அதனால் தான் தமிழக முதல்வர் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை விவாதிக்கலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் ஈழம் கிடைத்தால் அது தமிழகத்தில் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணியே இந்திய அரசு தமிழர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறது.
வங்கதேச விடுதலையை எந்த அடிப்படியில் இந்தியா ஆதரித்தது?. முன்பு கூட இலங்கை அரசை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் தான் இலங்கை போராளி அமைப்புகளுக்கு இந்தியா பயிற்சி அளித்தது. வங்க தேசத்திற்கு ஆதரவு அளித்த அதே அடிப்படையில் ஈழப்போராளிகளுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்.
இது அரசியல் சமுகப்பிரச்சனையேத் தவிர தனிப்பட்ட அரசியல் விரோத நடவடிக்கை இல்லை என்பதை உணர வேண்டும்.
- தேசிய விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக இழிவு படுத்தாதே!
- விடுதலைப் புலிகள் மீதான் தடையை நீக்கு!
- தமிழ் ஈழத்தை அங்கீகரி!
- சிங்கள இனவெறி அரசுக்கு உதவிகள் செய்யாதே!
- சிங்கள இராணுவமே தமிழ் ஈழப்பகுதியிலிருந்து உடனே வெளியேறு!
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 27-07-2006 அன்று திருவண்ணாமலையிலும், 31-07-2006 அன்று திருப்பத்தூரிலும் புரட்சிகர இளைஞர் முண்ணனி என்ற அமைப்பு பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: சிங்கள இனவெறி அரசை கண்டித்து கடந்த 31ம் தேதி புரட்சிகர இளைஞர் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் பேரணி நடத்த
அனுமதி கேட்டுள்ளனர். பேரணி உட்பட ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 150 பெண்கள் உட்பட 400 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் எந்த பதட்டமும்
இல்லை. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த அளவுக்கு ஆர்ப்பாட்டம் நடப்பது ஏற்கத்தக்கது தான்.ஜனநாயக்கப்பூர்வமான முறையில் முறியாக காவல்துறையின் அனுமதியின் அடிப்படையில் தான் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டத்தையும் பேரணியையும் நடத்தியுள்ளது. அதனால் தான் முதல்வர் கருணாநிதிகூட இது ஏற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். சட்டப்படி இந்த ஜனநாயக அமைப்பு முறையில் உள்ள முறைகளைப் பயன்படுத்தித்தான் இவர்கள் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
ஆனால், இத்தகைய சனநாயக உரிமைகளைக்கூட மறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதை பிரச்சனையாக்குவது இவர்களின் தமிழர் விரோதப் போக்கையே காட்டுகிறது.
தமிழனை அழிக்க தமிழ் மண்ணில் பயிற்சி கொடுக்கும் போது அதை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஞானசேகரன் சட்ட ஒழுங்கு மீது மிகவும் அக்கரையாக இருப்பதாகவும் இந்திய இரையாண்மை மீது அக்கரை உள்ளவர் போல் பேசி யிருக்கிறார். இந்திரா காந்தி கால கட்டதில் இலங்கை இரையாண்மைக்கு எதிராக காங்கிரசார் செயல்பட்டதை அவர் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
இராசீவ் கொலை காங்கிரசு காரர்களுக்கே தொடர்பு உள்ள நிலையில் மன்மோகன் சிங் அமெரிக்க உளவாளி என்ற தலைப்பில் முன்னணிப் பத்திரிகைகளில் வந்த தகவல் அடிப்படையில் சில தகவல்களை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.
"சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் சி.ஞானசேகரன் இப்பிரச்னையை கிளப்பினார்.
இலங்கையில் தமிழர்கள் போராட்டத்தை ராஜிவ்காந்தி கொலைக்கு முன்பு ஆதரிக்காதவர்கள் யாரும் இல்லை. இப்பிரச்னையில் கி.மு., கி.பி., என்பதைப் போல ராஜிவ் கொலைக்கு முன்பு, ராஜிவ் கொலைக்கு பின்பு என்று தான் பார்க்க வேண்டும். "
என்று அவர் குறிப்பிட்டது சோனியா விதவை ஆகிவிட்டார் என்பது தான் இவரின் வருத்தம். நாமும் அதற்காக வருத்தப்படலாம். ஆனால், இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இலங்கை அரசால் கொல்லப் பட்டு விதவைகளாக்கப் படும் போது அதனை கண்டிக்கக் கூடாது என்று அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி நியாயமாகும்.