Friday, March 24, 2006

என்னங்க நாடு? எல்லாமே பிராடு.............

காவிரியில் தண்ணீர் இந்த ஆண்டு வருமா? ......?????. கடலூர், தஞ்சை, நாகை மாவட்டம் உள்ளிட்ட மக்களின் கவலை இது. ஆனால் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் இந்த மக்களின் வாழ்வு அன்றுமுதல் இன்றுவரை பல ஆண்டுகளாக கேள்விக் குறியாகவே உள்ளது.

கர்நாடகத்தில் உள்ள தேசியம் பேசுகிற காங்கிரசு, பாரதிய சனதா, பொதுவுடைமைக் கட்சிகள் அங்கு காவிரியில் தண்ணீர் விடவேண்டாம் என்றும், தமிழகத்தில் உள்ள அதே கட்சிகள் இங்கு காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என்றும் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றன.

இவர்கள் அனைவரும் அங்காங்கே மக்களை ஏமாற்றுவதிலுள்ள அக்கறை உதவுவதில் இல்லை. 1987 கவிஞர் அறிவுமதி எழுதிய பாடல் இங்கே வெளியிடப்பட்டுள்ளது. அப்போது உள்ள அதே நிலை இப்போதும் உள்ளது. எத்தனையோ தேர்தல் வந்தாச்சு, மக்கள் வாழ்வில் விடிவில் மாற்றம் இல்லை. ஆனால் மக்களின் நிலை இன்னும் மோசமாகித்தான் போனது.

எத்தனைத் தேர்தல் வந்தாலும், ஆட்சியாளர்கள் மாறினாலும் மக்கள் பிரச்சனைக்கு விடிவு இல்லை.


விடிவு எப்போது?.........?????


பிறகு வாக்களித்து என்ன பயன்?.

என்னங்க நாடு எல்லாமே பிராடு.............

தண்ணிக்கேட்டுப் போனாக்கா தண்ணிக்காட்டுறாங்கடா!
தண்ணி காய்ச்சும் பசங்களுக்கே சலாம் போடுறாங்கடா!

என்னங்க நாடு எல்லாமே பிராடு.............


ஓட்டிக் கேக்க வரும்போது கிழவிக்குத்தான் முத்தம்
கோட்டை ஏறி போனபின்னே குமரிக்குத்தான் முத்தம்

வாக்குப்பெட்டி வயித்துக்குத்தான் ஓட்டு சோறு கெடைக்குது
ஓட்ட்ப்போட்ட நம்ம வயிறோ ஒடுக்கு விழுந்து கெடக்குது.

இடைத்தேர்தல் வந்தாத்தான் ஏதோ கொஞ்சம் நடக்குது
ஜெயிச்சிப் போன எம்.எல்.ஏ செத்தாக்கா நல்லது.

என்னங்க நாடு? எல்லாமே பிராடு.............

திருடனுக்குத் திருடன் தானே தேர்தலிலே நிக்கிறான்
ஜெயிச்சி வந்தா தேசததையே கூறு போட்டு விக்கிறான்,
சட்டசபைக்குள்ளாற மட்டமான பேச்சுங்க,
குள்ளநரி கூட்டங்களின் குட்டு வெளியாச்சுங்க.

வரிகட்டா நடிகர்கள சரிக்கட்டும் ஆட்சி
வெக்கங்கெட்ட செய்திகள வெளியிட்டா போச்சு

என்னங்க நாடு? எல்லாமே பிராடு.............
கங்கைநீரை ஊத்திஊத்தி கும்பாபிசேகம் நடக்குது
தண்ணிதேடி சனங்களெல்லாம் மைலுகணக்கில் நடக்குது.

வீராணம் திட்டமெல்லாம் புஸ்வானம் ஆச்சு!
தெலுங்குகங்க திட்டத்திலும் மண் விழுந்துப்போச்சு!
எழப்பாழ எல்லோருக்கும் இலவசமா செருப்பு!
இனி ஓட்டுக் கேக்க வரும்போது அதனாலே இருக்கு!.

என்னங்க நாடு? எல்லாமே பிராடு.............

கவிஞர் கே.அறிவுமதி (1987 மே மனஓசை இதழில்)

4 comments:

Anonymous said...

தேர்தல் நடக்க இருக்கும் இந்த நேரத்தில், இப்படியெல்லாம் எழுதி எல்லாருடைய சாபத்தையும் வாங்கப் போகிறீர் நீங்கள்.

இரா.சுகுமாரன் said...

யார் யாரெல்லாம் இந்த தேர்தலில் திருடமுடியுமோ! அவர்களின் சாபம் எனக்கு எப்பொழுதும் உண்டு என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எதுவும் சாபம் இடவில்லை போலிருக்கிறது.
நன்றி!

புதுச்சேரி இரா.சுகுமாரன்

Anonymous said...

எல்லாரும் பிராடு என்றால் என்னதான் மாற்று? தேர்தலை புறக்கணிப்பது தேவையற்ற செயல். இப்படி எல்லாரையும் திட்டமுடியுமே தவிர மாற்று சொல்லமுடியாது.

கருப்பு said...

நல்ல தகவல்கள். நன்றி நண்பரே.