காவிரி நடுவர் மன்றத்திற்கு மீண்டும் ஆறுமாதம் நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 1991 ஆம் ஆண்டு ஜீன்-25ல் இடைக்கால தீர்ப்பாக 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

அதன் பின் என்னத்தை செய்தார்கள் என்று தெரியவில்லை. மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்க்கை நடத்தி வரும் இவர்கள். மக்கள் பிரச்சனைகள் மீது கொஞ்சமும் அக்கரை இல்லாத போக்கினால் தான் இந்த தீர்ப்பு வழங்க 16 ஆண்டுகளுக்கு மேல் எடுத்து கொள்கின்றனர். ஆனால் இன்னும் தீர்ப்பு வழங்கிய பாடில்லை. மேலும் ஆறு மாதம் வேண்டும் என்று கோரி மத்திய அரசிடம் கேட்டு பெற்றுள்ளனர்.

அப்படி என்ன பெரிய வேலை இந்த நடுவர் மன்றத்தில் என்றால் மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இழுத்தடிக்கும் போக்கின் ஒரு வடிவம் தான் இத்தகைய நீதி மன்றங்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக காவிரி நீர் இருந்து வந்துள்ளது. ஆனால், இவர்களின் மெத்தனப் போக்கால் தமிழக மக்கள் என்ன பதினாறு ஆண்டுகள் பாதி சோறு சாப்பிட்டுவிட்டு (அ) பட்டினிக்கிடந்தா சாகமுடியும்.

இடைக்காலத் தீர்ப்பு வழங்கி இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டிருப்பது இவர்களின் சமூக அக்கரையற்ற தன்மையாக தெரிகிறது.

இத்தனைக்கும் காவிரி நதிநீர்த் தொடர்பாக இந்த மாநில அரசுகள் பல்வேறு புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. இந்த பிரச்சனை நீண்ட நெடும் வரலாறு கொண்டதால் இதுபற்றிய தகவல்கள் பற்றி பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. பல ஆதாரங்கள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றுதான் பெரிய அளவில் தேடி அலைய வேண்டியதில்லை.

இத்தகைய ஆதராம் கண்ணெதிரே கிடந்தாலும் விசாரணைக் கமிசன் என்றால் எப்படி பிரச்சனை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கலாம் என்பதற்கு காவிரி நடுவர் மன்றம் ஒரு சிறந்த உதாரணம்.

16 ஆண்டுகளாக இவர்கள் என்னத்தைக் கிழித்தார்கள் என்றுதான் தெரியவில்லை.

ஆனால், சர்வதேச நதிநீர்ச் சட்டப்படி பல நாடுகளிடையேயான நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஆனால், காவிரி நதிநீர் பிரச்சனை ஏன் தீர்க்கப் படாமல் இருக்கிறது எனத்தெரியவில்லை.

சர்வதேச நதிநீர் சட்டம் இந்த பிரச்சனை தொடர்பாக மிகத் தெளிவான வரையறையைக் கொண்டுள்ளது.

அதாவது, இயற்கையாக வரும் நதிநீரை வரலாற்று ரீதியாக ஒரு பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தால் அந்த நதி நீரை வரலாற்று ரீதியாக பயன்படுத்தும் மக்களுக்கு பதிப்பில்லாத வகையில் அந்த நதியில் மேல் நிலையில் உள்ளவர்கள் நதி நீரைப் பயன் படுத்திக்கொள்ளலாம்.

அந்த நதியின் கீழ் நிலையில் உள்ளவர்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் அனுமதி இல்லாமல் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் அணைகள் ஏதும் கட்டக்கூடாது. நதியில் கீழ்நிலையில் பாதிக்கின்றவகையில் நீரை செயற்கையாக தடுத்து உபயோகிக்கக் கூடாது என்று சர்வதேச நதிநீர்ச் சட்டம் சொல்கிறது. இதன் அடிப்படையில் தான பலநாடுகளில் நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

பல நாடுகளிடையே நதிநீர்ப் பிரச்சனை தீர்க்கப்படும் போது மாநிலங்களிடையேயான நதிநீரை சர்வதேச சட்டத்தின் கீழ் மிக எளிதாக தீர்த்திருக்க முடியும். ஆனால் ஏன் இப்படி இழுத்தடிக்கப்படுகிறது என்றால் தமிழன் தான் எல்லோருக்கும் எமாளி என்பது இவர்களுக்கும் தெரிந்து உள்ளதால் தான் இப்படி நடந்திருக்குமோ என்று தான் கருத வேண்டியுள்ளது.

Wednesday, July 12, 2006

ஆரியர்கள் பூர்வகுடிகளா?

ஆரிய இனம் ஒன்று இல்லை. என்று சொல்லி அதற்கான ஆராச்சியில் ஈடுபட்டு புதிய குழப்பங்களை ஆதாரமாக காட்டப்படுகிறது.
இது போன்ற பொய் செய்திகளை எழுதிவிட்டு பின்னர் இதை வேறு ஒருவர் ஆதாரமாக காட்டி நிறுபணம் செய்யும் வேலையை இவர்கள் செய்வது இன்று நேற்றல்ல.
இவர்கள் நீண்ட நெடுங்காலமாக செய்து வருவதுதான்.
இங்கே பார்ப்பன இனத்தை சேர்ந்த சிலரும் மற்றவர்களும் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்ப்போம்.
"உலகில் தென் இந்தியா மிக உயர்ந்த இடத்தை( ஸ்தானத்தை) ஒரு காலத்தில் வகித்து வந்தது - அது திராவிடர்களால் ஆளப்பட்டு வந்தது. பின்னர் அது நாடோடிகளான ஆரியர்கள் வசமானது."
(பண்டிதர் நேரு - உலக சரித்திரம். - முதல் பாகம்- பக்கம் 2002-2003) 
"இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர்கள் பரவியதைக் குறிப்பதாகும். " (பண்டிதர் நேரு - டிஸ்கவரி ஆப் இந்தியா - பக்கம் - 82)
"இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ- ஆரியர் காலத்தையும் இவர்களுடைய வெற்றிகளையும் உள்நாட்டு சண்டைகளையும் பற்றிக்கூறுவதாகும். இவைகளை நான் உண்மை என்று நான் நம்பவேயில்லை. பஞ்ச த்ந்திரம் அராபியன் இரவுகள் போன்று இது ஒரு கற்பனைக்கதை தான் என்பதே என்கருத்து" (பண்டிதர் நேரு - டிஸ்கவரி ஆப் இந்தியா - பக்கம் - 76-77)


ஆரியர் என்ற ஒரு இனம் இல்லை என்றால் நேரு எதைக் குறிப்பிட்டார்.
"ஆரியர் ஆதிக்கத்தினால் திராவிடர்கள் அடிமை சாதி மக்களாக ஆக்கப்பட்டார்கள்: ஆரியர்கள், தங்கள் நாட்டில் புல்தரை இல்லாததினாலும், மங்கோலியர்கள் அவர்களை விரட்டி அடித்ததினாலும் பிழைப்புக்காக இடம் கண்டுபிடிப்பதற்காகவே வந்தார்கள்". - ஏ. எல். சாண்ட்ர்ஸ்.
"ஆரியர்கள் சமசுகிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்கு கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கே தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண்டார்கள்." -எச். ஜி. வெல்ஸ்
 
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் திராவிட இனத்தவராகவே இருக்க வேண்டும். அப்படி அவர்களை திராவிடர்கள் தாம் என்றால் ஆரியர் யார் என்று வரையறுக்க வேண்டும். ஆரியரே இந்நாட்டுக்கு வரவில்லை என்றால் பார்ப்பனர்கள் நிறத்தாலும், மொழியாலும், பழக்க வழக்கத்தாலும், குலத்தாலும் வேறுபடுவது ஏன் என்று விளக்க வேண்டும். (பெருஞ்சித்திரனார்- ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள் பக்கம் -15)
இவர்மட்டுமா?
கீழே கேளுங்கள்...........
ஆடுமாடு ஓட்டிகிட்டு பொழைக்க வந்த!- அப்படியே
ஆத்தங்கரை ஓரத்தில டெண்டடிச்ச!
வேத இதிகாசமின்னு சரடு விட்ட!
எங்கள வேசிப்பய புள்ளங்கன்னு எழுதிபுட்ட!
போரதெல்லாம் போகட்டுன்னு பொருத்துகிட்டா!.........
நீதான் பூர்வ குடி இங்கிரியேடா- புளுகு மூட்ட!
போதும் நிறுத்து, போதும் நிறுத்து போதும் நிறுத்தடா!.........
உன் வேசம் இப்போ கலஞ்சிபோச்சி பேச்சை நிறுத்தடா!.............
தொடப்பம் எடு எடு..........,
செறுப்ப எடு எடு...........
ஓடடா ஓடு, .................ஓடடா ஓடு....................
( அசுர கானம் : ம.க.இ.க -வின் பாடல்).


மேலே குறிப்பிட்டுள்ளவற்றை பார்த்தால் ஆரிய இனம் என்று இருந்தது என்பதை ஆரியர் நேருவே குறிப்பிட்டுள்ளார் என்பதை நாம் அறியலாம்.
இவர்கள் எப்போதும் வரலாற்றை திருத்தி எழுதுபவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
" தமிழரிடமிருந்த பல அரிய விசயங்களையும் மொழி பெயர்த்து தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்ததைப் போலவும் வட மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது போலவும் காட்டி தமிழ் ஓலைச்சுவடிகளை அழித்தனர்.பரிதிமாற் கலைஞர்- வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி (தமிழ் மொழியின் வரலாறு : பக்கம்-33)
" இவர்கள் இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்தவர்கள் தங்கள் ஆடுமாடுகளுக்கு புல்லைத்தேடிக் கொண்டு ஊர் ஊராய் திரிந்தவர்கள்". பரிதிமாற் கலைஞர்- வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி
(தமிழ் மொழியின் வரலாறு : பக்கம்-29).

உ.வே. சாமிநாத அய்யர் தமிழுக்கு தொண்டு செய்தார். ஆனால், அவர் தன் பெயருக்கு அருகிலேயே அய்யர் என்ற சொல்லை, தன் உயர்நிலை என்று கருதும் ஒன்றை எப்போதும் தன்பெயர் அருகில் வைத்துக்கொண்டிருந்தார்.
அந்த பார்ப்பனர் எப்படியெல்லாம் திருத்தல் வேலைகளை செய்தார் என்பதை பார்ப்போம்.
புறநானூற்றில் " ஆண்முலையறுத்த" என்று தொடங்கும் பாடலின் ஒரு சொல் "அறவோர்" என்று வந்துள்ளது . இதனை யாழ்ப்பணத்து பழைய வெளியீடு ஒன்றில் சொல்லப்படுகிறது. ஆனால், உ.வே.சா அவர் பதிப்பில் அந்த சொல் "பார்ப்பனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாட வேறுபாடாகக்கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை.
"அறவோக்குக் கொடுமை செய்தல் கூடா" - தெனும் அறம் பற்றிச் சொல்லும் அப்பாடலை "பார்பார்க்குக் கொடுமை செய்தல் கூடா" -தென்பதாக இவர் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு "
கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக்கொலை"
என்ற காஞ்சி புராண அடியை மேற்கோள் காட்டியுள்ளார்.
இப்படி வரலாற்றை இவர்கள் திருத்துவது இன்று நேற்றல்ல.
காலம் காலமாக செய்து வருவதுதான்.

அன்று மன்னன் அதிகாரத்தை வைத்து இவர்கள் அதிகாரம் செய்தார்கள்.
மனுநீதி எழுதி உலக நீதியை கெடுத்தார்கள்.
தமக்கு மட்டும் தனிநீதி எழுதிக் கொண்டார்கள்.
பின்னர் செய்தி ஏடுகளில் எழுதி ஊரைக் கெடுத்தார்கள்.
இன்று இணையம் உள்ளிட்ட வற்றில் எழுதி நம்மைக் கெடுக்கிறார்கள்.
நிகழ்ச்சி ஒன்றுதான் காலம் இடம் தான் வேறு படுகிறது.


*******************************
பிற விவாதங்களை நண்பர் தமிழினி பதிவில் பார்க்கலாம்.
ஒரு தமிழனின் பார்வை: வஜ்ராவின் திராவிட கூத்து

Wednesday, June 21, 2006

அனைத்துக்கட்சிக் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும், உண்மை நிலையை கண்டறியவும் அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கூட்டமைப்பின் செயலர் கோ. சுகுமாரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமைதிப்பேச்சு வார்த்தையை சீர்குலைத்து ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இலங்கை அரசு அறிவிக்கப்படாத போரைத் தொடங்கி தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. இதை தடுக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழ் எம்.பிக்களை அழைத்து இலங்கை நிலவரம் குறித்துப்பேச வேண்டும்.

உலகத்தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்துள்ளது. 'தமிழர்கள் மீது போர்தொடுத்தால் ராணுவத் தளவாடங்களை திரும்பப்பெருவோம்' என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். எனவே இந்திய தளவாடங்களை திரும்பப் பெறவேண்டும்.

அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தி வருகின்றனர். தமிழக அரசு அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து தாக்கிவருகிறது அதனை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை தமிழக அரசு மெளனமாக இருந்த வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

ஈழத்தமிழர்களை பாதுகாக்க இந்தியா உடனடியாக தலையிட வேண்டும். எனபன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தார்.

இப்பேட்டியின் போது, ஈழமக்கள் ஆதரவு கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. அழகிரி, தந்தைப்பெரியார் தி.க புதுவை தலைவர் திரு. லோகு. ஐயப்பன், இராட்டிரிய சனதா தளம் தலைவர் திரு. சஞ்சீவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Friday, June 16, 2006

புதுவையில் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் இன்று மாலை (16-06-2006) 5.00 மணியளவில் புதுவை திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இலங்கை அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இலங்கை தமிழர்கள் மீது மிகவும் கொடுமையான தாக்குதலை இலங்கை அரசு நடத்தி வருகிறது. தன் சொந்த நாட்டு மக்களையே இரக்கமின்றி தாக்கி வரும் இராணுவம் தமிழ் மக்கள் மீது கொலை வன்புணர்ச்சி உள்ளிட்ட மனித உரிமை மீரல் செயல்களை செய்து வருவது மிகவும் கண்டிக்கத் தக்கது. விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி அப்பாவித்தமிழ் மக்களை அச்சுறுத்தி இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழர் தேசிய இயக்கத்தின் புதுவை பொருப்பாளர் திரு. இரா. அழகிரி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிக்கிறார்.

ம.தி.மு.க. வின் புதுவை பொருப்பாளர் திரு. முத்து, விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் திரு. வணங்காமுடி, திரு.பாவாணன், திரு.அமுதவன், பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் புதுவைச் செயலர் திரு. கோ. சுகுமாரன், செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் திரு. ந.மு. தமிழ்மணி, தந்தைப்பெரியார் திராவிடர்க்கழகத்தின் புதுவைத் தலைவர் திரு அய்யப்பன், இராவணன் படிப்பகத்தின் திரு வீராசாமி, பியூச்சர் அமைப்பைச் சேர்ந்த திரு. இராதா, அம்பேத்கார் தொண்டர் படையைச் சேர்ந்த திரு. மூர்த்தி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் கலந்து கொள்கின்றன.

இரா. சுகுமாரன், ந. இளங்கோ, கோகுல் காந்திநாதி உள்ளிட்ட பலர் இக்கண்ட ஆர்ப்பட்டதில் கலந்து கொள்கின்றனர்.

Saturday, June 03, 2006

மதங்களும் வன்முறையும்

இந்து மதம் வன்முறையானது என்பதற்கு இந்த படம் ஒரு ஆதாரம்.

இந்த படத்தில் ஒரு பெண்ணின் குடலை உறுவி திண்பது போல ஒரு தோற்றம். காலில் ஒரு உடலைப்போட்டு மிதித்துக் கொண்டு சூலத்தால் குத்திக் கொண்டிருக்கிறது.

அதே போல ஆயுதம் இல்லாத கடவுள் இந்து மதத்தில் இல்லை. ஒன்றிரண்டு இருக்கலாம்.

அதே போல இரண்டு மனைவிகள் போன்ற சீரழிவுகள் இந்த கடவுள்களிடம் உள்ளது.

உலகளாவிய முஸ்லீம் மதவாதம் பேசப்படுவது போல் இந்த இந்துமத ஆயுதக் கலாச்சாரம் அதிகம் பேசப்படுவதில்லை.

கிருத்துவின் நம்பிக்கையாளரான புஷ் உலகம் முழுதும் உள்ள மக்களை தம் நாட்டின் ஆயுத பலத்தால் கொன்று குவிக்கிறார். இந்த பயங்கரவாதம் கண்டிக்கத் தக்கது. அவர் ஏற்றுக் கொண்டிருக்கிற மதம் அன்பை மட்டும் போதிக்கும். ஆனால், புஷ்ஷை கண்டிக்காது.

காந்தியை என் கொன்றாய் என்று "கேட்சே"யை கேட்ட போது இந்து மதம் ஆயுதம் ஏந்தியது ஆனால், காந்தி கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது என்று சொல்லி இந்துக்களை கோழையாக்கி விட்டார். எனவே இவரை நீண்ட நாள் விட்டால் இந்துக்களை கோழையாக்கி முஸ்லீம்களின் ஆதிக்கம் பெற்ற நாடாக மாற்றிவிடுவார் எனவே தான் அவரை கொல்ல நேர்ந்தது என்று குறிப்பிட்டார்.

இந்து மதம் ஆயுத கலாச்சாரத்தை ஆதரிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

காந்தியை கொன்ற ஆர். எஸ், எஸ் காரர்களின் ஆயுதமும், சூலம் தான்.

Thursday, May 25, 2006

தேசிய இன வாதம் - சந்திப்பு அவர்களுக்கு பதிலாக

தேசிய இன விடுதலை பிரிவினை வாதமல்ல

இந்தியாவிற்கு ஒரே பிரதமர், ஒரே தேசியக் கொடி, ஒரே தேசியகீதம், ஆனால், எங்கள் தமிழ்ப்படத்தை 7 வாரம் கழித்துத் தான் கர்நாடகாவில் ரீலீஸ் செய்யமுடியும். ஆனால் கோக், பெப்சி கம்பெனிகள் தங்கள் சரக்குகளை அங்கே விற்று பணத்தை அள்ளிச் செல்ல முடியும். இதற்குப் பெயர் தான் தேசிய ஒருமைப்பாடு?.

திரைப்பட இயக்குனர் சீமான் (மே-10-06 இந்தியா டுடே தமிழ் பக்கம்- 5).

திரைப்பட இயக்குனர் தெரிவிக்கும் தகவல் என்ன?. மொழி வாரியான தேசிய இன எழுச்சி தலை தூக்கியுள்ளது என்பதையே காட்டுகிறது. ஒரே நாட்டில் காவிரி நதி நீர்ப்பிரச்சனை தீர்க்கப் படாமல் இருப்பது ஏன்? ஆனால் இரண்டு வேறு பட்ட நாடுகள் இடையே கூட நதிநீர்ப் பிரச்சனைகள் எளிமையான முறையில் தீர்க்கப்பட்டதாக வரலாறு உள்ளது.

கர்நாடகத்தில் காவிரியும், ஆந்திராவில் பாலாறும், கேரளாவில் பெரியாறு அணையும் தமிழர்களுக்கு பிரச்சனையாக உள்ளது. ஒரே இந்தியா என்ற உணர்வு இவர்களுக்கு இல்லையா? தமிழ் தேசியம் பற்றிப் பேசினால் இங்கு எதிர்கின்ற பொதுவுடைமை கட்சி, கர்நாடகத்தில் காவிரி நீரை தமிழகத்திற்கு விடவேண்டாம் என முடிவு செய்கிறது. ஆனால் தமிழகத்திலோ அந்த கட்சி காவிரி நீரை விடவேண்டும் என்கிறது. ஒரே கட்சி இருவேறு மாநிலத்தில் வேறு வேறு நிலைப்பாடுகள் ஏன்?. அதே போல காங்கிரசு, பா.ச.க ஆகிய கட்சிகள் அந்த மாநிலத்தில் ஒரு மாதிரியும் தமிழகத்தில் வேறு மாதிரியான நிலையையும் எடுக்கிறது.

தைரியமாக காவிரி நீரை விடவேண்டும் என்றோ, அல்லது விடவேண்டாம் என்றோ அந்த கட்சிகள் அறிவிக்க தயாரா?. அறிவிக்க மாட்டார்கள்.

அதாவது மொழி அடிப்படியிலான, இன அடிப்படையிலான உளவியல் மாற்றம் எல்லா மாநில அரசுகளிடமும், மக்களிடமும் காணப்படுவது உண்மை என்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.

காவிரி நீர் தமிழக மக்களின் உயிராதாரமான பிரச்சனையாக உள்ளது. காவிரி பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படவில்லை. எனவே, தனிநாடாக பிரிந்து போனால் தான் சர்வதேச நதிநீர் சட்டப்படி மாநிலங்களுக்கு சேர வேண்டிய நீரை பெறமுடியும் என்கிறது “ஒடுக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பு.

“இரு தேசிய இனங்கள் பிரிந்துதான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தொழிலாளர் வர்க்க போரின் அடுத்த கட்ட நன்மைக்கு அவற்றைப் பிரித்து விடுவதே நல்லது” – என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்தியா என்றொரு பேரரசு இருந்ததில்லை. எனவே இந்தியா என்பது பூகோள ரீதியிலான அரசியல் பெயரே தவிர அது ஒரு இனம் சார்ந்த நாட்டில் பெயரல்ல.

இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியா முழுவதும் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே உள்ளது. ஒரு மொழி அழிந்தால் அந்த இனம தன் அடையாளத்தை இழக்கிறது. அது அழிந்து போகிறது என்று பொருள்.

செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமக்கிருதம் யாருமே பேசாத மொழியாக உள்ளது. ஆனால் தமிழ் உலகம் முழுதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பேசும் மொழியாக உள்ளது. ஆனால் அந்த மொழிக்கு சமக்கிருததிற்கு இணையான தகுதி வழங்கப்படவில்லை. எனவே இந்திய அரசு ஒரு மொழி ஒடுக்கும் அரசாக உள்ளது. அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படுவதில்லை என்பது உண்மை.

திராவிடத் தேசியம் என்பது இன்றைக்கு கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொல்லப்படவில்லை. இன்று திராவிடம் என்பது ஒரு அடையாளச் சொல்லே தவிர அரசியல் சொல்லாக அது இல்லை.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டாலும் 56 நவம்பரிலிருந்து கவனித்தால் அவர் எந்த இடத்திலும் அவர் திராவிடத் தேசியத்தை வலியுறுத்த வில்லை என்பது விளங்கும். 56 க்குப்பின் இந்திய வரைபடத்தை எரிக்கப்போகிறேன் என்று பெரியார் சொன்னபோது தமிழ்நாடு நீங்கலாக என்று சொன்னாரே தவிர திராவிடநாடு தவிர என்று சொல்லவில்லை.

இப்படி சிறிய தேசிய இனங்களாக இருந்தால் அமெரிக்கா போன்ற நாடுகளால் வல்லரசு ஆத்திக்கம் இருக்கும் என்கிறார்கள் சிலர். உலகத்திலேயே மிகப்பெரிய நாடாக இருக்கிற இந்தியா மீது அமெரிக்க ஆதிக்கம் இல்லையா?. இன்று உலகத்திலுள்ள மிகப்பெரிய நாடுகளும் ரஷ்யா உள்பட அமெரிக்காவைப் பார்த்து அஞ்சுகின்றன.

அமெரிக்காவைப் பார்த்து அஞ்சாமல் இருக்கிற சின்னஞ்சிறிய நாடு கியூபா என்பதை மறந்து விடவேண்டாம்.

பாரதீய சனதாகட்சியின் அத்வானி சிந்தி இனத்தை சேர்ந்தவர். பாகிஸ்தானிலிருந்து அகதியாக வந்தவர். எனவே பாகிஸ்தானின் சிந்தி இன உரிமைப் போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தருகிறார். காங்கிரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் அவ்வாறு சிந்தி இன விடுதலைக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தன . ஆனால் அதை நாம் பேசினால் அதற்கு பெயர் “பிரிவினைவாதம்” அவர்கள் பேசினால் அதற்கு பெயர் தேசப்பற்று.

பாகிஸ்தானில் வங்க மக்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய போது இந்திய இராணுவத்தை அனுப்பி அவர்களுக்கு உதவி செய்தது. எனவே இந்தியாவில் தேசிய இனங்கள் விடுதலை அடையக்கூடாது. அன்னிய நாடுகளில் விடுதலை அடையாலாம் என்பது இந்திய அரசின் கொள்கை மட்டுமல்ல பல கட்சிகளின் நிலையாகவும் உள்ளது.

தேசிய இனம் தொடர்பாக பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளரான சந்திப்பு அவர்கள் இனவாத்தில் நம்பிக்கை இல்லை என்கிறார்.

//இறுதியாக ஜாதி, மதம், இனம் இதன் பெயரால் தளம் இயங்குவது படிப்படியாக பாசிசத்திற்கு துணை புரியும்!//

என்று அவர் தன் வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் ஆதரிக்கும் கட்சி தேசிய இனம் தொடர்பாக என்ன சொல்கிறது என்பதை கீழேக் காண்போம்.

இந்திய பொதுவுடைமைக் கட்சி ஒன்றுபட்ட கட்சியாக இருந்த போது கீழ்ககண்டவாறு முடிவெடுத்தது. 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கட்சியின் மாநாட்டில் தேசிய இனச்சிக்கல் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பலதேசிய இனங்கள் அடங்கிய பெருநாடே இந்தியா என்பதை ஏற்றுக்கொண்ட அத்தீர்மானம் மேலும் அது பற்றி பின்வறுமாறு விளக்கமளித்துள்ளது.

“இத்தீர்மானத்தின் 3(ஏ) பகுதியில் பின்வறுமாறு குறிப்பிட்டுள்ளது. ஒரு தொடர்ச்சியான நிலப்பகுதியைத் தாயகமாகக் கொண்டு பொதுவான வரலாற்றுப் பாரம்பரியம், பொதுமொழி, பொதுவான பண்பாடு, பொதுவான மனவியல் பண்பாடுகள், பொதுவான பொருளாதார வாழ்க்கை ஆகியனவற்றைக் கொண்ட ஒவ்வொரு மொழிவழி மக்களும் தனித்தேசிய இனமாகக் கொண்டக் கருதப்பட வேண்டும்.

விடுதலை பெற்ற இந்தியாவில் சுயாதிக்க அரசாக (Autonomous state) விளங்ககூடிய உரிமையும் விரும்பினால் அந்தத் தேசிய இனத்திற்குப் பிரிந்து செல்லக்கூடிய உரிமையும் இருக்க வேண்டும். ........................ .இவ்வாறு பிரிந்து அமைக்கப்பட்ட பல்வேறு தேசிய இனங்களின் சுயாதிக்க அரசுகளின் கூட்டமைப்பாக இந்தியா திகழும் ”.

இந்தத் தீர்மானத்தின் ஐந்தாம் பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “ஆனால் இந்த விதத்தில் பிரிந்து போகும் உரிமையை அங்கிகாரிப்பதன் மூலம் உண்மையில் மாநிலங்கள் பிரிந்து விடும் என்று கருதத் தேவையில்லை. தேசிய இனங்களுக் கிடையிலான பரஸ்பர சந்தேகங்களைப் போக்குவதன் மூலமும், செயற்பாட்டை ஒருமையைக் கொண்டு வருவதன் மூலமும் சுதந்திர இந்தியாவில் மகத்தான ஒற்றுமையைக் கட்டிக்காக்க முடியும். இத்தகைய தேசிய ஒற்றுமையே எல்ல தேசிய இனங்களுக்கும் ஒருங்கிணைய வேண்டிய அவசரத்தேவையை அவற்றுக்கு உணர்த்தி சுதந்திர இந்தியாவை உருவாக்கும். அத்தகைய சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இன அரசும் சுதந்திரமாகவும், சம மதிப்புக்கொண்ட உறுப்பாகவும் பிரிந்து செல்லும் உரிமை கொண்டதாகவும் இருக்கும். நாம் அடையவிருக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்குரிய ஒரே வழி இதுவாகும்.”

பொதுவுடைமைக் கட்சியின் இத்தீர்மானம் மிகத்தெளிவாகவும், உறுதியாகவும் தேசிய இனங்களின் தன்னுரிமையை வலியுறுத்துகிறது.

இந்தியா ஒன்றுபட்டு இருக்க வேண்டுமானால் தன்னுரிமை கொண்ட தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியா திகழ்வதன் மூலமே உண்மையான ஒற்றுமை நிலவும் என்பதையும் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

1946ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசின் சார்பில் வந்த கிரிப்ஸ் தூதுக்குழுவிடம் தனது கருத்துக்களை பொதுவுடைமைக்கட்சி சமர்ப்பித்திருந்தது. அப்போதைய பொதுச்செயலாராக இருந்த பி.சி.ஜோஷி இக்குழுவிற்கு அளித்த அறிக்கையில் “தேசிய இனங்களுக்குத் தங்கு தடையற்ற சுயநிர்ணய உரிமை” (Unfiltered Self-determination) வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.

1947ஆம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடைபெற்ற அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுத்தீர்மானதில் பின்வறுமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

“தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் வாயிலாக காங்கிரசு கட்சி அதே குற்றத்தை இன்று செய்து வருகிறது. மேலாண்மை செலுத்துகிற முதலாளிவர்க்கத்தின் நலன் கருதி காங்கிரசு இவ்வாறு செய்கிறது. காங்கிரசின் இந்தப்போக்கு தேசிய இனங்களுக்கிடையே பகை உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும். எனவே இந்த விசயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைமை தந்தால் ஒழிய இந்த அபாயத்தைப் போக்க இயலாது”. என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே பொதுவுடைமக்கட்சி இனவிடுதலையை ஏற்கிறது என்பது உண்மை. உண்மையை வலைப்பதிவர் சந்திப்பு புரிந்து கொள்ளவேண்டும்

ஐ.நா சபை கூட உலகெங்கும் உள்ள தேசிய இனங்களுக்குத் தன்னுரிமை உண்டு என்பதை அங்கிகரித்துள்ளது. அதைதான் நாம் வலியுறுத்துகிறோம்.

தன்னுரிமை (Ritht to self detiermination.) ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை ஆகும். தமிழ் தேசிய இனம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களும் தன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தன்னுரிமை பெற்ற தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த ஒன்றியமாக இந்தியா விளங்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.

*************
உதவிய நூல்கள்:
1. தன்னுரிமையா? மாநில சுயாச்சியா?- (தமிழர் தேசிய இயக்கம்).
2.பேருருவம் கொள்ளும் தமிழ்த்தேசியம்- (தமிழர் தேசிய இயக்கம்.)
3. அன்னம் சிற்றேடு ஏடு 7, 1994
4. தமிழ் உரிமை மிட்போம், (தமிழ் உரிமைக்கூட்டமைப்பு திண்டிவனம்.)
5. தன்னுரிமைத் தமிழ்தேச எழுச்சி முரசு – (மார்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சி)

Saturday, May 20, 2006

2060 - தேர்தலை நடத்தப்போவது யார்?

தேர்தல் 2060 பற்றி சொல்ல வேண்டுமானால், நான் 54 ஆண்டுகள் முன்னோக்கி சிந்திக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் நாம் கடந்து வந்த பாதைகளைப் பற்றி 54 ஆண்டுகளுக்கு மேல் பின்னோக்கியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

1952 ஆம் ஆண்டு நிலையுடன் அரசியல், பொருளாதார, சமூக மாற்றம், முன்னேற்றம் இவைகளுடன் அறிவியல் வளர்ச்சி சேர்ந்ததுதான் 2006.

அதேபோல,2006 ஆம் ஆண்டு நிலையுடன் அரசியல், பொருளாதார, சமூக மாற்றம், முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி மற்றும் உலக மயமாக்கலினால் ஏற்பட இருக்கும் பிற மாற்றங்கள் சேர்ந்தது தான் 2060.

என்பது தான் எனது சுருக்க குறியீடு!

இந்த குறியீட்டை அடிப்படையாக வைத்து கடந்த கால தேர்தல்கள் எந்த அளவு இந்த தேர்தலில் ஒத்துப்போகின்றன என்பதையும், எதிர்காலத்தில் எந்த அளவு மாறுபடும் என்பதையும் நாம் கணிக்க முடியும். எனக்கருதுகிறேன்.

1952 முதல் 2006 வரை தேர்தல் அரசியலை திரும்பிப் பார்ப்போம்.

அரிசியும் அரசியலும்

1967ஆம் ஆண்டு தேர்தலில் ரூபாய்க்கு 3 படி அளிப்போம் என்றார் அண்ணா,எப்படி முடியும் என்று கேட்ட போது, 3 படி லட்சியம், 1 படி நிச்சயம் என்றார். சென்னையிலும், கோவையிலும் சிலகாலம் ஒருகிலோ ஒரு ரூபாய் என சிலகாலம் வழங்கப்பட்டது. ஆனால் தொடர முடியவில்லை.

ஆனால், 2006 தேர்தலில் 10 கிலோ, 15 கிலோ, இலவசம் எனவும், 2 ருபாய்க்கு ஒரு கிலோ எனவும் அரிசி அரசியல் நடைபெற்றது. இந்த அரசு இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடர்ந்து தருமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

திரைப்படமும் அரசியலும்

தமிழகத்தில் திரைப்பட அரசியல் தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 1952 பராசக்தி படத்தில் என். எஸ் .கிருஷ்ணன் தினா............. முனா.......... கானா.......... என்று தொடங்கும் பாடலில் தி.மு.க விற்கு ஆதரவாக பெரியார், அண்ணா, தி. மு. க பற்றி மறைமுகமாக பிரச்சாரம் செய்தார்.

திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிவந்த கருணாநிதி அண்ணா மறைவிற்கு பிறகு தி.மு.க இயக்கத்தை எதிரிகளிடமிருந்து தனது சாதுரியமான நாவன்மையால் பாதுகாத்தார். ஆனால், தி.மு.க எம்.ஜி.ஆர் தலைமையில் பிளவுபட்ட போது, தி.மு.க பின்னடைவை சந்தித்தது. எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களால் மக்களிடம் செல்வாக்கு படைத்த ஒருவராக திகழ்ந்தார். அவரது செல்வாக்கு இன்றுவரை அந்த கட்சிக்கு பலமாகவே உள்ளது.

அவருக்கு பின் அந்த கட்சியை அவருடன் படத்தில் நடித்து வந்த செயலலிதா கைப்பற்றினார் இன்று விசயகாந்த் சமீபத்தில் கட்சி தொடங்கி கணிசமான வாக்குகளை வாங்கி இருப்பதுடன் இந்த தேர்தலில் திரைப்பட நட்சத்திரங்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

எனவே, திரைப்படமும் அரசியலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத் தேர்தலில் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.

சமூக பொருளாதார மாற்றங்கள்

அன்றைய மக்கள் தகவல் தொடர்பு வசதியில் மிகவும் பின்தங்கியிருந்தனர் அதனால் உலக செய்திகளை அவர்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன.

ஆனால், இன்றோ அவ்வப்போது, நேரடியாக உலக விசயங்களை தொலைக்காட்சிகள், தகவல் தொடர்பு வசதிகள் மூலம் வழங்கி மிகப்பெரிய மாற்றத்தினை உருவாக்கியுள்ளது. இவை மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான அடிப்படைகளையும் நமக்கு வழங்கியிருக்கிறது.

தஞ்சைப்பகுதி காவிரி நீரையும் பிற பகுதிகள் அந்தந்த பகுதி நதிகளை நம்பி பயிர்செய்யும் நிலப்பரப்பாக இருந்ததால் பெருமளவு மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். காவிரி நீர் வராமையால் பலர் நகர்புறம் நோக்கி கட்டுமானத்தொழில் உள்பட பலதொழில் செய்ய நாடோடிகள் போல் ஆகியுள்ளனர்.

அறிவியல் வளர்ச்சி

அன்றைய தேர்தலில் வாக்கு சீட்டுகள்தான் பயன்படுத்தப்பட்டன, முடிவு அறிவிக்க 3 நாட்கள்வரை ஆகும். ஆனால் இன்றோ அறிவியல் வளர்ச்சியினால், மின்னனுவியல் இயந்திரங்கள் பயன் படுத்தி சிலமணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது.

பழைய காலங்களில் நேரடி தேர்தல் பிரச்சாரம் இருந்த்து. ஆனால், 1984 ஆம் ஆண்டு எம்.ஜிஆர் அமெரிக்க மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட போது அவர் மருத்துவமனையில் படிப்பது, உணவு அருந்துவது உள்ளிட்ட காட்சிகளை வீடியோ காட்சி காட்டப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார்.

ஆனால் இந்த தேர்தலில் நேரடி ஒலிபரப்பாக பிரச்சார தளத்திலிருந்து உலகம் முழுதும் ஒளிபரப்பப்பட்டது. .இந்த பிரச்சாரம் அக்கட்சிக்கு வெற்றி தேடித்தந்த முக்கிய காரணங்களில் ஒன்று.

அத்துடன் கைத்தொலை பேசியில் குறுந்தகவல் மூலமும் தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதுதான் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தேர்தல் அரசியலின் சுருக்க வரலாறு.இந்த சுருக்கவரலாற்றை வைத்துக் கொண்டு தான் நாம் வருங்கால அரசியலின் போக்கை வரையறுக்க முடியும்.

இனி தேர்தல் 2060 எப்படி இருக்கும் என்று கணிப்போம்.

தேர்தல் 2060

அரிசியும் அரசியலும் - தேர்தல் 2060

54 ஆண்டுகள் கழித்தும் அரிசி அரசியல் இருக்காது என்று நான் உறுதி சொல்வதற் கில்லை. ஏனெனில், அமெரிக்க நிறுவனம் ஒன்று தென்னிந்தியா இன்னும் 40 ஆண்டுகளில் பாலைவனமாகும் என்று ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது.

அதற்கேற்றார் போல், நம் நிலத்தடி நீர் குறைந்து வருவதோடு அரசுகளின் அக்கரையின்மையும் நமக்கு தெரிகிறது, நிலம் குளம், குட்டை, வாய்க்கால், ஏரிகள் மூடப்பட்டு வீடுகளாக்கப் பட்டுள்ளன. விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளன. காவிரி நீர் கானல் நீரோ! என்ற கேள்வி இன்னும் நிலை பெற்றுள்ளது. இடைக்கால தீர்ப்பு நிரந்தரத் தீர்ப்பானாலும், வருங்கால அரசுகள் தொடர்ந்து நீர் வழங்குமா? என்பது கேள்விக் குறிதான்.

எனவே, காவிரி நீர் கேள்விக்குறியதாகவே உள்ளதால் தேர்தல் 2060-இல் அரிசி அரசியல் இருப்பது தவிர்க்க முடியாமல் போகலாம்.

அரிசி இல்லை யென்றாலும் உணவு பற்றிய அரசியல் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதைக் காண முடிகிறது.

திரைப்படமும் அரசியலும் - தேர்தல் 2060

தமிழக வரலாற்றில் திரைப்பட அரசியலின் பங்கு மிக அதிகம் தான். இவ்வளவு முன்னேறிய சமூக அமைப்பில் நடிகர் “விஜய்” ஐ ஏன் பிடிக்கும் என்று கேட்டபோது அவர் பாய்ந்து பாய்ந்து சண்டைபோடுகிறார். அதனால் அவரை பிடிக்கும் என்கிறான் ஒரு ரசிகன். அதன் பின்னால் கயிற்றை கட்டி இழுக்கும் தொழில் நுட்ப ஏமாற்று வேலை உள்ளதை புரிந்து கொள்ள மறுக்கும் இளைஞனைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும் என்கிறார் இயக்குனர் சீமான்.

இப்படிப்பட்ட அப்பாவிகள் 2060-இல் இருக்கமாட்டார்கள் என நான் உறுதி அளிக்க முடியாது. எனவே, திரைப்பட அரசியல் 2060 தேர்தலிலும் திரைப்பட ஆதிக்கமில்லாத அரசியல் அமையும் வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ளது.

அறிவியல் வளர்ச்சியும் தேர்தல் 2060 - ம்

மிகவும் முன்னேறிய தொழில் நுட்பம் பயன் படுத்தப்படும். வாக்குச்சாவடிக்கு வராமலே வாக்களிக்கும் தேர்தல் முறை வரலாம். எங்கிருந்தாலும் அவர் வசிக்கும் பகுதி வேட்பாளருக்கு இணைய வழி வாக்களிப்பு முறை அல்லது அதைவிட முன்னேறிய வழிகளில் தேர்தல் நடைபெறலாம்.

இப்போதுள்ள வங்கி அட்டை (ஏ.டி.எம்) மாதிரி வாக்காளர் குறியீட்டு அட்டை வழங்கப்படலாம். கணிப்பொறித்திரை முன் வந்து நின்றால், கணிப்பொறி தானாக முகம் பார்த்து அங்கிகரித்து வாக்களிக்க அனுமதிக்கலாம். மனித உபயோகம் குறைக்கப்படலாம்.

அல்லது இணைய வழி தேர்தலோ, மின்னனு முறைத்தேர்தல், கைத் தொலைபேசி மூலம் வாக்களிக்கும் வசதியும் ஏற்படலாம். அல்லது இவைகள் எல்லாம் அடங்கிய பல்நோக்கு முறையில் கூட தேர்தல் நடத்தப்படலாம்.

2006 தேர்தலின் சிறப்புக் கூறுகளும் 2060 தேர்தலும்

முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பது தான் வழக்கம். ஆனால் இப்போது மத்தியிலும் மாநிலத்திலுமே கூட்டணி ஆட்சிகள் நடைபெறுகிறது.

கூட்டணிகட்சிகள் விலகினால் ஆட்சிகள் கவிழும் நிச்சயமற்ற நிலை இப்போது உள்ளது. பாராளுமன்றம் நிலையற்ற நிலையில் இருக்கும் அதே வேளையில் பாராளுமன்ற அமைப்பு முறை வலுப்பெற்று வருகிறது. மக்கள் வாக்களிக்கும் விகிதம் மாறுபட்டுள்ளது. பாராளுமன்ற அமைப்புமுறையில் நம்பிக்கை ஏற்படும் வகையில் விதிமுறைகள் அதிகமாகியுள்ளது.

இப்போது தேர்தல் நடைபெற்றால் ஐந்து ஆண்டுகள் ஆட்சியாளர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. எனவே தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை திருப்பி அழைக்கும் உரிமையை இப்போது சிலர் கோரிவருகின்றனர்.

அவ்வாறான உரிமை பிற்காலத்தில் வழங்கபட்டால் தேர்தல் 2060 ஆண்டு ஆட்சியில் நிச்சயமற்ற போக்கு மேலும் அதிகமாகும்.

அரசியலில் ஊழல் நேர்மையின்மை, நம்பிக்கை இழக்கச் செய்தாலும் அரசின் நிறுவனமய மாக்கலின் மூலம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.தேர்தல் நடப்பதில் பணம் வழங்குதல், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றத்தடை போன்ற கட்டுப்பாடுகள் விதித்தல் என்பது நிறுவனமயமாக்கலின் தன்மையேயாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற சட்டமன்ற அமைப்புகளைவிட நீதித்துறை, தேர்தல் துறை போன்றவை தம்மை வலுவாக அமைத்துக் கொள்ளும் போக்கு வளர்ந்துள்ளது.

இதுபோன்ற நிறுவனமயமாக்கல் என்பது ஒரு ஆபத்தான போக்காகும். ஏனெனில் இந்திய இரையாண்மைத் தொடர்பான வழக்கொன்று நீதிமன்றத்தில் வருமானால் அந்த நீதிமன்ற தலைமை நிதிபதியை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி இரையாண்மையை கேலிக்கூத்தாக்க முடியும்.

எனவே, அதிகாரக்குவிப்பின் வடிவமான நிறுவனமயமாக்கல் என்பது கைவிடப் படவேண்டும். ஆனால் தேர்தல் 2060 -இல் நிறுவனமயமாக்கல் அதிக்கப்படும் வாய்ப்பே அதிகம் உள்ளது. இத்தகைய மாற்றம் உலகமயமாக்கல் சூழலில் இந்தியாவிற்கான பாதுகாப்பற்ற தன்மையை அதிகரிக்கும் என்றே சொல்லமுடியும்.

தேர்தல்பற்றிய விழிப்புணவுகள் இப்போது மாறிவருகின்றன. இதற்கு முன் எப்போது இல்லாத வகையில் தேர்தலைப் புறக்கணிப்பவர்கள் 49 ஓ சட்டப்பிரிவு பற்றிய விழிப்புனர்வு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் துறையானது இதுவரை தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதை சரிபடுத்துவது பற்றித்தான் அதிகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் தேர்தல் முறைகளில் உள்ள குறைபாடுகளை களைவதில் அக்கரை காட்டவில்லை.

நான்குக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேச்சைகள் உள்ளிட்டவர்கள் போட்டியிட்டால் தேர்தல் முடிவுகள் சனநாயகப்பூர்வமாக இருப்பதில்லை. எனது முந்தய பதிவு
தேர்தல்முறை ஜனநாயகம் இதில் தேர்தல் முறையிலுள்ள குறைபாடுகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் சனநாயகத்தின் தூண்கள் என்று கருதப்பட்ட பத்திரிக்கைகள். தொழில் முறை நிறுவனங்களாகியுள்ளன. தாம் விரும்பும் கட்சிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு அல்லது வேறுவகையான ஆதாயங்களை பெற்றுக் கொண்டு தனது சனநாயக்கடமைகளை ஆற்றும் பணியிலிருந்து தம்மை தவிர்த்துக்கொண்டன. இந்த நிலைமை 2060 ஆண்டு தேர்தலில் மிகவும் வலுவான நிலைமைகளில் காணப்படும் நிலையில் உள்ளது.

உலகமயமாக்கல் சூழலில் இந்தியா

உலகமயமாக்கல் பின்னணியில் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. நதிகள் தனியார் மயமாக்கப்பட்டுவருகிறது. இப்போது விவசாயத்தில் சிரமப்படும் விவசாயிகள் மேலும் துன்பம் எதிர்கொள்ளலாம். இது தேர்தலில் எதிரொலிக்கும். சமூக மாற்றம் உலக அளவிலான கலாச்சார மாற்றம் இருக்கும். உலகில் எப்பகுதியும் உலகமய பின்னணியின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.

இப்போது அன்னிய மூலதனத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. அவ்வாறு தொடங்கினால் அதற்கான இலாபம் முழுக்க வெளிநாடுகளுக்கே செல்லும், எனவே இந்தியவில் மூலதன பற்றாக்குறை ஏற்படும்.

2005-2006 ஆம் ஆண்டு மட்டும் உள்நாட்டு வெளிநாட்டு கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி மட்டும் ரூ; 2, 09 ,904 கோடி ( தினமணி 17-05-2006 ப. சிதம்பரம் அறிக்கை) ஆக உள்ளது.

இவ்வளவு பெரிய தொகை மேலும், கடன் வட்டி என மிகப்பெரிய கடன் தொகையாக மாறிப்போய் இருக்கும். இவ்வளவு கடன் வாங்கும் இந்திய அரசு அதனை அடைப்பதற்கான திட்டம் எதையும் வைத்திருப்பதாக தெரியவில்லை. அல்லது நீண்டகாலப் போக்கிலேனும் அதற்கான திட்டம் வகுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

என்வே, இன்னும் பெரிய கடன்கார நாடாக இந்தியா மாற இருப்பதால், கடனை அடைக்க முடியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். பின்னர் சமாளிக்கலாம் என்று நீங்கள் சொன்னால், இப்போதே அப்படி சமாளிக்கலாம் இல்லையா?. இப்போது, உலகவங்கி, சர்வதேச செலாவணி நிதியத்தின் ஆணையின் பேரில் தான் திட்டம் போடுகிறது இந்திய அரசு.

பிற்காலத்தில் அமெரிக்க கைப்பாவையான உலகவங்கி உத்தரவுப்படி இந்திய அரசு ஒரு காலணிய அரசாகவோ அல்லது இதைவிட முன்னேறிய அரைக்காலணிய அல்லது காலணிய நாடாக இந்தியா மாறி வரும் சூழல் வளர்ந்து வருகிறது.

இந்தியா முன்னர் இங்கிலாந்து காலணியானது, போல, இப்போது அமெரிக்க காலணி நாடாகும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை. அமெரிக்க போர் உளவியல் நமக்கு அளிக்கும் பாடம் இவை.

அப்படி நடந்தால், 2060 தேர்தலை இந்தியாவின் அமெரிக்க காலணி அரசு அல்லது அதன் கைப்பாவை அரசாக இந்திய அரசு தான் இங்கு தேர்தல் நடத்தும் என்றும் நாம் கருதலாம்.

Saturday, May 13, 2006

மார்க்சியம்- வலைப்பதிவர் கேள்வியும் பதில்களும் பகுதி-3

மார்க்சியம் அறிவியல் பூர்வமானதா?

முந்தைய விவாதங்களின் தொடர்ச்சியாக இது வெளிவருகிறது.
கார்ல் பெப்பர் அவர்களின் விவாதம் தொடர்பாக சோதிப் பிரகாசம் என்பவர் எழுதியுள்ள தொடர்ச்சிகளை கீழே தொடுப்பில் இணைத்துள்ளேன்.

ஒரே பதிவில் அதிக இணைப்பு இருந்தால் படிப்பதில் அதிக சிரமம் இருக்கும் என்பதால் இரண்டு பகுதிகளாக அவை பிரிக்கப்பட்டுள்ளது.

சோதிப் பிரகாசம் அவர்களின் விவாதங்களின் இரண்டாவது பாகமாக அடுத்த நான்கு பகுதிகளுக்கு இங்கு இணைப்பு சொடுக்கப்பட்டுள்ளது.

கார்ல் பாப்பரின் வெங்காயம்-5
கார்ல் பாப்பரின் வெங்காயம்-6
கார்ல் பாப்பரின் வெங்காயம்-7
கார்ல் பாப்பரின் வெங்காயம்-8

இந்த விவாதம் வலைப்பதிவர்க்ளுக்கு பதிலாக அமையும் என கருதுகிறேன்.

என்னுடைய வேலையை மிகவும் இலகுவாக்கிய திரு. சோதிப் பிரகாசம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சியம்- வலைப்பதிவர் கேள்வியும் பதில்களும் பகுதி-2

மார்க்சியம் அறிவியல் பூர்வமானதா?

இப்படிக்கேட்டால் அல்ல என எளிதில் சொல்லி விடுகிறார்கள் சில வலைப்பதிவர்கள்.

மார்க்சியம் அறிவியல் பூர்வமானதா? என விவாதம் தொடங்கியதால் “மார்க்சியம்- வலைப்பதிவர்களின் கேள்வியும் பதில்களும்“ என்ற பெயரில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அந்த விவாதம் இன்னும் முற்று பெற்றதாக தெரியவில்லை.

இது பற்றிய முந்தைய விவாதங்களான மார்க்சியம்- வலைப்பதிவர்களின் கேள்வியும் பதில்களும் பார்த்து விட்டு இந்த பகுதியை தொடர்ந்தால் அதன் முழுமை தங்களுக்கு விளங்கும்.

இந்த விவாதங்களுக்கு பதிலை எழுத வேண்டும் என்று நான் முனைந்த நேரத்தில் “ திண்ணை“ இணைய தளத்தில் ஏற்கனவே இதற்கான விவாதம் உள்ளதால் புதிதாக பதில் எழுதத் தேவையில்லை. என்று நான் முடிவுக்கு வந்துள்ளேன்.

கார்ல் பாப்பரின் விவாதத்தை ஒரு வெங்காயம் என்று அந்த வலைத்தளம் விவரித்துள்ளது. அதன் விவாதங்களை திண்ணை“ இணைய தளத்தில் சோதிப் பிரகாசம் என்பவர் எழுதியுள்ளார்.

கார்ல் பாப்பரின் விவாதக் கேள்விகள் முதலில் இங்கு தருகிறேன்.
விஞ்ஞானக் கோட்பாடு- தவறென நிரூபிக்கும் தன்மை -

கார்ல் பொப்பர் Science as Falsification by Karl R. Popper

ஐன்ஸ்டானின் தேற்றம் மிகவும் வித்தியாசமானது. உதாரணமாக ஐன்ஸ்டான் கணித்ததும், எட்டிங்டன் நிரூபித்ததையும் எடுத்துக்கொள்ளுங்கள். பெரும் எடையுள்ள பொருட்கள் (உதாரணமாக சூரியன்), எடையுள்ள பொருட்களை ஈர்ப்பது போலவே, ஒளியையும் ஈர்க்கும் என்று அவரது புவியீர்ப்பு சக்தி பற்றிய பொதுத்தேற்றம் கணித்தது. இதன் அடிப்படையில் தொலைதூரத்திலிருக்கும் ஒரு நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி சூரியனுக்கு அருகில் வரும்போது அதன் ஈர்ப்பு சக்தியால் தன் நேர்க்கோட்டுப் பாதையிலிருந்து விலகி வரும் என்றும் அதன் அளவு எவ்வளவு இருக்கும் என்பதையும் கணிக்க இயலும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சூரியனுக்கு நேர் பின்னே இருக்கக்கூடிய ஒரு நட்சத்திரம் சற்று நகர்ந்து இருப்பது போல காணப்படும் என்று சொல்லலாம். சூரியனின் ஏராளமான ஒளி இருக்கும் போது அவ்வாறு ஒரு நட்சத்திரம் 'நகர்ந்து ' இருப்பது தெரியாது. ஆனால், சூரிய கிரகணத்தின் போது எடுக்கும் ஒளிப்படத்தின் மூலம் அதனைக் காணலாம். அதே இடத்தை இரவில் எடுத்து நட்சத்திரங்கள் எந்த அளவு நகர்ந்து இருக்கின்றன என்பதை வைத்து, கணிக்கப்பட்ட அளவையும் சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட நட்சத்திரத்தின் இட நகர்வின் அளவையும் ஒப்பிட்டு சரி பார்க்கலாம்.

இந்த இடத்தில் மிகவும் ஆச்சரியப்படத்தகுந்த விஷயம் இப்படிப்பட்ட கணிப்பை வெளியிடுவதற்கான தைரியமும் துணிவும். கணிக்கப்பட்ட விளைவு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இல்லை என்றால், அந்த தேற்றம் சுத்தமாக மறுதலிக்கப்பட்டது, தவறென்று நிரூபிக்கப்பட்டது. பரிசோதனையில் காணப்படக்கூடிய விஷயங்களும் தேற்றத்தில் கிடைக்கும் விஷயங்களும் பொருத்தமற்றவையாக இருந்தால், ... check and translate ...

1919-20 ஆண்டு குளிர்காலத்தின் போது, நான் அடைந்த முடிவுகளை கீழ்வருமாறு எழுதுகிறேன்

1. It is easy to obtain confirmations, or verifications, for nearly every theory - if we look for confirmations.

1. நாம் ஒரு தேற்றத்தின் நிரூபணங்களை மட்டுமே தேடிச்சென்றால், எப்படிப்பட்ட ஒரு தேற்றத்துக்கும் நிரூபணங்களைக் கண்டறிவது எளியது.

2. Confirmations should count only if they are the result of risky predictions; that is to say, if, unenlightened by the theory in question, we should have expected an event which was incompatible with the theory - an event which would have refuted the theory.

2. நிரூபணங்களை எப்போது நிச்சயமாக எடுத்துக்கொள்ளவேண்டுமென்றால், அவை மிகவும் துணிச்சலான தைரியமான கணிப்புகளாக இருந்தால் மட்டுமே. அதாவது சாதாரணமாக பொதுப்புத்தியில் ஒரு தேற்றம் சொல்வதற்கு நேர்மாறான ஒரு விஷயத்தை நாம் எதிர்பார்க்க வேண்டும்,அந்த தேற்றம் பொய்யென ஆக்கப்பட்டுவிடக்கூடிய நிகழ்வை நோக்கி

3. Every 'good ' scientific theory is a prohibition: it forbids certain things to happen. The more a theory forbids, the better it is.

3. எந்த ஒரு அறிவியல் தேற்றமும் இது நடக்ககூடாது என்பதில் தெளிவாக உள்ளது. இது ஒரு சில விஷயங்கள் நடப்பதை 'தடை ' செய்கிறது. (அதாவது இந்த இந்த விஷயங்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடக்காது என்று கூறுகிறது) எவ்வளவு அதிகமாக தடை செய்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. ( அதாவது அந்தத் தேற்றத்தின் படி எதெல்லாம் நடக்காது என்பதை உறுதி செய்கிறதோ, அந்த அளவு அது சிறந்த தேற்றம் ஆகும்.)

4. A theory which is not refutable by any conceivable event is non-scientific. Irrefutability is not a virtue of a theory (as people often think) but a vice.

4. எந்த தேற்றத்தை பொய்யென நிரூபிக்க முடியாதோ, அது அறிவியல் தேற்றம் அல்ல. பொய்யென நிரூபிக்க முடியாதது ஒரு தேற்றத்தின் நல்ல குணாம்சம் அல்ல, அது தீய குணாம்சம்.

5. Every genuine test of a theory is an attempt to falsify it, or to refute it. Testability is falsifiability; but there are degrees of testability: some theories are more testable, more exposed to refutation, than others; they take, as it were, greater risks.

5. தேற்றத்தின் உண்மையான பரிசோதனை அந்த தேற்றத்தை பொய்யென நிரூபிக்கும் முயற்சி, அல்லது அதனை தவறு என்று காட்டும் முயற்சியே. ஒரு தேற்றத்தை பரிசோதனை செய்யும் குணம் அதனை பொய்யென நிரூபிக்க முயலும் குணாம்சம். சில தேற்றங்கள், மற்ற தேற்றங்களை விட, பொய்யென நிரூபிக்க எளிதானவை.

6. Confirming evidence should not count except when it is the result of a genuine test of the theory; and this means that it can be presented as a serious but unsuccessful attempt to falsify the theory. (I now speak in such cases of 'corroborating evidence. ')

6. ஒரு தேற்றத்தை நிரூபிக்கும் தடயங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அவை அந்த தேற்றத்தை உண்மையிலேயே பரிசோதனை செய்யும் தடயங்களாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை எடுத்துக்கொள்ளப் படவேண்டும். இப்போது, அவை இந்த தேற்றத்தை பொய்யென நிரூபிக்கும் முயற்சியின் தோல்வியாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

7. Some genuinely testable theories, when found to be false, are still upheld by their admirers - for example by introducing ad hoc some auxiliary assumption, or by reinterpreting the theory ad hoc in such a way that it escapes refutation. Such a procedure is always possible, but it rescues the theory from refutation only at the price of destroying, or at least lowering, its scientific status. (I later described such a rescuing operation as a 'conventionalist twist ' or a 'conventionalist stratagem. ')

7. சில பரிசோதனை செய்யத்தக்க தேற்றங்கள், பொய்யென காணப்படும்போது, அந்த தேற்றத்தின் ஆதரவாளர்களால் அதனை தூக்கிப்பிடிப்பது நடக்கிறது. உதாரணமாக, இன்னும் சில உபரி அனுமானங்களை அதில் நுழைத்து, அல்லது அதனை மறுப்பதற்கான வழிகளை அடைத்துவிடும் வழியில் அதனை மறு வாசிப்புக்கு உட்படுத்துவது ஆகிய முறைகளில் இது நடக்கலாம். இப்படிப்பட்ட முறைகள் சாத்தியமென்றாலும், அது ஒரு தேற்றத்தை பொய்யென காட்டுவதிலிருந்து தப்பிக்க வைப்பது பெரும்பாலும் அந்த தேற்றத்தை அழிப்பதிலேயே முடிகிறது. அல்லது அந்த தேற்றத்தை அறிவியல் தேற்றம் என்ற இடத்திலிருந்து இறக்குவதிலேயே நடக்கிறது.
One can sum up all this by saying that the criterion of the scientific status of a theory is its falsifiability, or refutability, or testability.

மேற்கண்டவைகளிலிருந்து சுருக்கிச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு தேற்றத்தை அறிவியற்பூர்வமானது என்று சொல்லவேண்டுமென்றால், அதனை பொய்யென காட்டுவதற்கான சாத்தியம் இருக்க வேண்டும். அதாவது அதைச் சோதனைக்குட் படுத்தக்கூடிய சாத்தியம், அதை மறுக்கக் கூடிய சாத்தியம் இருக்க வேண்டும்.

2. இதைச் சில உதாரணங்களால் விளக்கலாம். ஐன்ஸ்டானின் புவி ஈர்ப்புக் கொள்கை தவறன நிரூபிக்கக் கூடிய சாத்தியத்தை உள்ளடக்கி இருந்தது. நம் அளவுகோல்கள் முழுமையாய் அந்தக் கோட்பாட்டை நிரூபிக்கப் போதாதவையாய் இருந்தபோதிலும், அந்தக் கோட்பாட்டை தவறென்று நிரூபிக்கும் சாத்தியம் இருந்தது.

சோதிடம் இந்த சோதனையைப் பூர்த்தி செய்ய இயலாது. சோதிடர்கள் தம்முடைய நிரூபணங்களில் மூழ்கிப் போய் , திசை தவறியதால், தவறெனக் காட்டும் நிரூபணங்களில் சிரத்தை கொள்வதில்லை. தம்முடைய புரிதல்களையும், ஆருடங்களையும் மிக மேம்போக்காகவும், குறிப்பானதல்லாமல் முன்வைத்ததனால், தவறென நிரூபணம் வருகையில், அதை விளக்கலாயினர். தவறென நிரூபணம் ஆவதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள தேற்றங்களை தவறென நிரூபிப்பதற்கான அடிப்படையை இல்லாமல் செய்து , தெளிவற்று இயங்குகின்றனர். இப்படி தெளிவற்ற நிலையில், நிரூபணங்கள் சுலபம் ஆகிவிடுகின்றன.

நான் தவறென நிரூபிக்கும் சாத்தியக் கூறு பற்றிப் பேசியது, அர்த்தமுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்தது உண்மை , ஒப்புக்கொள்ளத்தக்கது இவை பற்றியதல்ல. எந்த வாசகங்கள் அல்லது கோட்பாடுகள் விஞ்ஞான பூர்வமானது, எவை விஞ்ஞான பூர்வமற்றது என்பதைப் பற்றியது. எங்கே இவை இரண்டிற்கும் இடையே பகுப்புக் கோடு இடுவது என்பது பற்றியது. எது விஞ்ஞானக் கோட்பாடு, எது போலி விஞ்ஞானம், அப்பாலைத் தத்துவம், மதத்தத்துவம் என்பது பற்றியது. 1928-1929 வாக்கில் இதை நான் 'பகுத்துக் காண்பதில் உள்ள பிரசினை ' (problem of demarcation) என்று இதைக் குறிப்பிடலானேன். தவறென நிரூபிக்கும் தன்மையை நான் விஞ்ஞானக்கோட்பாடுகளுக்கு ஒரு உரைகல் என்பேன்.
http://www.freethought-web.org/ctrl/popper_falsification.html

இதற்கான பதில் வழங்கும் திண்ணை இணைய தளத்திலிருந்து சில செய்திகளை மட்டும் அப்படியே இங்கு எடுத்து வெளியிடுகிறேன்.

கார்ல் பாப்பரின் வெங்காயம்

முற்கூற்றுகளின் நிருபணம்
சோதிப் பிரகாசம்

மகளுக்கு மணம் செய்து வைப்பது பெற்றவர்களின் கடமை மட்டும் அல்ல, தங்கள் சுமையினை அவர்கள் குறைத்துக் கொள்ளுகின்ற ஒரு வழியும் ஆகும். தங்கள் மகள்களின் திரு மணத்தினைப் பற்றி இப்படித்தான் நம் ஊர்ப் பெற்றோர்கள் நினைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது.
இந்த முயற்சியின் தொடர்ச்சியாகத் தங்கள் சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டு வருகின்ற அவர்கள், கோளியக் காரர்களையும் அணுகுகிறார்கள். வருகின்ற தை மாதத்தில் அவர்களின் மகளுக்குத் திரு மணம் நடந்தே தீரும் என்று கோளியக் காரர்களோ வருவது-உரைக்கிறார்கள்.

கோளியர்களது முற்கூற்றின் படியே அவர்கள்தம் மகளுக்குத் திரு மணம் நடந்து விடுகிறது என்று நாம் வைத்துக் கொள்வோம்.
கார்ல் பாப்பருக்கு உடனே கோவம் வந்து விடுகிறது; தங்கள் முற்கூற்றுகளைப் பரி சோதித்துப் பார்க்கின்ற இயன்மையினை அவர்கள் அழித்து விட்டார்கள் என்று ஓங்கிக் குரல் கொடுத்து அவர்களை அவர் பழிக்கிறார்; நம் ஊர்ப் 'பகுத்தறிவுப் பகலவர்களும் ' அவருக்குக் கை தட்டுகிறார்கள்.

இங்கே, என்னத்தை அழித்து விட்டார்கள் கோளியர்கள் ? அழிப்பதற்கு அப்படி இதில் என்ன இருக்கிறது ?

ஒன்றும் புரிய வில்லை நமக்கு!

இப் பொழுது, கோளியக் காரர்களின் கணிப்பின் படி நமது பெற்றோர்களின் மகளுக்குத் திருமணம் நடை பெறாமல் போய் விடுகிறது என்று நாம் வைத்துக் கொள்வோம்.

கார்ல் பாப்பரின் மறு-வினை எப்படி இருந்திடக் கூடும் என்று நாம் எதிர் பார்ப்போம் ?

கார்ல் பாப்பர் மகிழ்ச்சி அடைவார் என்றுதானே! கோளியக் காரர்களை அவர் பழித்துத் தள்ளி விடுவார் என்றுதானே!

ஆனால், அதுதான் இல்லை!

கார்ல் பாப்பர் மகிழ்ச்சி அடைவார் என்பது உண்மைதான்; ஆனால், அவர்களை அவர் பழித்திட மாட்டார்; மாறாக, உண்மையான விஞ்ஞானிகள் என்று அவர்களை அவர் பாராட்டுவார்----

4. A theory which is not refutable by any conceivable event is non-scientific. Irrefutability is not a virtue of a theory (as people often think) but a vice என்று!
அதாவது, a theory is scientific only if it is refutable (and is refuted!) என்று!

பிழையாக்கப் படுகின்ற பொழுதுதான், விஞ்ஞான முறையான ஒரு தேற்றத்தின் பாற் பட்டதாக, ஒரு முற் கூற்றினை நாம் கருதிட வேண்டும் என்றால், பலிக்காமல் போய் விட்ட காரணத்தினால்தான், நமது கோளியக் காரரின் கணிப்பு நிருபிக்கப் பட்டு இருக்கிறது என்று இங்கே பொருள் ஆகி விட வில்லையா ?

ஆனால், இப்படியே போனால் நமது கோளியக் காரர்களின் தொழில் படுத்து விடும் என்பதுதான் உண்மை. எனினும், அவர்களது நோக்கம் நிறைவேறி விட்டது; தங்கள் கட்டணத்தை அவர்கள் பெற்றுக் கொண்டும் விட்டார்கள்.
அதே நேரத்தில், இவ் அளவு எளிமையாகக் கார்ல் பாப்பரை நாம் புரிந்து கொள்ள முடியாது என்பதில் ஐயம் இல்லை. ஏனென்றால், அவர் கூறிடத் தவற வில்லை----If observation shows that the predicted effect is definitely absent, then the theory is simply refuted என்று! அதாவது, ஒரு தேற்றத்தினால் முற்கூறப் பட்ட விளைவு ஏற்பட்டிட வில்லை என்கின்ற பொழுதுதான், அத் தேற்றம் பிழை படுத்தப் பட்டு நிற்கிறது என்று!

கார்ல் பாப்பரின் சிக்கல்

A theory which is not refutable by any conceivable event is non-scientific என்று கூறுகின்ற கார்ல் பாப்பர், If observation shows that the predicted effect is definitely absent, then the theory is simply refuted என்றும் கூறுகிறாரே, ஏன் ?

அதாவது, a theory is scientic only if it is refutable என்று கூறுகின்ற கார்ல் பாப்பர், a theory is proved only when the event predicted by it takes place என்றும் கூறுகிறாரே, ஏன் ?

ஒன்றில், 'பிழையாக்கப் பட முடியாத எந்த ஒரு தேற்றமும் விஞ்ஞான முறையானது அல்ல ' என்னும் தமது கூற்றில் நிலைத்து அவர் நின்றிட வேண்டும்; அல்லது, 'பிழையாக்கப் பட முடியாத ஒரு தேற்றம்தான் விஞ்ஞான முறையானது ' என்று அடித்துக் கூறுவதற்கு அவர் முன் வந்திட வேண்டும்.

அதை விட்டு விட்டு, ஓர் இரண்டும்-கெட்டான் கொள்கையாக தமது முடிவுகளை அவர் எடுத்து வைப்பது என்ன ஞாயம் ?
ஏனென்றால், பிழையாக்கப் பட்டு நிற்கின்ற ஒரு தேற்றம்----விஞ்ஞான முறை 'ஆனதா ? ' அல்லது 'விஞ்ஞான முறை அற்றதா ? ' என்பதுதான் மையமான கேள்வி.

ஒரு வேளை, 'பிழையாக்கம் ' என்பது வேறு; 'பிழையாக்கும் இயன்மை ' என்பது வேறு; என்று அவர் கருதுகிறாரோ ? அல்லது, 'தேற்றம் ' என்பதையும் அதன் அடிப்படையில் கணிக்கப் படுகின்ற 'முற்கூற்று ' என்பதனையும் ஒன்றாகப் போட்டு அவர் குழப்பிக் கொள்கிறாரோ ?

ஒரு தேற்றத்திற்குள், அதனைப் பிழையாக்கிக் காட்டிடக் கூடிய இயன்மை அடங்கி இருக்கும் என்றால், அந்த இயன்மையினைப் பயன்படுத்தி அதனை நாம் பிழை ஆக்கிக் காட்டுகின்ற பொழுது, அந்தத் தேற்றத்தின் தன்மையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டு விடுவதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை. எனவே, இந்தக் கோணத்தில் கார்ல் பாப்பரை நாம் அணுகுவதற்கும் வாய்ப்பு இல்லை.

ஆனால், மறு வேளை, although a theory may be proved by the happening of the event predicted by it, it is still not scientific for, to be a scientific theory, it must be refutable at every point of time என்று கூறுவதற்குதான்----ஒரு தேற்றம் முற்கூறுகின்ற ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்து முடிந்து விடுவதால் மட்டும், விஞ்ஞான முறையான ஒரு தேற்றமாக அது திகழ்ந்து விட முடியாது; ஏனென்றால், எந்தக் கணத்திலும் பிழையாக்கிடப் படக் கூடிய ஒரு தேற்றம் மட்டும்தான், விஞ்ஞான முறையான ஒரு தேற்றமாக விளங்கிட முடியும் என்று கூறுவதற்குதான்----கார்ல் பாப்பர் முற்படுகிறாரோ ?

அப்படித்தான் என்றால் கூட, புதுமை என்று சொல்வதற்கு இதில் எதுவும் இல்லை---- புதிய பார்வையும் இல்லை; புதிய முயற்சியும் இல்லை!
முதலில், 'முற் கூற்று ' என்பதன் முந்திய கட்டங்களைக் கொஞ்சம் நாம் எண்ணிப் பார்ப்போம்.

தேற்றம்-கணிப்பு-முற்கூற்று

முற்கூற்று என்பது ஒரு தேற்றம் அல்ல; ஒரு தேற்றத்தின் அடிப்படையில் கணித்துக் கூறப் படுகின்ற ஒரு முன்-மொழிவு மட்டும்தான் ஆகும்.
எனவே, ஒரு 'முற்கூற்று ' பிழை பட்டுப் போய் விட்டது என்பதற்காக, அந்தத் 'தேற்றமும் ' பிழை பட்டுப் போய் விட்டது என்று நாம் கூறி விட முடியாது. ஏனென்றால், பிழை பட்டு நிற்பது வெறும் 'கணிப்பு ' மட்டும்தான் ஆகும்.
இப்படி, தேற்றம்----கணிப்பு----முற்கூற்று என்பதுதான் 'கணிப்பு நிகழ்ப்பாட்டின் ' ஆதியும் அந்தமும் என்பதில் ஐயம் இல்லை.

இங்கே, ஒரு சில முற்கூற்றுகளை நாம் எடுத்துக் கொள்வோம்.

ஐன்ஸ்ட்டின்: ந்யூட்டன்

With Einstein 's theory the situation was strikingly different. Take one typical instance - Einstein 's prediction, just then confirmed by the finding of Eddington 's expedition. Einstein 's gravitational theory had led to the result that light must be attracted by heavy bodies (such as the sun), precisely as material bodies were attracted. As a consequence it could be calculated that light from a distant fixed star whose apparent position was close to the sun would reach the earth from such a direction that the star would seem to be slightly shifted away from the sun; or, in other words, that stars close to the sun would look as if they had moved a little away from the sun, and from one another. This is a thing which cannot normally be observed since such stars are rendered invisible in daytime by the sun 's overwhelming brightness; but during an eclipse it is possible to take photographs of them. If the same constellation is photographed at night one can measure the distance on the two photographs, and check the predicted effect.
கார்ல் பாப்பரின் கூற்று இது!

பருமையான உடலங்களைக் கனமான உடலங்கள் ஈர்ப்பது போலவே, அவற்றால் ஒளியும் ஈர்க்கப் படுகிறது என்பது ஐன்ஸ்ட்டானின் புவியீர்ப்புத் தேற்றமாம்! இதன் விளைவாக, சூரியனுக்கு அண்மையில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு வருகின்ற ஒளி, பூமியை அடைகின்ற பொழுது, அந்த நட்சத்திரம் கொஞ்சம் இடம் மாறி இருப்பதாக நமக்குத் தோன்றுமாம்! இந்தக் காட்சியை இருளில் படம் பிடித்துப் பார்த்து, இதனை நாம் தெரிந்து கொள்ளவும் முடியுமாம்! எடிங்க்ட்டனது பரிபயணத்தினால் ஒப்புறுதிப் படுத்தப் பட்டும் இது உள்ளதாம்!

"திண்ணை“ இணைய தளத்தில் சோதிப் பிரகாசம் அவர்களின் விவாதங்களின் நான்கு பகுதிகளுக்கு மட்டும் இங்கு இணைப்பு சொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் விவாதங்களை காண விரும்புவோர் இணைப்புகளை சொடுக்கவும்.





தொடரும்..............

Friday, May 12, 2006

நடிகர் ஆனந்த ராஜ் டெபாசிட் இழந்தார்

புதுவையில் அ.தி.மு.க கட்சி சார்பாக போட்டியிட்ட நடிகர் ஆனந்த ராஜ் டெபாசிட் இழந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் அவரை விட 7,799 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் போட்டியிட்ட உருளையன் பேட்டை தொகுதி விபரம்:-

மொத்த வாக்குகள் 18,903
பதிவானவை- 16,154
சிவா (தி.மு.க)- 8,509
நேரு (சுயேச்சை)- 6,549
ஆனந்தராஜ் (அ.தி.மு.க)- 710
விஜயலட்சுமி(தே.மு.தி.க)- 149
சுந்தரி (பா.ஜ.க)- 83
எஸ். வி. சிவா(சுயேச்சை)-36
எஸ். நேரு (சுயேச்சை) 83
நேருதாசன் (சுயேச்சை) 35


புதுவையை பொருத்தவரை கட்சிகளை விட வேட்பாளரின் தனித்தன்மையே அதிகம் கவனிக்கப்படுகிறது.

புதுவை முதல்வர் ரெங்கசாமி பதிவான 34,508 வாக்குகளில் 31,099 வாக்குகள் பெற்று பதிவான வாக்குகளில் 90.12 சதவிகித வாக்குகள் பெற்றது காங்கிரசு கட்சிக்கான வெற்றி அல்ல, மாறாக முதலவர் ரெங்கசாமிக்கு கிடைத்த வெற்றியாகும்.

அதே போல் வேட்பாளர்களைப் பொருத்து தான் இங்கு வெற்றி வாய்ப்புகள் அமைந்துள்ளன.

புதுவையில் மொத்தமாக 10 சதம் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, May 11, 2006

புதுச்சேரி இறுதி நிலவரம்

புதுச்சேரி இறுதி நிலவரம் மொத்தம் 30
காங்கிரசு-10
தி.மு.க.-7
அ.தி.மு.க-3
புதுவை மக்கள் காங்கிரசு -3
பா.ம.க-2
சி.பி.ஐ-1
ம.தி.மு.க -1
சுயேச்சை-3


Constituency Candidate Name Party Status
MUTHIALPET Nandha T. Saravanan DMK Leading By 4879 votes
CASSICADE K. Lakshmi Narayanan PMC Winner
RAJ BHAVAN S.P.Sivakumar DMK Winner
BUSSY N.Anand PMC Winner
OUPALAM A.Anbalagan AIADMK Winner
ORLEAMPETH Siva.R DMK Winner
NELLITHOPE Om Sakthi Sekar @ Sekar AIADMK Winner
MODELIARPETH Dr.M.A.S Subramanian DMK Winner
ARIANKUPPAM Anantha Raman R.K.R PMK Winner
EMBALOM(SC) Rajaraman .R DMK Winner
NETTAPAKKAM V.Vaithilingam INC Winner
KURUVINATHAM Radhakrishnan.R INC Winner
BAHOUR(SC) M.Kandasamy INC Winner
THIRUBUVANAI(SC) Angalane INC Winner
MANNADIPETH Arulmurugan.P PMK Winner
OSSUDU(SC) Elumalai.A IND Winner
VILLENOUR J. Narayanasamy IND Winner
OZHUKARAI A. Namassivayam INC Winner
THATTANCHAVADY N. Rangasamy INC Leading By 21048 votes
REDDIARPALAYAM Viswanathan .R CPI Winner
LAWSPET M.O.H.F.Shajahan INC Leading By 124 votes
COTCHERRY OMALINGAM.V ADMK Winner
KARAIKAL A.M.H. NAZEEM DMK Winner
KARAIKAL(SOUTH) V.K.GANAPATHY PMC Winner
NERAVY-GRANDALDEE V.M.C. SIVAKKUMAR DMK Winner
TIRUNALLAR P.R.SIVA MDMK Winner
NEDUNCADU (SC) A.MARIMUTHU IND Winner
MAHE E. VALSARAJ INC Winner
PALLOOR A.V.SREEDHARAN INC Winner
YANAM MALLADI KRISHNA RAO INC Winner

Friday, May 05, 2006

மார்க்சியம்- வலைப்பதிவர்களின் கேள்வியும் பதில்களும்

மேதினம் தொடர்பான பதிவுகளில் மார்க்சியம் குறித்து பல்வேறு தகவல்களை வலைப்பதிவர்கள் எழதியுள்ளனர் அத்துடன் விவாதமாக சிலர் மார்க்சியத்தை கேள்வி எழுப்பியுள்ளனர். அவற்றில்

முத்து( தமிழினி)யின்
1. மார்க்சியம் சில குறிப்புகள்-கேள்விகள்
2.வங்கி அனுபவம்-கூடமலை கோபால்
வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு
3.மார்க்ஸ்வாதம் அறிவியல் அடிப்படையிலானதா?
செல்வத்தின்
4.மார்க்ஸும் காந்தியும்
சசியின் டைரி
5.கம்யுனிச காதல் - 1

ஆகியவை நான் பார்த்தவைகள்

இதில் முத்து( தமிழினி) தன்னுடைய
மார்க்சியம் சில குறிப்புகள்-கேள்விகள் என்ற பதிவில் என்னுடைய பதில்களுக்கு

//என்னுடைய எழுத்தின் பலம் பலவீனம் எல்லாமே எளிமைதான். என் அறியாமையை ஒத்துக்கொள்வது தான்//. என்றும் நேரில் வேண்டுமானால் விளக்க முடியும் என்று கூறி இருக்கிறார்.

அத்துடன் அப்பதிவில் குழலிக்கு எழுதிய பதிலில்,

//thanks kuzhali.
சிந்தாந்த ரீதியாக பார்த்தால் என்னிடமும் அதிகம் படிப்பு இல்லை.//

என்று இந்த விவாதத்திலிருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் சங்கர் நாராயணன் மட்டும் மார்க்ஸ்வாதம் அறிவியல் அடிப்படையிலானதா? என்று கேட்டுள்ளார் எனவே அவரின் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்கும் விதமாக இப்பதிவை வழங்குகிறேன்.

1. மார்க்ஸ்வாதம் அறிவியல் அடிப்படையிலானதா?

இந்த தலைப்பே சரியானதல்ல, மார்க்சியம் அறிவியல் பூர்வமானதா? என்றுதான் இருக்க வேண்டும்.

மார்க்சின் வாதம் அறிவியல் பூர்வமானதா எனக் கேட்பதாக தெரியவில்லை. அவர் கேள்விகளில் எங்கும், மார்க்சின் எந்த விசயத்தையாவது சொல்லி அது அறிவியல் பூர்வமானதா என்று வினவவில்லை.

எனவே இந்த வலைப்பதிவர் மார்க்சிய அடிப்படை இல்லாமல் மார்க்சியத்தை பற்றி பேசுபவர் என்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.

மார்க்சியத்தை கேள்விக்குள்ளாக்கு முன் அதை நன்றாக படித்துவிட்டு வருவது தான் ஆரோக்கியமான விவாதமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

2. //அறிவியல் அடிப்படை கொண்டது மார்க்ஸியம் என்பது நீங்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.//

மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம். இந்த சமூக விஞ்ஞானம் அறிவியல் அடிப்படை கொண்டது என்பது உண்மை.

அறிவியல் என்பது, நன்றாக நோக்கினால் (அறிவு+இயல்) அறிவைப் பற்றிய தத்துவம். சமூகத்தை, அதன் செயல்பாடுகளை, பிரச்சனைகளை அறிவியல் நோக்கில் நோக்குவதால் அது அறிவியல் அடிப்படை கொண்டது என்கிறார்கள்.

3. //பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது, சோவியத் சிதறியது போன்ற சரித்திர நிகழ்வுகள் மார்க்ஸியத்தின் தவறுகளைக் காட்டிவிட்ட நிலையில். அதை இன்னமும், ஒரு அறிவியல் கண்ணோட்டம் என்று சப்பை கட்டுவது எந்த விதத்திலும் அதை அறிவியலாக்கிவிடாது.//

பெர்லின் சுவர் தகர்ந்து விட்டால் சுவர் தான் தகர்ந்தது. தத்துவம் தகரவில்லை. அந்த சுவர் தான் மார்க்சியம் என்று யார் உங்களுக்கு சொன்னது?

சோவியத் சிதறியது போன்ற சரித்திர நிகழ்வுகள் மார்க்சியத்தின் தவறுகளைக் காட்டவில்லை. மார்க்சியம் நடைமுறைப்படுத்தியதில் உள்ள தவறைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

வரலாற்று நிகழ்வை, வரலாற்று நிகழ்வு என்றுதான் சொல்கிறோம். வரலாற்றுத் தகர்வு என்று சொல்வதில்லை.

உங்களைப்போன்றோர் சப்பைக்கட்டு கட்டுவதால் ஒரு சமூக விஞஞானத்தை வென்று விடமுடியாது.

4. போதாத குறைக்கு, க்யூபா போன்ற நாடுகள், மார்க்ஸ்வாததினால் இன்னமும் முன்னேராமல் இருப்பது உலகறிந்த உண்மை. (அதற்கு காரணம் அமேரிக்கா என்று நமது மார்க்ஸ்வாதிகள் சொல்வது சகிக்கமுடியவில்லை. மார்க்ஸ்வாததின் இன்றய எதிரி அமேரிக்கா, உலகில் உள்ள எல்லா தீமைகளுக்கும் காரணம் அமேரிக்கா)

கியூபாமீது அமெரிக்கா மிக நீண்ட நாட்களாக பொருளாதாரத்தடை விதித்து அதன் முன்னேற்றத்திற்கு இன்றுவரை தடையாகவே உள்ளது.

அமெரிக்க சி.ஐ.ஏ போன்ற சமூக விரோதிகளைப்பற்றி மட்டும் பேசக்கூடாது என்கிறீர்கள். அவர்களை பற்றி பேசாமல் எப்படி விளக்குவது,

தோழர் தோழர் என்று சொல்லிக் கொண்டு லெனின் கூடவே கடைசிவரை ஒரு சி. ஐ. ஏ இருந்தான் என்று கருணாநிதி ஒருமுறை சொன்னார்.

கடைசிவரை இப்படி கூட இருந்து குழிபறிப்பது உள்ளிட்ட செயலை, அவர்கள் செய்த சதிவேலைகளைப் பற்றி பேசாமல் எப்படி விளக்குவது.

சுப்ரமணியசாமி சென்ற வாஜ்பாயின் பா.ஜ.க அரசை 13 மாதத்தில் கவிழ்த்தார். செயாவிற்கு டீ பார்ட்டி டெல்லியில் வைத்தார். கவிழ்த்தார். ஆனால் கவிழ்த்த சுப்பரமணியசாமி பற்றி பேசவேண்டாம் என்றால் எதை பேசுவது.

ஆட்சிக்கவிழ்த்த சுப்ரமணியசாமி பற்றிமட்டும் பேசாதே ஆட்சிகவிழ்ப்பைபற்றி பேசு என்பது போல் உள்ளது உங்கள் வாதம்.

5. அது சரி, இன்னும் எத்தனை நாடுகளில் தான் பரிசோதிக்கவேண்டும் என்கிறீர்கள்.? உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரிசோதித்து தோற்றால் தான் ஒத்துக் கொள்வீர்களா?

மார்க்சியம் தோற்றது என்றால் முதலாளித்துவம் அனைத்து சமூகப்பிரச்சனைகளையும் தீர்த்து வெற்றி பெற்றதா?

சோவியத் யூனியன் மிகச்சிறிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்தது. வின்வெளியில் நீல் அம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் செல்வதற்கு முன்பாகவே யூரிகாகரினை வின்வெளிக்கு அனுப்பி எல்லாவற்றுக்கும் முன்னோடியாகவே இருந்தது.

போர் வெறிபிடித்த அமெரிக்காதான் ஹீரோசிமா, நாகசாகியில் குண்டுவீசியது.


6. //ஒரு சித்தாந்தம் அல்லது theory அறிவியல்பூர்வமானதாக இருக்க Falsifiability மிக முக்கியம், மார்க்ஸ்வாதம் falsifiable என்பதை ஒத்துக் கொள்வீர்களா?//

Falsifiable என்பதற்கு பால்ஸ் மின் அகராதியில் கீழ்க்குறித்தவாறு விளக்கம் உள்ளது.

falsifiable, a. —falsify, v. alter fraudulently, மாற்றி மோசடி செய்; disappoint, ஏமாற்றம் விளைவி; forge, கள்ளப் பத்திரம் உருவாக்கு; distort truth, உண்மையைத் திரித்துக் கூறு; prove to be wrong, தவறென்று நிரூபி; falsification, n. ஏமாற்றுதல்; பொய்க் கூற்று; மோசடி செய்தல்; —falsifier, n.

உங்கள் விவாதத்தை வேண்டுமானால் அப்படி ஏற்றுக்கொள்ளலாம்.

ஒரு சித்தாந்தம் அறிவியல்பூர்வமானதாக இருக்க,
7. அந்த சித்தாந்தத்தின் confirmation ஐ மட்டுமே பார்பது தவறு. அத்தகய verification/confirmation எந்த விதமான theoryக்கும் சுலபமாக கிடைத்துவிடும்.
8. //என்னை பொருத்தவரை, அறிவியல் அடிப்படை என்பது தவறு என்றும் சரி என்றும் நிரூபிக்கப்படக் கூடியதாக இருக்கவேண்டும் (Falsifiablity).//

மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம் ஆனால், நீங்கள் அதனை ஒரு பொருள் போன்று கருதுகிறீர்கள்.

தண்ணீர் அதை சூடாக்கினால் அது ஆவியாகி H2 + O ஆக மாறும், அதை மீண்டும் அதிக அழுத்ததிற்கு உட்படுத்தி திறந்து விட்டு தண்ணீராக மாற்றலாம் (லிண்டே பிராசஸ்).

ஒரு பொருளைப்போல சமூகத்தை, சமூக விஞ்ஞானத்தை உடனடியாக அப்படி சோதித்து அறிய இயாலாது.

சமூக விஞ்ஞானத்தை ஒரு test tube விஞ்ஞானமாக பார்த்தல் என்பது கீழ்க்கண்ட கேள்வி போலத்தான்.

பலர் இப்படி ஒரு கேள்வி எழுப்புவார்கள், முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? எனக் கேட்பார்கள் மேலோட்டமாகப் பார்த்தால் அது சரியானது போல் தோன்றும்.

ஆனால்,
அந்த கேள்வியே அடிப்படையில் தவறானது.

எதுவும் நேரடியாக வரவில்லை. பரிணாம வளர்ச்சியின் மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட மாற்றங்களினால் மாறியவை. ( இதை கேள்விக் குள்ளாக்கினால் டார்வின் கொள்கைப் பற்றிதான் பேச வேண்டியிருக்கும்).

9. அந்த சித்தாந்தத்தை உடைத்தெரியக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதை நாம் எதிர்பார்க்கவேண்டும்.

சித்தாந்தத்தை உடைத்தெரியக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், இன்றைய உலகத்தில் உயிர்கள் தோன்றிய வரலாறு பற்றி மார்க்சு பின்வறுமாறு குறிப்பிட்டார்.

இன்றைய உலகில் டார்வின் கொள்கைதான் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதனை அவர் நிறுவியிருக்கிறார். அதை மீறிய மறுக்கிற தத்துவம் உலகில் இதுவரை இல்லை. எனவே, உலகத்தில் உயிர்கள் தோன்றியவை பற்றி டார்வின் கொள்கையையே அடிப்படையாய் கொள்ள வேண்டியுள்ளது. எனவே அதுதான் உயிர்கள் தோன்றியது பற்றிய இன்றைய அறிவியல்.

10. ஒரு theory யை தவறு என்று நிரூபிக்க முடியாது என்றால் அந்த நொடியே அந்த theory அறிவியல் பூர்வமானது அல்ல என்ற நிலையய் அடைகிறது. Irrefutability is not a virtue of a theory but a vice.

உண்மையான விசயத்தை பொய் என்று நிருபிக்க இயலாது என்றால் அது அறிவியல் பூர்வமானது அல்ல.

நல்ல கண்டுபிடிப்பு.

உண்மையான அறிவியல் என்றால், உண்மையை பொய் என்றும், பொய்யை உண்மை என்றும் நிருபித்தலே ஆகும்.

ஆகா! அருமையான தத்துவம்.

11. Theory யை உண்மையான முறையில் சோதனை செய்வது என்பது, அந்த தியரியை தவறு என்று நிரூபிக்கும் பொருட்டு எடுத்துக் கொள்ளும் உண்மையான முயற்சியே. அந்த Theory யை சரி என் நிரூபிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சி அல்ல.

உங்கள் முயற்சி வீண் ஏனெனில், நான் இன்று உங்களுக்கு பதில் எழுத வேண்டும் என்பதற்காக என்னிடம் உள்ள 1000 திற்கும் மேற்பட்ட நூல்களில் முன்னேற்றப் பதிப்பகத்தின் 250 க்கும் மேற்பட்ட நூல்களை ஒரு பார்வை கூட பார்க்க இயல்வில்லை. இதை படிக்கவே ஒரு ஆறு வருடம் ஆகும் போல் உள்ளது.

தவறு என்று நிரூபிக்க இந்த வலைப்பதிவில் 4-வரி எழுதிவிட்டு அந்த தத்துவத்தை தவறு என்று நீரூபிக்கும் முயற்சியை இத்துடன் கைவிடுவது நல்லது.

12. ஒரு சில Theory க்கள் தவறு என்று நிரூபணமான பின்பும் அதன் சார்புடயவர்கள் அத்தகய சித்தாந்தத்தை விடாப்பிடியாகக் கடைபிடிப்பதும், பழய சிந்தனைகளுக்குப் புதிய அர்த்தங்கள் கற்பிப்பதுமாக பல "Conventionalist twist" கொடுத்து theory யைக் காப்பற்ற முயற்சிகின்றனர்.அத்தகய முயற்சிகள், theory ன் அறிவியல் தன்மையினைப் போக்கிவிடும்.

இலண்டன் நூல் நிலையம் மிகப்பெரியது. அந்த நூலகத்தின் முகப்பில் இந்த நூலகத்தை மிக அதிகமாக பயன்படுத்தியவர்கள் என மார்க்சு, அம்பேத்கர் ஆகியோரது படம் இடம் பெற்றிருக்கிறதாக நான் கேள்விபட்டேன்.

அப்படிப்பட்ட மாமேதைகளின் தத்துவத்தை பொய் என்று நிரூபிக்க முயல்வது எல்லோரையும் குழப்பவே உதவும். ஏற்கனவே குழப்பியவர்கள் வாதம் நிராகரிக்கப்பட்டன இன்று மார்க்சியம் மட்டுமே வெல்லமுடியாத தத்துவமாக உள்ளது.

வேண்டுமானால் மார்க்சியத்தை பொய் என்று நிரூபிக்க முயன்ற மாமேதை நான் என்று நீங்கள் உங்களை சந்தோசப்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு தான்.

தமிழினிக்கு “மார்க்சியம் சில குறிப்புகள்-கேள்விகள்“ என்ற பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தை இங்கே படியுங்கள்.

முடவன் நடக்கிறான் ஊமையன் பேசுகிறான் என்று பேசி ஏமாற்றும் தத்துவம் அல்ல அது.

மார்ச்சியம் ஒரு அறிவியல் எனவே, இதனை ஒரு கூத்து நடத்தி விளக்கி விட முடியாது.

இராமாயணம் மகாபாதம் போல அது ஒரு பொழுது போக்கு அம்சம் அல்ல அது.

உலக இயங்கியலில் எப்படி நிலபிரபுத்துவம் முதலாளித்துவமாக மாறும், எப்படி முதலாளித்துவம் பொதுவுடைமையாக மாறும் என்பது பற்றி அது விளக்கியுள்ளது. அது மீண்டும் முதலாளித்துமாக மாறினாலும், மீண்டும் அது எதை நோக்கி செல்லும் என்பதற்கான இயங்கியலை மார்க்சியம் விளக்கியுள்ளது.

எப்படி ஒரு அ.தி.மு.க வை , தி.மு.க. வை பா.ம.க-வை எந்த சித்தாந்த்தை வைத்து புரிந்து மக்கள் சென்றார்கள். சிலருக்கு நடிப்பு, சிலருக்கு தமிழ், சிலருக்கு சாதி, இது எதுவுமே நம் பிரச்சனை தீர்க்கவில்லை என்றவுடன் அவர்கள் எதைநேக்கி செல்வார்கள்.

ஏதேனும் ஒரு தீர்வை நோக்கி சென்றுதான் ஆகவேண்டும்.

காவிரியில் தண்ணீரும் வரவில்லை, இலவசமும் இல்லை, உணவே கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வார்கள்? ஒரு நாள் எல்லாம் இழந்தவர்கள் யாரை எதிர்த்து போராடுவார்கள்.

அரசுக்கும் மக்களுக்குமான போராட்டமாகவும், இருப்பவர்களுக்கும் இல்லாதவர் களுக்குமான போராட்டமாக அது மாறும். அந்த போராட்டம் எப்படிப்போகும் கற்பனை செய்து கொள்ளுங்கள். காவல் துறை தடுக்கலாம். நேபாளத்தில் காவல் துறை எதிர்த்தது, ஆனால் என்ன நடந்தது.நேபாள மக்களின் போராட்டத்தால் மன்னர் வீழ்ந்து சனநாயகத்துக்கு வழிகோல வழி இப்போது கிடைத்துள்ளது.

அது போல தேவைக்கான போராட்டம் முன்னெடுக்கப்படுவது என்பது காலத்தின் கட்டாயமாக்கப்படுகிறது.

நேபாளத்தில் மன்னர் ஆட்சி தான் மாற்றவே முடியாது என்று நினைத்திருந்தால் எதுவுமே அவர்கள் சாதித்து இருக்காது.

எனவே, இப்போது சித்தாந்தம் என்பது மக்களை சென்று அடையாமல் இருக்கலாம், ஆனால் இயக்கவியல் தத்துவப்படி அவர்களின் தேவைக்கான போராட்டம் வாழ்க்கைக்கான போராட்டமாக மாறும்.

தனது இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து எந்த மக்கள் சமூகமும் தன்னை ஒரு போதும் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது.

எனவே, தத்துவம் என்பது ஒரு விவாதமாக அல்லாமல் ஒரு செயல் வடிவமாக அவர்களை சென்றடைவது என்பது காலத்தின் கட்டாயமாகும்.

எனவே, காலம் மார்க்சியத்தின் வெற்றியை உறுதி செய்யும். அதுவரை வீண் வரட்டு விவாதங்களை நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இது தொடர்பாக கேள்விகளை தொடர வேண்டும் என நினைத்தால், பின்னூட்டமாக கேள்விகளை தொதுத்து எழுதினால், பதில் அளிக்க வசதியாக இருக்கும். பின்னூட்டத்தில் தொடர்ந்து பதில் அளிக்க அதிக நேரம் பிடிக்கிறது.

Thursday, May 04, 2006

வை.கோ. பொடா பிணையும் தி.மு.கவும்

கொடிய பொடாச்சட்டத்திலிருந்து அவர்களுக்கு எப்படி பிணை கிடைத்தது என்பதை சு.ப.வீரபாண்டியன் விளக்கினார் அவரின் சுருக்கமான் பேட்டி.

பொடா சட்டத்திலிருந்து எப்படி வெளியில் வந்தீர்கள் என்று கேட்டதற்கு கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்.

நான் இன்னும் பொடாச்சட்டத்திலிருந்து வெளிவரவில்லை. பிணையில் வந்துள்ளோம். அவ்வளவுதான்.

பிணை எப்படி கிடைத்தது? என்பது பற்றி குறிப்பிடுகையில்

நாங்கள் இந்த சட்டத்தின் படி குறைந்தது பத்து ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியிருந்திருக்கும்.

ஆனால் இந்த நாளில் எப்படி எங்களுக்கு பிணை கிடைத்தது என்பதை நான் சொல்லியே ஆகவேண்டும்.

அன்றைய மத்திய அரசு பொடாசட்டத்தினை மென் மேலும் கடினமாக்கிக் கொண்டிருந்தது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு வாய்மொழி ஆதரவும் பொடாச்சட்டத்தின் படி குற்றமாக கருதப்படும் என்று உச்ச நீதி மன்றத்தில் அன்றைய மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

இந்து செய்தித்தாளில் முதல் பக்கத்தில் அந்த செய்தி வெளியாகி இருந்தது.

அதைப்பார்த்த கலைஞர் உடனே டி. ஆர். பாலுவை காலை 5 மணிக்கு தொடர்பு கொண்டார்.

கருணாநிதி : இந்து முதல் பக்கத்தை பார்த்தீங்களா?

டி. ஆர் .பாலு : இங்கே ஒரே மழை, அதனால இன்னும் இங்க பேப்பர் வரல,

கருணாநிதி :: அமைச்சர் வீட்டுக்கு பத்திரிக்கை வரவே இவ்வளவு நேரமா?. தொலைபேசியை கோவமாக வைத்து விடுகிறார்.

டி. ஆர் .பாலு: (பேப்பரை தேடி பிடித்து வாங்கி படித்த பின் தொடர்பு கொள்கிறார்) ஆமாம் என்ன செய்யலாம்.

கருணாநிதி : என்ன செய்வீங்களோ தெரியாது. அதை மறுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியுமா? முடியாதா? .கூட்டணியில நீடிக்கிறதா? வேண்டாமா? என கேளுங்கள், என்றார்.

அன்று டில்லியில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் மிக்கடுமையாக அன்று பேசினார் டி.ஆர். பாலு,

அவுட்லுக் இதழ் அதனை பதிவு செய்துள்ளது. டி.ஆர். பாலு ரகளை செய்தார் என்று அப்பத்திரிக்கை பதிவு செய்துள்ளது.

அப்படி ரகளை செய்ததால் தான் மத்திய அரசு அடுத்த வாரமே மற்றுமொறு அறிக்கை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் இளம் நீதிபதிகள் மத்திய அரசின் கொள்கையை தவறாக புரிந்து கொண்டார்கள் ஆனால் மத்திய அரசு அவ்வாறு கருதவில்லை. வாய் மொழி ஆதரவு பொடாச்சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்பதே மத்திய அரசின் கருத்து என உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

அந்த ஒரு வாரத்தில் என்ன நடந்தது.

டி.ஆர். பாலுவும், தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களும் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் எங்களுக்கு பிணைகிடைத்தது.

அதற்காக நான் டி.ஆர். பாலு அவர்களுக்கும் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியுள்ளது.

இதைப்பற்றி குறிப்பிடும் போது அந்த அம்மாவிற்கு மிகவும் வேண்டிய அதிகாரிகள் தான் நீதிமன்றத்தில் இயக்கங்களுக்கு வாய்மொழி ஆதரவும் பொடாச் சட்டத்தின் படி குற்றமாகும் என மத்திய அரசு கருதுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார். என டி.ஆர். பாலு தம்மிடம் சொன்னதாக சு.ப.வீ. குறிப்பிட்டிருந்தார்.

என வணக்கம் தமிழகத்தில் சு.ப.வீ பதில் அளித்துள்ளார்.

அண்ணன் வைகோவும் அதே அடிப்படையில் தான் சிறையிலிருந்து வந்தார்.

ஆனால் நான் வெளியே வர கலைஞர் காரணமல்ல என்று வை.கோ குறிப்பிட்டிருந்ததை நம் வலைப்பதிவாளர்கள் மறந்திருக்க முடியாது.

Wednesday, May 03, 2006

அத்தனைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க தோற்கும் வைகோ அறிவிப்பு

வைகோ பேசுவது அரசியலா?

வைகோ ஒரு சிறந்த அரசியல் வாதி என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை, என்றே எனக்குத் தோன்றுகிறது அதனால் தான் இந்த பதிவை எழுத வேண்டியிருந்தது.

அரசியல் என்றால் என்ன?

1. பணம் சம்பாதித்தல்,
2. மக்கள் நலம் என்று சொல்லி மக்களை ஏமாற்றல்,
3. கட்சிநலம் என்று சொல்லி கட்சிக்காரர்களை ஏமாற்றுதல்,
4. முதலாளிகளுக்கு ஆதரவாகப்பேசி அவர்களிடம் தேர்தல் நிதிவாங்குதல், (அன்பளிப்பு)

இது தான் சிறந்த அரசியல்,

அரசியல் வாதியின் மூலதனம் வாய்ப்பேச்சு தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் வைகோ. தனது வாய்ப்பேச்சு மூலதனத்தை வைத்து எத்தனைகோடி சம்பாதிக்க முடியுமோ அவ்வளவும் செய்துள்ளார் இந்த வைகோ. எனவே இவர் சிறந்த அரசியல் வாதி என்பதில் எவருக்கும் ஐயம் எழ வாய்ப்பு இல்லை.

நான் என்னைப்பற்றி அதிகம் நினைப்பதில்லை, என்கட்சிக்கு எது நல்லதோ அதை செய்தேன் என்றார். கட்சி நலம் என்று பேசினாரே!. கட்சி நலன் என்றவுடன் பரவாயில்லை, வைகோ ஏதோ கட்சிக் காரர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார் என்று பலர் கருதியிருக்ககூடும். ஆனால் அது இல்லை.

மத்தியில் நான் அமைச்சர் நீ அமைச்சர் என்று போட்டி போடும் நிலையில் வைகோ அமைதியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அது தான் நாங்கள் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என்று, இது ஏதோ வைகோவின் மிகப்பரந்த மனப்பான்மை என்று பலர் அப்போது நம்பிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் பின்னர் தான் தெரிந்தது, கருணாநிதியிடம் அவர் பேசிய வசனம்.

’’அண்ணே! அந்த கண்ணப்பனுக்கு வேண்டாம்னே. அந்த ஆளு நல்லா சம்பாரிச்சான், ஆனா யாருக்குமே செலவு செய்யல. என்னையும் வந்து பார்க்கல. அதேமாதிரி தான் அந்த ஆள் செஞ்சியாரும் கட்சிக்கும் ஒன்னும் செய்யல எனக்கும் ஒன்னும் செய்யல அதனால எங்களுக்கு அதிக சீட்டு தேவையில்லை“.

தமது கட்சிக்காரர்கள் தமக்கு பங்கு கொடுக்காமல் கொள்ளை அடித்தது தான் வைகோவின் எரிச்சல். அதனால் தான் இவர் ஆட்சியில் பங்கேற்கவில்லை.

கட்சிக்காரர்களின் நலனில் அக்கரையுடன் இருப்பதாக இவர் நடித்ததால் மிகவும் எரிச்சலடைந்த இல.கணேசன், செஞ்சியார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கணிசமான தொகைக்கு தங்களையும் அடமானம் வைத்துக் கொண்டு வைகோவையும் விலை பேசி விற்றுவிட்டார்கள்.

இவர்தான் பெரிய நியாய வாதியாயிற்றே வேண்டாம் அவர்கள் போகட்டும் என்று விட்டு விடவேண்டியது தானே! தன்னிடம் ஒரு பெரிய பெட்டி காட்டியவுடன் அப்படியே பல்டி அடித்து சிறந்த அரசியல் வாதியாகிவிட்டார்.

நிர்வாக சீர்கேடுகளைப் பற்றியெல்லாம் பேசும் வைகோ தமது கட்சியில் உள்ள இல. கணேசன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் தன்னையும் விற்றுக்கொண்டு வைகோ விற்கும் விலை வைத்த அரசியல் சீர்கேட்டை அவர் ஒரு போதும் பேசுவதில்லை.

இவர் கட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரையே சரியாக வைத்து நிர்வாகம் செய்ய இயலாத வைகோ, நிர்வாகச் சீர்கேட்டை பற்றி பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பது தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவலம்.

கூட்டணி மாறியவுடன் மக்கள் பிறச்சனைப்பற்றி பேசாமல் அவரைக்காட்ட ஒரு தொலைக் காட்சி வேண்டும் என்பதற்காக அந்த தொலைக்காட்சிக்கு ஆதரவாக பேசினார். இதில் எங்கே மக்கள் நலம் உள்ளது. இது அடுத்த தேர்தலுக்கு முதலீடோ?

டாட்டாவின் மேல் வைகோவிற்கு எத்தனை பாசம், ரத்தன் டாட்டாவே அமைதியாக இருந்தார் ஆனால் வைகோவிற்கு இந்த முதளாளிகள் மீது எவ்வளவு பாசம்.

டாட்டா என்ன ஏழை ஊசி வியாபாரியா? பல்வேறு தொழில்களில் அவர்கள் ஏக போகம் செலுத்தவில்லையா?. ஏன் டாட்டாவின் ஏகபோகத்தை அவர் கண்டிக்கவில்லை.

தினகரன் ஒரு ரூபாய்க்கு கொடுப்பதால் தினமலர், தினமணி, தினத்தந்தி ஆகிய பத்திரிக்கைகளின் சுற்று மிகவும் குறைந்து போயுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பத்திரிக்கைகள் கருணாநிதி குடும்பத்தை எதிர்த்து எழுதிவருகின்றன.

அதே போல இந்தியா முழுவதும் ஒரு ரூபாய்க்கு தொலைபேசி என அறிவித்தவுடன் டாட்டா, ரிலையன்சு உள்ளிட்ட தொலை பேசி நிறுவனங்களுக்கு பெரிய இழப்பு என்றவுடன் வைகோ போன்ற கை கூலிகளை வைத்து டாட்டா போன்றோர் ச(தி)துரங்கம் ஆடுகின்றனர்.

தயாநிதி போன்றோரை நீக்கிவிட்டால் ஒரு ரூபாய் திட்டத்தை திரும்ப பெற்றுவிடலாம் என்ற டாடா, ரிலையன்சு கும்பலின் திட்டத்திற்கு வைகோ துணை போகிறார்.

எந்த அடிப்படையில் செயாவை சிறந்த அரசியல் வாதி என்கிறார். அப்படியானால் கடுமையாக எதிர்தது ஏன்?

கருணாநிதியால் 2 ருபாய்க்கு 1 கிலோ அரிசி தரமுடியாது என்றார். செயலலிதா அறிவித்தவுடன் புளகாங்கிதம் அடைந்து ஆதரிக்கிறார். இதுதான் நேர்மையான அரசியல் விவாதமா?

அவர் அரசியல் பேசுகிறாரா? அவர் அரசியலை விட அதிகம் அவதூறு தான்.

முதலாளிகளின் ஏகபோக குரல் கொடுப்பவராக காட்டிக்கொண்டு ஏதேனும் பிழைப்புதான் இவரின் கொள்கையாக இருக்கிறது.

ஏகாதிபத்தியம் என்றார். உலகை சுரண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அவர் எப்போதாவது கண்டித்தது உண்டா?. அன்னிய மூலதனம் இங்கு வருவதால் இந்தியாவில் மூலதனச் சுரண்டல் நடக்கிறதே அதை எப்போதாவது அவர் கண்டித்திருக்கிறாரா?

தினகரனை திட்டி தினமலருக்கு ஆதரவு திரட்டுவது, உள்பட பல வேலைகள் இவருடையது. எப்போதாவது இவரின் ஈழ ஆதரவு கருத்துக்கு தினமலர் ஆதரவு தெரிவித்து இருக்கிறதா?

இவர் செயாத் தொலைக்காட்சியில் பேசும் போது சொன்னார். “நான் எதிர்த்தால் ஒரே அடியாய் எதிர்ப்பேன். அது போலத்தான் நான் அ.தி.மு.க வை எதிர்த்தேன் என்றார். சரண்டர் ஆனால், ஒரே அடியாய் சரண்டர் ஆவேன் என்று சொல்லாமல் தன்மானம் சுயமரியாதை பற்றி இவர் அடிக்கடி இன்னும் பேசிவருகிறார்.

ஏமாந்து விடவேண்டாம். அரசியல் நாடோடியான அவர் அடுத்த முறை கருணாநிதியை ஆதரித்து பேச வேண்டியிருக்கும். இதையெல்லாம் மறந்து விட்டு இப்படி கண்டமேனிக்கு பேசும் அவர்.

அடிக்கடி கூட்டணிமாறும் நிலையற்ற நாடோடித் தன்மையை அவர் ஒருபோதும் உணர்ந்ததாக தெரியவில்லை.

Friday, April 28, 2006

இலங்கை அரசுக்கும், மார்க்சிஸ்டு கம்யூ விற்கும் கண்டணம்



பொறுமையாகவும் உணர்ச்சிவசப்படாமலும் பிரச்சனையை கையாள வேண்டும் என்று ஆலோசனை கூறும் அந்த கட்சி இலங்கை அரசின் தாக்குதலை கண்டிக்க வில்லை.



பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை அரசின் கொலை வெறித் தாக்குதலுக்கு பயந்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் தனது வீட்டை காலி செய்து விட்டு வெளியேறி யுள்ளனர் ஆனால் மக்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டிக்காமல் விடுதலிப்புலிகளை மட்டும் எச்சரிக்கை செய்ய வலியுறுத்தும் மார்க்சிஸ்டு கட்சியின் செயல் மிகவும் கண்டிக்க தக்கது.


இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா...
காட்டு விலங்கை சுட்டாலும், அட கரடி கழுதை சுட்டாலும்
தப்பென்னு சொல்லுது சட்டம், இது உலகத்திலே பொது சட்டம்
தமிழன் உயிரை கீழே மிதித்து அழிப்பது முறையா
மனித உரிமையை மீறுதல் முறையா?

Thursday, April 27, 2006

கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும்


தேர்தல் என்றாலே எல்லோருக்கும் கேலியும் கூத்தும் தான்,
தேர்தலில் நடக்கும் போது அரசியல் கட்சிதலைவர்களை கேலி செய்வது ஒரு அளவே இல்லாமல் போய்க்கொடிருக்கிறது


யாகூ குழுவிலிருந்து வந்த மின்னஞ்சல் தகவல் கீழே:

கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் கல்யாணம்,
அந்த ஜாதிக்கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்,
அந்த பார்லிமென்டுல நடக்குதைய்யா திருமணம்,
அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம்.

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்,


மாப்பிள்ளைக்கு சொந்தபந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்க,
மாப்பிள்ளைக்கு சொந்தபந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்க,
பெண்ணுக்கு சொந்தபந்தம் வைகோ பேச்சு தானுங்கோ,
பெண்ணுக்கு சொந்தபந்தம் வைகோ பேச்சு தானுங்கோ,


அந்த ராமதாசும் திருமாவும் வரவேற்பு தானுங்கோ,
வரவேற்பு தானுங்கோ,

மாப்பிள்ள கருணாநிதி கோபாலபுரம் தானுங்க,
அந்த மணப்பொண்ணு போயஸ் தோட்டந்தானுங்கோ,
மாப்பிள கருணாநிதி கோபாலபுரம் தானுங்க,
அந்த மணப்பொண்ணு போயஸ் தோட்டந்தானுங்கோ,


இந்த திருமணத்த நடத்திவைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ,
இந்த திருமணத்த நடத்திவைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ,

இந்த மணமக்கள வாழ்த்துகிற பெரிய மனசு யாருங்கோ,
...
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...

தலைவரு விஜய காந்து தானுங்கோ!

Wednesday, April 26, 2006

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோவணம் இலவசம்

வாக்களப்பெருங்குடி மக்களே!
வணக்கம்,




பட்டு வேட்டியைப் பற்றிக் கணாக்கண்டிருந்த போது!
நாங்கள் கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.

இந்திய சுதந்திரம் பற்றி வைரமுத்து அவர்களின் கவிதை இது.



வைரமுத்து அவர்கள் சொல்வதைப்பார்த்தால் நமது கோவணம் சுதந்திரம் பெற்றவுடன் பறிபோனது.

1. ஆகவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கோவணம் இலவசமாக வழங்கப்படும்.
நாங்கள் கோவணத்தை இலவசமாகத் தருவோம் என்றவுடன் மகிழ்ந்து போயிருப்பீர்கள். நாங்கள் கோவணத்தை இலவசமாக வழங்கிவிட்டு உப்பு, புளி, மிளகாயில் விலை ஏற்றுவோம். அது உங்களுக்குத் தெரியாது.

’’நீங்கள் ரோஜாவை நேசிக்கத்தெரிந்த நிஜமான கலைஞன்
ஆனால் முட்களை மறந்து விட்ட முட்டாள்.’’

என்று வைரமுத்து சொன்னதைப்போல,

கோவணத்தை நினைத்து மற்றவற்றைக் கோட்டை விட்டு விடுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆகவே, ஒவ்வொரு ஆண்டின் இலவசத்துக்கெல்லாம் வரிகளை உயர்த்துவோம். விலை ஏற்றம் எங்களால் தவிர்க்க இயலாதது. எனவே,

2. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எல்லாப் பட்ஜெட்டின் போதும் இலவசமாக மொட்டை அடிக்கும் திட்டமும் அமல் செய்யப்படும்.
3. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிக்காதவர்க்ளுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம்.

நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் . ஏனெனில் இது தேர்தல் பிரசாரம்.

அன்னிய நாடுகளிலிருந்து மூலதனம் இந்தியாவில் குவிகிறது. அன்னிய மூலதனத்தில் தொழில் தொடங்கப்பட்டால், அதற்கான இலாபமும் அன்னிய நாட்டிற்குத்தான் செல்லும், அதனால் இந்தியாவில் தொழில் தொடங்க மூலதனம் இல்லாமல் போகும். மூலதனம் இல்லாமல் போனால் எப்படித் தொழில் தொடங்குவது?. ஏகாதிபத்திய நாய்களிடம் பிச்சை கேட்போம். அவர்கள் படிக்காதவர்களுக்கு வேலை தருவார்களா?. தரமாட்டார்கள்.

எனவே,

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், படிக்காதவர்களுக்குப் பன்றி மேய்க்கும் வேலையும், எம். ஏ படித்தவர்களுக்கு எறுமை மாடு மேய்க்கும் வேலையும் அளிப்போம்.
4. குஷ்புவின் நடனம் ஒவ்வொரு மாதம் முதல் வாரமும், சிம்ரனின் ஆட்டம் இரண்டாவது வாரமும் காட்டப்படும்.

5. நீங்கள் அறிவோடு சிந்தித்து வாக்களிக்கக் கூடாது என்பதற்காக அனைவருக்கும் இத்தனை கெடுபிடிக்கிடையிலும் இலவச சாராயம் அளிப்பது எங்கள் சாதனைகளில் ஒன்று.

6. நாங்கள் கோடி கோடியாய் கொள்ளை அடிப்பதற்கு அதிகாரம் பெற, ஏலங்களில் நாங்கள் கமிசன் பெற, உங்களுக்குப் பிச்சை காசை தூக்கி எறிவோம்.

7. நான்காவது ஆண்டு நாங்கள் கொடுத்த கோவணம் உறுவப்படும், அப்படி உருவினாலும் நீங்கள் கவலைப் படமாட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஒருவேளை
“கோவணமும் இல்லை!
கையில் காசும் இல்ல!
பாட்டுவருதே என்னபுள்ள“
என்று பாடிவிட்டு அப்படியே இருந்தாலும் இருப்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

8. ஆனால், ஐந்தாவது ஆண்டுத் தொடக்கத்தில் நாங்கள் உங்களுக்குப் புதிய கோவணம் வழங்குவோம். வழங்கிவிட்டு, நாங்கள் தான் உங்களுக்கு கோவணம் வழங்கினோம் என்று சொல்லி வாக்கு கேட்டால் நீங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு வாக்களிப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

9. பற்களே இல்லாத முதியவர்களுக்கு இலவச பல்பொடி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

10. விவசாயத்தையே நம்பி வாழும் 70 சதவிகித மக்களுக்கு ஏரிக்குளங்களை ஆழப்படுத்தித் தண்ணீர் சேமித்து வாழ்வுக்கு வழிகாட்ட திட்டமில்லை.

அப்படித் திட்டம் போட்டால் நீங்கள் சுயமாக உழைத்து முன்னேறிவிடுவீர்கள். நீங்கள் எப்போதும் பிச்சைக்காரர்களாகவே இருக்கவேண்டும்.


அப்போது தான் நாங்கள் “வள்ளல்களாக“ இருக்க முடியும்.
11. ஐந்தாவது ஆண்டு கால்களே இல்லாதவர்களுக்கு செருப்புகளும், 10 விளக்குமாறுகளும் இலவசமாக வழங்கப்படும். இவற்றை பத்திரமாக எடுத்து வையுங்கள்.

அடுத்த தேர்தலுக்கு உதவும்.