Friday, June 16, 2006

புதுவையில் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் இன்று மாலை (16-06-2006) 5.00 மணியளவில் புதுவை திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இலங்கை அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இலங்கை தமிழர்கள் மீது மிகவும் கொடுமையான தாக்குதலை இலங்கை அரசு நடத்தி வருகிறது. தன் சொந்த நாட்டு மக்களையே இரக்கமின்றி தாக்கி வரும் இராணுவம் தமிழ் மக்கள் மீது கொலை வன்புணர்ச்சி உள்ளிட்ட மனித உரிமை மீரல் செயல்களை செய்து வருவது மிகவும் கண்டிக்கத் தக்கது. விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி அப்பாவித்தமிழ் மக்களை அச்சுறுத்தி இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழர் தேசிய இயக்கத்தின் புதுவை பொருப்பாளர் திரு. இரா. அழகிரி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிக்கிறார்.

ம.தி.மு.க. வின் புதுவை பொருப்பாளர் திரு. முத்து, விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் திரு. வணங்காமுடி, திரு.பாவாணன், திரு.அமுதவன், பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் புதுவைச் செயலர் திரு. கோ. சுகுமாரன், செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் திரு. ந.மு. தமிழ்மணி, தந்தைப்பெரியார் திராவிடர்க்கழகத்தின் புதுவைத் தலைவர் திரு அய்யப்பன், இராவணன் படிப்பகத்தின் திரு வீராசாமி, பியூச்சர் அமைப்பைச் சேர்ந்த திரு. இராதா, அம்பேத்கார் தொண்டர் படையைச் சேர்ந்த திரு. மூர்த்தி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் கலந்து கொள்கின்றன.

இரா. சுகுமாரன், ந. இளங்கோ, கோகுல் காந்திநாதி உள்ளிட்ட பலர் இக்கண்ட ஆர்ப்பட்டதில் கலந்து கொள்கின்றனர்.

12 comments:

Anonymous said...

புதுவையைச்சேர்ந்த கட்சிகளுக்கு நன்றி!

இதுபோல தமிழகத்திலும் இந்தியா முழுதும் நடத்தப்பட வேண்டும்.

Vaa.Manikandan said...

வாழ்த்துக்கள். புதுவைத் தோழர்கள் அச்சாரம் இடுவதாக இருக்கட்டும்.

இரா.சுகுமாரன் said...

நன்றி வா.மாணிக்கம் அவர்களே!

புதுவை மட்டுமல்ல, தமிழகத்திலும் இப்போராட்டம் நடைபெறுகிறது.

யாத்ரீகன் said...

இத்தகைய போராட்டங்கள் வரவேற்கத்தக்கவை.. இதை துவக்கி வைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. நானும் என் மூலமான முயற்சிகளான இதைப்பற்றிய விழிப்புணர்வை பரப்ப முயலுகின்றேன்...

இந்த போராட்டக்குழுக்கள், போராட்டத்துடன் நின்றுவிடாமல் இந்திய ஊடகங்களினால் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் பல இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதும் என் குறிக்கோள்..

விடுதலைப்புலிகள் என்றாலே பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், அவர்கள் செய்வது தப்பு என்று, நாம் என்ன பேச வருகின்றோம் என்று காதுகொடுத்து கேட்க கூட மாட்டாத நிலையில் தான் பலர் உள்ளனர்.. :-(

Anonymous said...

புதுவை மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றிகள்

Pot"tea" kadai said...

i wish i were there...its sickening me that i cant do anything for my ppl.

Muthu said...

புதுவையுடன் தமிழகமும் சேரவேண்டும். நம்முடைய ஆதரவை தமிழர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

வெற்றி said...

இரா.சுகுமாரன்
தங்களின் தகவலுக்கு நன்றி.

நன்றி.

அன்புடன்
வெற்றி

Anonymous said...

புதுவை மக்களுக்கு நன்றியுடன் வணக்கங்கள்.

Anonymous said...

புதுவை மக்களுக்கு நன்றியுடன் வணக்கங்கள்.

தமிழினி said...

புதுவை தமிழ் நல் உள்ளங்களுக்கு நன்றி! தமிழகம், தென் மானிலங்கள் உட்பட இந்தியா முழுமையிலும் உள்ள மக்கள் ஈழத்தில் நிகளும் உண்மை நிலைகளை அறிந்திட வேண்டும். அம்மக்களின் சோக வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே சில ஊடகங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எழுதும் மனிதாபிமானமற்ற செய்திகளை மட்டும் நம்பாமல், உண்மையை அனைத்து மக்களும் அறிந்திட அனைத்து இந்திய உறவுகளும் தயவு செய்து மனிதாபிமானத்தை அடிப்படையாக வைத்து உதவிட வேண்டும்.

CAPitalZ said...

தமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம்

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/