Saturday, December 01, 2007

சற்று முன் செய்தி புதுச்சேரியில் குண்டு வெடிப்பு




புதுச்சேரியிலிருந்து திருப்பதி நோக்கி செல்ல இருந்த தொடர் வண்டியை இலக்காக வைத்து மர்ம நபர் புதுச்சேரி தொடர் வண்டி நிலையம் அருகில் வெடிகுண்டு வைத்திருந்தனர். அங்கு விளையாடச் சென்ற சிறுவர்கள் அந்த குண்டை எடுத்த்தால் பிற்பகல் ஒரு மணியளவில் அந்த குண்டு வெடித்து ஒரு சிறுவன் இறந்தான் மூன்று சிறுவர்கள் காயமடைந்தனர்

இந்த தொடர்வண்டி பிற்பகல் 2.45 மணியளவில் திருப்பதிக்கு புறப்பட வேண்டும். அதற்கு சற்று முன்னதாக தொடர் வண்டி சாலையில் அந்த குண்டு வைக்கப் பட்டிருந்தது.

இது பற்றி புதுச்சேரி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tuesday, November 27, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்திற்கு புதிய இணைய தளம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் புதிய இணைய தளம்

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை நடத்த திட்டமிடுவதற்கு முன்பாக பதிவு செய்வதற்காகவும், நிர்வகிப்பதற்கும் ஒரு தளம் தேவை என்றும், அதற்கான புதிய தளம் ஒன்றும் தொடங்குவது என திட்ட மிட்டிருந்தோம். ஆனால், பின்னர் அது தேவையில்லை என்று முடிவு செய்தோம்.

அதன்பின் நண்பர் வெங்கடேஷ் புதுச்சேரியில் நடத்தி வரும் தூரிகா இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று ஒரு படிவம் செய்து அனுப்பி இருந்தார், இதனால் அதில் புதிய பதிவர்களை பதிவு செய்யலாம் என முடிவு செய்திருந்தோம். ஆனால், அனைத்து தமிழ்ப் பதிவர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும், ஊர் வாரியாக பிரிந்து இருக்க வேண்டாம் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. இதனால் தமிழ் வலைப்பதிவர் பட்டறை தளத்தை பயன்படுத்தலாம் என்று கருதியிருந்தோம். அது இயலாமல் போனதால் மீண்டும், தூரிகா இணைய தளத்தில் பதிவைத் தொடங்குவது என முடிவு செய்து அதில் பதிவு செய்திருக்கிறோம்.

இந்நிலையில் திரு முகுந்த் அவர்களை பதிவர் பட்டறையில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தோம்.

எங்கள் பதிவு "பிளாக்" இல் இருந்ததால் புதிதாக ஒரு இணைய தளம் ஒன்றை பதிவு செய்து தமிழா சிஸ்டம் நிறுவனத்தின் சார்பாக எங்கள் வலைப்பதிவர் சிறகத்திற்கு அன்புடன் வழங்கியுள்ளார்.

அத்துடன் எங்கள் வலைப்பதிவர் சிறகத்திற்கு குறிப்பேடுகளை தன் செலவில் வழங்கவும் முன்வந்துள்ளார்.

அவருக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday, November 15, 2007

WORKSHOP FOR TAMIL BLOGGERS ON 9TH DECEMBER

A Workshop for bloggers on behalf of "PUDUCHERRY BLOGGERS WING" is arranged to be held on 9th December (Sunday) 2007 at Hotel Sarguru Puducherry. It is a one day programme organized by the Wing drawing experts in the field from Tamilnadu.They will impart training.

"Puducherry Bloggers wing" is an organization comprising Tamil activists, who have determined to surge ahead with Tamil computer.

Tamil, now making its presence felt in various fields of knowledge.In the field of science its usage has been enhancing. The quantum leap in the field of science has necessitated the inevitable usage of computer. Yet, Tamil usage in computer has not cut much ice. Even those who are trained well in computers, scarcely use Tamil in the system.

When we say Tamil computer, we mean employing Tamil in its entirety i-e. usage including the operating systems in Tamil extensively to its potential commensurate with the existing technology.Through computer one can learn the language of English, French, German and Dutch ,easily. At one point of time Tamil could not be accessed through the system. After introduction of Unicode font, the situation has changed dramatically. Throughout the world now one can read and write in Tamil.

Unicode font is widely used. It does not require either introduction of adequate technology, or its awareness for use, among people. If we fail to adapt to changing technologies, we may fail in our endeavour to establish Tamil in all spheres.

In the world of Internet, number of blogs has been on the increase tremendously, on day-to-day basis. With the availability of computer and internet facility, one can, without spending much, post his views comments across the world community. Blogs today continues to amplify alternative media. From local politics to international politics are dealt with.. Skits, stories, poems, essays, short films, cinema review etc. are being posted, discussed and debated on a large scale.

The proposed workshop aims to provide adequate training for using Tamil in computers on a wider basis. The morning sessions will be devoted for Tamil computers,that is, introducing operating systems and softwares in Tamil and imparting of training. Afternoon session will impart training on sending e.mail in Tamil, and writing in Tamil in blogs, with the assistance of required softwares. With the valediction in the evening, the sessions will come to a close.

The participants will be provided with a guide free of cost, which will contain Tamil software and the various details on its usage. Lunch also will be provided for all.

Since the arrangement is meant only for 100 participants.Interested beginners will be given priority for the workshop.

Interested person may get registered well in advance in www.siragam.tooriga.com , Students may remit Rs. 25/- and others Rs.50/- The registration fee may be paid at the venue.

All the updated news will be published in www.puduvaibloggers.blogspot.com .

For more details please contact R. Sugumaran, coordinator "Puducherry bloggers wing" 20, 4th Main Road Extension, Annai Theresa Nagar, Moolakulam, Puducheery -10, Phone +91 94431 05825, email: rajasugumaran@gmail.com

Thursday, October 04, 2007

அழுக்கு மூட்டை கடவுளை இவர்களே இப்படி போட்டு உடைத்திருக்கிறார்கள்

இந்து மதக்கடவுள்களை இந்து மதத்தினை சேர்ந்தவர்கள் எவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். கடவுள் பெயரால் பல்லாயிரக்கணக்கான தொகைகளை மக்களிடம் வசூலித்து சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த கொடுமைகளை யார்தான் கேட்பது. இந்து மதநடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் இவ்வாறு செய்தால் மதவாதிகள் குய்யோ முய்யோ என கத்தியிருப்பார்கள் இவர்கள், ஆனால் இந்த வாதாபி கொண்ட அழுக்கு மூட்டை கடவுளை இவர்களே இப்படி போட்டு உடைத்திருக்க்கிறார்கள்

இப்போது எங்கேப் போனார்கள் இந்த இராமன் பக்தர்கள் என்று தெரியவில்லை.

கடவுள் நம்பிக்கையை வெறும் பிழைப்புக்குக்காகவே இவர்கள் வைத்துக்கொள்வதால் இந்த பிரச்சனனகளை பற்றி பேசுவதில்லை. மத உணவுகளை தூண்டிவிட்டு மக்களை பிளவு படுத்த மட்டுமே இந்த மதங்கள் இப்போது பயன்படுகின்றன.


மக்கள் கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், ஆனால் அந்த நம்பிக்கையை போலி பிரச்சாரம் கும்மாளம் கூத்து நடத்தி அந்த மக்களின் நம்பிக்கைகளையே கேலிக்கூத்தாக்கும் இந்த போலி மதவாதிகளின் முகத்திரை கிழிப்போம்.

மதவெறிக்கு துணைபோகும் சக்திகளை அழிப்போம்.

மக்கள் நலன் காப்பவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்.

Friday, August 10, 2007

தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு குறை நிறைகள்

குறைகள்

என்பார்வையில் குறைகளை அதிகம் காணப்படவில்லை என்பதால், நான் குறைகளை முதலில் குறிப்பிட விரும்புகிறேன்.

பதிவர் பட்டறை நிறைவில் மூன்று குறைகள் சுட்டிக்காட்டினார் விக்கி அவர்கள் அவை இல்லாம ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினார்.

அவை:
1. இடம் போதவில்லை என்பது.
2. இணைய இணைப்பு மிகவும் வேகம் குறைவாக இருந்தது.
3. மதிய உணவு இடைவேளை 1.45 மணிக்கு அனுமதிக்கப்பட்ட்து ( 3வதாக சொன்னது இது தானா? என உறுதியாகத் தெரியவில்லை)

1. இடம் போதவில்லை என்பது.

முதலில் சுமார் 100 முதல் 150 பேர் வருவார்கள் என்று திட்ட மிடப்பட்டது. ஆனால் திட்டமிடலுக்கு அதிகமானவர்கள் வந்தமையால் இடம் போதாமல் போனது தவிர்க்க இயலாதது எனவே அந்த குறையை என்னால் ஏற்க இயலவில்லை.. அந்த இடம் இலவசமாக கிடைந்தது அவை இல்லாமல் சென்னைப் பல்கலைக்கழகம் அனைவரும் அறிந்த இடம் பரிச்சையமான இடம் அதிகம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம் ( கொஞ்சம் தான் தேட வேண்டியிருந்தது) என்பதால் இடம் தேர்வு சரியான ஒன்றுதான். இடம் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென 300 பேர் வந்தால் யார் என்ன செய்ய இயலும்.

2. இணைய இணைப்பு மிகவும் வேகம் குறைவாக இருந்தது.

Sify இணைப்பைத் தான் கேட்க வேண்டும் ஏனெனில் இவ்விணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. நிதிநிலைமை களை கணக்கிட்டு இலவச இணைப்பை பெற்றதால் அவர்களை கேள்வி கேட்க இயலாது. எனவே இதுவும் மிகப்பெரிய குறை என்று நான் எடுத்துக் கொள்ளவில்லை.

3. நான் குறிப்பிட விருக்கும் குறை

பதிவர் சந்திப்பு என்பது வழக்கமாக குறைவான எண்ணிக்கையுடன் இருப்பது வழக்கம் மேலும், புதியவர்கள் யாரும் அழைக்கப்படுவதில்லை. ஆனால், இப்பதிவர்கள் சந்திப்பில் புதியவர்கள் அழைக்கப்பட்ட்தால் ஏற்கனவே, பதிவர்களாக இருப்பவர்கள் யாரையும் தெரிந்து கொள்ள இயலவில்லை. என்னைப் போன்றவர்கள் உங்கள் பெயர் என்ன என்று ஒவ்வொருவாராக சென்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியிருந்த்து.

பங்கேற்பாளர் அட்டையில் திரு. தருமி அவர்கள் பெயர் எழுதியிருத்தமையால் எளிதில் அடையாளம் கண்டேன்.. காலையிலிருந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த பென்ஸ் அவர்களை மாலையில் அவர் பெயரை கேட்டு அறிந்து கொண்டேன். லுக்கி லுக், செந்தழல் ரவி, பால பாரதி, உள்ளிட்டோர் பெயர்களை தனித்தனியாக கேட்டு அறிந்து கொள்ள நேர்ந்த்து இந்த பதிவர் சந்திப்பு என்பது என்னை போன்றவர்கள் வந்த்து அதிகமான வலைப்பதிவர்களை ஒரே இட்த்தில் சந்திக்கலாம் என்று வந்தோம் ஆனால், ஒரே இட்த்தில் கூடியும் யார் யார் என்று தெரியாமலே திரும்ப வேண்டியிருந்தது.

இதனை தவிர்க்க ஏற்கனவே பதிவாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் தானாக வந்து அல்லது யேரேனும் அறிமுகம் செய்திருக்கலாம். இப்படி செய்யாமல் போனதால் என்னைப் போன்றவர்கள் வந்த்தன் நோக்கம் நிறைவேறவில்லை.

4.ஏதேனும் தீர்மானம் இயற்றி இருக்கலாம்

இவ்வளவு பேரை ஒரே இட்த்தில் கூட்டி பின்னர் கலைந்து சென்றார்கள் புதிதாக சிலருக்கு பதிவர்களாக சொல்லித்தரப் பட்ட்து என்பதைத் தவிர வேறு ஏதுமில்லை. “Un conferencing” என்று அறிவித்தமையால் எவ்வித பயனும் இல்லை.

எனவே, புதிதாக கீழ்க் கண்ட கோரிக்கைகளை வைத்து இருக்கலாம்.

1. இந்தியாவில் மிக அதிகமாக தமிழில் பிளாகர் உள்ளதால் தமிழில் உடனடியாக பிளாகர் வெளியிட கூகுல் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்திருக்கலாம்.

2.கூகில் மின்னஞ்சல் முழுமையாக தமிழில் மொழி பொயர்க்கப்பட்டுள்ளதாக கூகில் தெரிவித்துள்ளமையால் உடனடியாக கூகிலில் மின்ன்ஞ்சலை தமிழில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கலாம்.

3.Windows நிறுவப்படும் போது இந்தியா தேர்வு செய்தவுடன் இந்திய மொழிகளுக்கான ஆதரவு கூடவே செயல்படுத்த வேண்டும் என்று திரு பத்ரி அவர்கள் கூறிய கருத்தை கோரிக்கையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வைத்திருக்கலாம்.

தமிழகத்திலுள்ள பத்திரிக்கைகள் தங்களது இணையப் பக்கங்களை ஒருங்குறி எழுத்து வடிவத்தில் வெளியிட வேண்டும். என்று அங்கு விவாதித விசயத்தையும் அங்கு கோரிக்கையாக வைத்திருக்கலாம்.

மற்றபடி நன்றாக திட்டமிட்டிருந்தார்கள்.

ஓசை செல்வா தனது குரல் பதிவில் நன்றாக “சொதப்பி விட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சொல்வது யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

Friday, June 01, 2007

தேவதாசி முறையை ஆதரித்து


தேவதாசி முறையை ஆதரித்து ஒரு பதிவு வெளிவந்துள்ளது ஆனால், அந்த பதிவுக்கு நான் அளித்த பதிலை அவரால் வெளியிட முடியாது என நான் கருதுகிறேன். அதனால் அந்த தகவலை நாம் இங்கு பதிவு செய்ய வேண்டும் என்பதால் அதனை பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

அந்த பதிவில் எழுதப்பட்டுள்ள வாசகம் பின்வருமாறு:

////இதெல்லாம் தெரியாத இராமசாமி நாயக்கன் 'உங்காத்து பெண்களை ஏன் தேவதாசி ஆக்கக்கூடாது?' என்ற குதர்க்கமான கேள்வி கேட்டு வழிவழிவந்த அந்த புனிதமான இறைவன் சேவையை நிறுத்திவிட்டார்.

அதன் விளைவு? சுத்தமில்லாத பெண்களுடன் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி வேண்டாத வியாதிகளான கொனேரிய, சிலிபஸ் மற்றும் உயிர்கொல்லி நோயான எஸ்ட்ஸுக்கும் எல்லா சாதியினரும் பலியாக வேண்டி இருக்கிறது. பொதுவில் பார்த்து வந்த நிர்வாண நடனங்களை இப்பொழுது சிடி போட்டு மறைவாக பார்க்கும் இழிநிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.////

முழுமையாகப் படிக்க இங்கே இணைக்கப்பட்டுள்ள இந்த தளத்தை தேவதாசியை ஒழித்ததால் எய்ட்ஸ் அதிகரித்தது படிக்கவும்.

தேவதாசி முறை மிகவும் புனிதமானது என்றும் அதனை தந்தைப் பெரியார் குதற்கம் பேசி நிறுத்திவிட்டதாக அந்த நண்பர் வருத்தப்படுகிறார். சுத்தமானவர்கள் அந்த தொழிலை தொடர்வதில் நமக்கு ஏதும் மறுப்பில்லை. இங்கே இதுபற்றிய முந்தய சம்பவம் ஒன்றை கீழே தருகிறேன்.

தேவதாசியை அகற்றும் தன்மையில் சென்னை மாகாணச் சட்ட மேலவையில் 02-02-1929 ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்பு மசோதாவை முத்துலட்சுமி அம்மையார் கொண்டு வந்தார் இதனை பல பழமை வாதிகள் எதிர்த்தனர் காங்கிரசு சுயராச்சிய கட்சியின் சத்திய மூர்த்தி அய்யர் இதனை மிக கடுமையாக எதிர்த்தார்.

தேவதாசி முறை நம்மால் உருவாக்கப் பட்டதல்ல அது நீண்ட காலத்துக்கு முன்னர் நம் முன்னோர்களால் உருவாக்கப் பட்டது இன்றைய சமூகத்துக்கும் அது தேவைப்படுகிறது இவர்கள் கோவில்களில் தொண்டு செய்வதற்காக சாஸ்திரப்படி அமர்த்தப்பட்டவர்கள் தேவதாசி முறையை அகற்றிவிட்டால் அது கடவுளுக்கு எதிரான செயல் எனவே இந்த மசோதா முறைகேடானது என உரக்கப் பேசினார்.

பெண்ணுலகை இழிவு படுத்தும் இந்த கருத்தை எதிர்த்து முத்துலட்சுமி ரெட்டி சட்ட மன்ற மேலவையில் பின்வருமாறு பேசினார்.
" எங்கள் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் கடவுள்களுக்குத் தேவதாசிகளாகத் தொண்டு செய்வதை நீண்டகாலமாக செய்து விட்டோம். அப்படிப்பட்ட புனிதமானதும் கடவுளுக்கு உரியதுமான தொண்டினை இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களின் வகுப்பைச் சார்ந்த பெண்கள் செய்யட்டும்" என்று பளீரென்று பேசினார்.'

அதன் பின் இனிமேல் அந்த தொழிலைப் பார்ப்பனர்கள் தொடர்ந்தால் நாங்கள் ஆட்சேபிக்க வில்லை என்று சொன்னவுடன் தான் அவர்களுக்கு புரிந்தது ஆனால், இங்கு பலருக்கு அது புரியவில்லை.

அதனால், நானும் தான் கேட்கிறேன். தேவதாசித் தொழில் செய்வதற்கு  எத்தனைப் பார்ப்பனத்திகள் தயார் என்று?.

Tuesday, April 03, 2007

பந்த் - கேள்வியும் பதிலும்


மக்கள் ஆட்சி தான் இங்கு நடக்கிறது, உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்த நாட்டில் மக்கள் பிரதிநிதிகள் சட்ட ரீதியாக இயற்றிய சட்டத்தை ஒரு நீதி மன்றம் தடை செய்கிறது.

இது இந்திய நிலைமை நிறுவனமாகிக் கிடக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த நிறுவனமயம் என்பது ஒரு அபாயமான நிகழ்வாகும்.

நிறுவனமாக்கப்பட்ட நிலையில் இது மக்கள் ஆட்சி என்றும் மக்கள் தான் தீர்மான சக்தி என்பது போல பேசப்படுவது ஒரு மிகப்பெரிய பொய்யுரையாகும்.

இது சனநாயகம் மக்கள் சனநாயகம் இல்லை. இது போலி சனநாயகம் என்பதை நமக்கு மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்துகிறது இந்த நிகழ்வுகள்.

மக்களே புரிந்து கொள்ளுங்கள்!

மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் அதிகாரம் இல்லாத இந்த சனநாயகம் உலகின் மிகப்பெரிய போலி சனநாயகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!.
************

நண்பர் சிந்தாநதி அவர்கள் பதிவில் நான் அளித்த பதிலும் அவரது கேள்வியும் இதில் கொடுத்துள்ளேன்.

சிந்தாநதி அவர்களின் கேள்வி சிவப்பு நிறத்திலும் எனது பதில் தடித்த எழுத்திலும் உள்ளது.
இது குறித்து நண்பர்களின் கருத்தை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

1.இந்த மாதிரி பந்த் களை ஊக்குவிப்பது குறித்து எனக்கு உடன்பாடில்லை.//

உங்களுக்கு உடன்பாடா இல்லையா என்று கேட்டபின் வேலை நிறுத்தம் அறிவிக்க முடியாது.

பெரும்பான்மை மக்கள் மீது அக்கரை இல்லாதவர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

//நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு இப்படி போராட்டம் பந்த் என்று செல்வது மிகப்பெரிய மூடத்தனம். //

அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கினால் அரசு என்ன செய்ய இயலும்.

மாநில அரசுகள் இட ஒதுக்கீடு தொடர்பான புள்ளிவிவரங்களை வைத்துள்ளன. 1991 ஆம் ஆண்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் படி எல்லா மாநில அரசுகளும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிற்படுத்தப் பட்டோர் பற்றியை விவரம் சேகரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநில அரசுகள் புள்ளிவிவரங்களை சேகரித்து வைத்துள்ளன.

ஆனால், சரியான விவரம் இல்லை என்று கூறி தடை அறிவித்திருப்பது தான் உணமையான முட்டாள் தனம். இல்லை இல்லை. பார்ப்பனியத்தனம்.


பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஒப்புதல் பெறப்பட்ட ஒரு சட்ட வடிவை இரு நீதிபதிகள் தடை செய்கிறார்கள் என்றால் அரசு அதற்கு கண்டனம் தெரிவிக்கிறது. எனவே அது சரி!..


அதற்கு உங்களைப்போன்றோரின் உடன்பாடு தேவையில்லை.
மக்களாட்சி என்று சொல்லப்படும் இந்த நாட்டில் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் முடிவுகளை மாற்றும் இந்த தீர்ப்புதான் பெரும்பான்மை மக்களுக்கு உடன்பாடில்லாதது.



உங்களைப் போன்றோர் இப்படி எழுதுவதும் தான் பலருக்கு உடன்பாடில்லாதது.


//இப்படி ரோட்டுக்கு வந்து போராட்டம் செய்வது அதனினும் மூடத்தனம்.//

இப்படி அமைதியாக போராட்டம் நடத்த்க்கூடாது தான்.
காலம் காலமாக இப்படி பெரும்பான்மை மக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்குபவர்களுக்கு எதிராக அமைதிப் போராட்டத்தை நானும் கண்டிக்கிறேன்.


இந்த போராட்டத்தால் அவர்கள் திருந்தபோவதில்லை. அவர்கள் திருந்துகிற மாதிரியான போராட்டம் நடத்தப் படவேண்டும்.
கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007


2. அதுக்காக ஒரு அரசாங்கமே அடைப்பு நடத்தலாமோ?
அப்ப அரசியல் கட்சிகளும் தங்கத் தலைவ/வி கள் கைதுகளுக்கு பந்தும் மறியலும் நடத்துவதை ஆதரிக்கலாமா? ஒட்டு மொத்தமாக பந்த்/அடைப்பு தவிர்க்கப் பட வேண்டும் கவன ஈர்ப்பு/ சிந்திக்க வைக்க மக்களுக்கு அடையூறு தராத புதிய வழியை கண்டு பிடிக்க வேண்டும்...
இல்லா விட்டால் அவர்கள் பஸ்ஸை கொளுத்து என்று யாராவது கொளுத்துவதில் வந்து முடியும்...
கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007


3. //உங்களுக்கு உடன்பாடா இல்லையா என்று கேட்டபின் வேலை நிறுத்தம் அறிவிக்க முடியாது.
பெரும்பான்மை மக்கள் மீது அக்கரை இல்லாதவர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.//

நிச்சயமாக முடியாது. அது என் கருத்து அவ்வளவுதான். மறுப்புக் கருத்து கூற உங்களுக்கு உரிமை உண்டு.
ஆனால் பெரும்பான்மை மக்கள் என்று கூறி பிஜேபித்தனமான பதில் உங்களிடமிருந்து வந்திருப்பதுதான் எனக்கு ஆச்சரியமளிக்கிறது.
கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007


4. நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்தை தீர்ப்பாக வழங்க முடியாது. அவர்கள் நீதிமன்ற விவாதங்களின் வழியில்தான் தீர்ப்பு வழங்க முடியும்.
//பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஒப்புதல் பெறப்பட்ட ஒரு சட்ட வடிவை இரு நீதிபதிகள் தடை செய்கிறார்கள் //


அப்படி ஒரு முட்டாள் தனத்தை எந்த நீதிபதியும் செய்யமுடியாது. இதில் இந்திய அரசியல் சட்டப்படி அனுமதிக்கப்பட்டு பிறரால் தொடுக்கப் பட்ட வழக்கின் விசாரணையில்தான் இந்த தீர்ப்பே தவிர அவர்களின் சொந்த விருப்பப்படி கொடுத்த தீர்ப்பு அல்ல.
கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007


5. //அதுக்காக ஒரு அரசாங்கமே அடைப்பு நடத்தலாமோ?//
அரசு தன் கொள்கைகளுக்கு எதிராக உள்ள செயலை கண்டித்து பெரும்பான்மை மக்கள் நலனுக்கு ஆதரவாக பந்து நடதுவதில் தவறில்லை.

//அப்ப அரசியல் கட்சிகளும் தங்கத் தலைவ/வி கள் கைதுகளுக்கு பந்தும் மறியலும் நடத்துவதை ஆதரிக்கலாமா? ஒட்டு மொத்தமாக பந்த்/அடைப்பு தவிர்க்கப் பட வேண்டும் கவன ஈர்ப்பு/ சிந்திக்க வைக்க மக்களுக்கு அடையூறு தராத புதிய வழியை கண்டு பிடிக்க வேண்டும்...
இல்லா விட்டால் அவர்கள் பஸ்ஸை கொளுத்து என்று யாராவது கொளுத்துவதில் வந்து முடியும்...//

தங்கத்தலைவி கொள்ளை அடித்ததற்கான தீர்ப்பில் செயலலிதான் போன்றத் தனிநபரை காப்பாற்றுவதற்காக இப்படி போராட்டம் நடத்தினால் தவறு. இது செயலலிதா போன்றோரின் தனிப்பட்ட பிரச்சனை இல்லை இது. மக்களின் பிரச்சனையாக இருப்பதால் இப்படி போராட்டம் நடத்துவது சரியான நடவடிக்கைதான்.

பந்த் என்ற பெயரில் பேருந்தை கொளுத்துவது தவறு. அப்படி ஏதும் இந்த போராட்டத்தில் நடக்கப் போவதில்லை. செயல்லிதா கட்சியினர் வேண்டுமானால் அப்படி எதாவது செய்துவிட்டு சிலநாட்கள் வேலையற்றத்தனமாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்க்லாம்
தர்மபுரி போருந்து எரிப்பு என்பது தங்கத்தலைவியிடம் நல்ல பெயர் வாங்க இப்படி அப்பாவி மாணவிகளை எரித்தார்கள் இத்தகைய போராட்டம் கண்டிக்கத்தக்கது தான்.



போராட்டம் என்றால் எல்லாம் ஒன்று தான் என்று பார்க்கும் உங்கள் பார்வை தவறானது.


கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007



6. மன்னிக்கவும் நண்பர் சுகுமாரன்
ஜெயல்லிதா விவகாரத்தில் பஸ்கொளுத்தப் பட்டதில் மாணவிகளை உயிரோடு எரிந்தார்கள். ஆனால் அதற்கு முன்பும் பின்பும் பஸ்கள் எரிக்கப் பட்டுள்ளன. உயிர்ப்பலி இல்லை என்பதற்காகவே அவை சரியென்று சொல்ல முடியுமா?


மேலும் இது மாணவர்கள் தொடர்புடைய விஷயம். இதில் வன்முறை நிகழாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அரசு போராட்டம் அறிவித்து பரத்த பாதுகாப்பையும் உறுதி செய்து வெற்றிகரமாக நடத்திக் காட்டலாம். அதன் பலன் என்ன?


வருங்கால தலைமுறைக்கு இப்படி ஒரு முட்டாள்தனமான போராட்டங்களை வழிகாட்டியாக விட்டுச் செல்லாமல் இருப்பது சிறந்தது.
மற்றபடி இட ஒதுக்கீடு சட்டமாகி அது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கும் தீவிர விருப்பம் உண்டு.
கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007



7. +11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111 ;-)
கூறுவது: பெனாத்தல் சுரேஷ் Saturday, 31 March 2007

8. //நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்தை தீர்ப்பாக வழங்க முடியாது. அவர்கள் நீதிமன்ற விவாதங்களின் வழியில்தான் தீர்ப்பு வழங்க முடியும். //

அய்யா,
சமீபத்தில் சென்னை மாநகராட்சித் தேர்தல் தொடர்பான தீர்ப்பு ஒன்று வந்தது.

ஒருவர் சொன்னார் மறு தேர்தல் நடத்தத் தேவையில்லை என்று சொன்னார்.


மற்றொருவர் மறு தேர்தல் நடத்தப் படவேண்டும் என்று சொன்னார்.


அப்படியானால் இரு நீதிபதிகளில் யார் தீர்ப்பு சரியானது?.


இட ஒதுக்கீடு தொடர்பாக 9 நீதிபதிகள் அடங்கியத்தீர்ப்பு உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவது சரி என்று தீர்ப்பளித்தார்கள்.


ஆனால்,
இரண்டு நீதிபதிகள் அதனை தடை செய்தார்கள்
அப்படியானால் எது சரி?


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிமன்றத் தீர்ப்புகளில் ஊழல்கள் இருப்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். எனவே,
தீர்ப்புகள் நியாயமாக வழங்கப்படுவதில்லை என்பதே நீதிமன்றத்தலைமை நீதிபதியின் கூற்று என்பதை மறக்க வேண்டாம்.


சமீபத்தில் வழக்குறைஞர் பா. வே. பக்தவச்சலம் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். நீதியைத் தேடி தயவு செய்து நீதிமன்றத்திற்கு வாராதீர்கள் என்று சொன்னார். இது எதைக்குறிக்கிறது?.
நீதிமன்றங்கள் அநீதிமன்றங்கள் அநீதி மன்றங்களாக உள்ளன என்பதைத்தான் மேலே உள்ள தகவல்கள் நமக்குச் சொல்லும் தகவல்களாகும்.
நீதிமன்றத் தீர்ப்புகளே பல நேரங்களில் கோளாரான தீர்ப்புகளை வழங்கியுள்ளன. என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.

////பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஒப்புதல் பெறப்பட்ட ஒரு சட்ட வடிவை இரு நீதிபதிகள் தடை செய்கிறார்கள். // //

//அப்படி ஒரு முட்டாள் தனத்தை எந்த நீதிபதியும் செய்யமுடியாது. இதில் இந்திய அரசியல் சட்டப்படி அனுமதிக்கப்பட்டு பிறரால் தொடுக்கப் பட்ட வழக்கின் விசாரணையில்தான் இந்த தீர்ப்பே தவிர அவர்களின் சொந்த விருப்பப்படி கொடுத்த தீர்ப்பு அல்ல.//

எந்த நீதிபதி என்ன நினனக்கிறோ அது தான் தீர்ப்பாக் பெரும்பாலும் இருக்கிறது.

அப்படி இல்லை எனில் கீழ் நீதிமன்ற வழங்கிய அதே வழக்கில் மேல் நீதிமன்ற மற்று மொரு தீர்ப்பு வழங்க வேண்டியதில்லையே!

மேலே சொனத்தீர்ப்பு தொடுக்கப் பட்ட வழக்கில் வழங்கப் பட்ட கோளாரான தீர்ப்பு. எந்த தீர்ப்பு சரி! என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007


9. நீதித்துறையிலும் ஊழல் இருப்பதை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனாலும் இம்மாதிரி வழக்குகளில் லஞ்சம் என்று கூற முடியுமா?

இரு நீதிபதிகளும் வெவ்வேறாக தீர்ப்பளித்தது என்பதும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. சில நுட்பமான சட்டவிதிகளில் உள்ள வழக்கமான ஓட்டைகள் குறித்த வியாக்கினங்களை இரு நீதிபதிகளும் வேறுவேறாக அறிந்து வைத்திருந்தது கூட காரணமாகியிருக்கலாம்.
கீழ்நீதிமன்றங்களில் ஏற்படும் இதுபோன்ற தவறுகளை சீர் செய்ய வேண்டியே அப்பீல் போன்றவை...



அதேசமயம் இப்படி போராட்டம் நடத்துவதால் அவர்கள் தங்கள் தீர்ப்பை திருத்திவிடப் போகிறார்களா?


கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007


10. //நீதித்துறையிலும் ஊழல் இருப்பதை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனாலும் இம்மாதிரி வழக்குகளில் லஞ்சம் என்று கூற முடியுமா?//

இந்த் மாதிரித் தீர்ப்புகளில் பார்பனியம் தான் மேலோங்கியுள்ளது.
இதில் ஏதும் நுட்பம் இல்லை.


உயிரோடு இருப்பவனை கொண்றதாக கூறி தண்டனை பெற்றப் பின் நீதிமன்றத்தில் கொலையானவர் நேரில் வந்ததெல்லாம் வரலாறு.
இதில் என்ன நுட்பம் உள்ளது. ஒழுங்காக விசாரிக்க வில்லை என்பதைத் தவிர!.



காசு கொடுப்பவனுக்கு ஆதரவாக எவனையாவது பிடித்துப் போட்டு குற்றவளியாக தீர்ப்பு எழுத வேண்டியது தான்.
அது போகட்டும்!

இந்த நீதி மன்ற ஒழுக்க கேடானது என்பதை நிரூபிக்கவே இலஞ்சம் கொடுத்து இந்திய குடியரசு தலைவரையே கைது செய்ய நீதிமன்றத்தில் ஆணை பெற்றேன் என்றார் ஒரு வட இந்தியர்.


இந்தகையத் தீர்ப்பில் என்ன சட்ட நுணுக்கம் உள்ளது என்று சொல்ல முடியுமா? .


இந்த் தீர்ப்பு வழங்கப்பட்டது முழுக்க முழுக்க இலஞ்சம் தான்.
அய்யா நீதிமன்றமே பிராடு அதற்கு சட்டம் நுணுக்கம் என்று சொல்லி வக்காலாத்து வாங்க வேண்டாம்.


அதெல்லாம் ஒரு பொடலங்காயும் இல்ல...................!


திருட்டுத்தனம் அயோக்கியத்தனம் இப்போது நீதிமன்றத்திலும் நிறைந்து கிடக்கிறது.


கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007


11. //திருட்டுத்தனம் அயோக்கியத்தனம் இப்போது நீதிமன்றத்திலும் நிறைந்து கிடக்கிறது.//

நீதிபதியாக நியமனம் பெற அரசியல்வாதிகளின் சிபாரிசு இன்று தேவைப்படுகிறது. நடுநிலையான வழக்கறிஞர்களுக்கு பதிலாக கட்சிகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தவர்களுக்கே நீதிபதி பதவி கிடைக்கிறது. இவையெல்லாம் நீங்கள் கூறும் குறைபாடுகளுக்கு காரணம் தான்.
கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007


12. //அதேசமயம் இப்படி போராட்டம் நடத்துவதால் அவர்கள் தங்கள் தீர்ப்பை திருத்திவிடப் போகிறார்களா?//

இராசாசி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்த போது பெரியார் சொன்னார், ஒரு டின்னுல மண்ணெண்ணையும், தீப்பெட்டியும் தாயாராக வைத்துக் கொள்ளுங்கள் நான் என்றைக்கு சொல்கிறேனே அன்றைக்கு அக்கிரகாரத்தை போட்டு கொளுத்துங்கள் என்று பெரியார் சொன்னாராம்.

அப்படி ஏதேனும் செய்தால் தான் திருந்துவார்களோ தெரியவில்லை.
கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007


13. இரா.சுகுமாரன் ஐயா,
ந(க்க)ல்லா 'அடிச்சு' ஆடுறிங்க !
பாராட்டுக்கள் !
கூறுவது: கோவி.கண்ணன் Saturday, 31 March 2007

14. நன்றி கோவிக்கண்ணன் அய்யா!
கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007

15. சிந்தாநதி பதில் ஏதும் அளிக்கமையால்
வேலை நிறுத்தம் சரியானதே என்று சொல்லி
இறுதி தீர்ப்பு வழங்குகிறேன்
அனைவருக்கும் நன்றி
இரா. சுகுமாரன்
கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007




16. ஐயா வேலை நிறுத்தம் சரியானது என்ற முடிவு எனக்கு இன்னும் ஏற்புடையதாக தோன்றவே இல்லை. ஆனால் தீர்ப்பு பற்றி நீங்கள் கூறிய சில விஷயங்கள் சிந்திக்க வைப்பதாக இருந்தன.

ஆனாலும் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வெறும் சொந்தவிருப்பு அடிப்படையிலோ, பிறரின் நிர்ப்பந்தத்தினாலோ, சார்பு நிலையிலோ வழங்க முடியும் என்று நினைக்க சற்று தயக்கமாகவே உள்ளது. அந்த தீர்ப்பு நகல்கள் சில நாட்களில் வெளியாகி சட்ட நிபுணர்களால் பொது அரங்குகளில் விவாதிக்கப் பட வாய்ப்பு உள்ளது. அப்போதுதான் இதுபற்றி சரியாக சொல்லமுடியும்.
கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007

17. வியாபாரத்தை சட்டப்படியான மோசடி, அங்கீகரிக்கப் பட்ட திருட்டு என்று சொன்னார் ஒரு அறிஞர்.

******
அலகாபாத் நீதிமன்றம் காவல் துறை பற்றி ஒரு தீர்ப்பு ஒன்றை வழங்கி இருந்தது.


" சட்ட ரீதியாக ஒன்று திரட்டப் பட்ட மிகப் பெரிய சட்ட விரோத, சமூக விரோத ரவுடிக் கும்பல் போலிசு தான் என்று ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தது".

அதை எதிர்த்து அந்த மாநில அரசு காவல் துறையினர் மனரீதியாக பாதிக்கின்ற தீர்ப்பு இது, எனவே இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுங்கள் என்று மேல் முறையீடு செய்தது.

ஆனால், நீதிமன்றமோ இந்த தீர்ப்பு சரியானது தான், நன்றாக ஆய்வு செய்த பின்பே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறி மாநில அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

ஆனால், இந்த நீதிமன்ற அயோக்கியத்தனத்தைப் பற்றி கருத்துக் கூறவேண்டுமானால் நீதிமன்ற அவமதிப்பு அப்படி இப்படி என்று சொல்லி வெள்ளைக்காரன் காலத்து சட்டத்தை வைத்து ஏமாற்றி வருகிறார்கள் இவர்கள்.


போலீசு மீது தீர்ப்பு வழங்க இந்த நீதி மன்றத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதனால் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.


ஆனால், பெரும்பான்மை மக்களுக்கு நீதிமன்றங்கள் பற்றி கருத்துக்கூற வாய்ப்பில்லை, எனவேதான் அவர்களை இப்படி அமைதியான முறையில் வேலைநிறுத்தம் (பந்த்) என்ற முறையில் தமது எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். அரசுக்கும் கூட இது தான் நிலையாக உள்ளது. அரசு கூட நீதிமன்றத்தை எதிர்த்து கருத்துக் கூறமுடிவதில்லை.


நன்றாக சிந்தித்துப் பார்த்தீர்களானால் தான் இது புரியும்.
புரிந்தும் புரியாதது போல் நடித்தால் அதற்கு நான் பொருப்பேற்க முடியாது.



//ஆனாலும் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வெறும் சொந்தவிருப்பு அடிப்படையிலோ, பிறரின் நிர்ப்பந்தத்தினாலோ, சார்பு நிலையிலோ வழங்க முடியும் என்று நினைக்க சற்று தயக்கமாகவே உள்ளது. அந்த தீர்ப்பு நகல்கள் சில நாட்களில் வெளியாகி சட்ட நிபுணர்களால் பொது அரங்குகளில் விவாதிக்கப் பட வாய்ப்பு உள்ளது. அப்போதுதான் இதுபற்றி சரியாக சொல்லமுடியும்."//


கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு,
எல்லாம் வெட்ட வெளிச்சம் பின் எதற்கு அறிஞர்கள் அப்படி இப்படி என்று விளக்கம் சொல்ல வேண்டும்.

நதி நிந்தினால் தான் அது நதி.
இல்லையானல் அது வரட்சி நிலம்.
சிந்தியுங்கள்
பந்த் என்பது முட்டாள் தனமல்ல.
அரசுக்கும் கூட வேறு வழியில்லாமல் தான் இத்தகைய போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.


கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007

18. சுகுமாரன் ஐயா,
தங்கள் பின்னூட்டங்களை தொகுத்து தனிப்பதிவாக இடுங்கள்
கூறுவது: கோவி.கண்ணன் Saturday, 31 March 2007
இப்பதிவு திரு கோவிக்கண்ணன் அவர்கள் விருப்பத்திற்கினங்கவே இங்கு பதிவாகியுள்ளது.
நண்பர் கோவிக்கண்ணன் அவர்களுக்கு நன்றி

Tuesday, March 06, 2007

தமிழக மீனவர்கள் படுகொலை: கண்டனப் பொதுக்கூட்டம்

புதுச்சேரியில் வரும் 08-03-2007 அன்று மாலை 5.00 மணியளவில் சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெறுகிறது.

தோழர் தியாகு சிறப்புரையாற்றுகிறார்.
தோழர் லோகு அய்யப்பன் தலைமை வகிக்கிறார்.

------------------------------------

ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்க சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ உதவியா?

இலங்கைக் கடற்படை இந்தியக் கடற்பரப்புக்குள் மீன்பிடித் தொழில் செய்து வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுப் படுகொலை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது, தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகள் இதனைக் கண்டித்தும் தமிழக மீனவர்களின் மீதான இத்தாக்குதல் நின்றபாடில்லை. அண்மையில் கடந்த 15 நாட்களுக்கு முன் மீண்டும் சிங்கள இனவெறிக் கடற்படை தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய அரசு, கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது.

14.02.2007: நாகப்பட்டிணம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறிமுதல் செய்துள்ளது, துப்பாக்கிச் சூட்டில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்து பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

16.02.2007: புதுக்கோட்டை அருகே அய்யம்பட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்களைச் சுற்றி வளைத்த சிங்கள கடற்படை மீனவர்களை கடுமையாகத் தாக்கியதோடு அவர்களின் வலைகள், படகுகளைச் சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

24.02.2007: இராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படைச் சுட்டதில் அருள்தாசு என்பவர் பலத்த காயமடைந்துள்ளார், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திற்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. மேலும், அப்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட படகுகளைச் சுட்டுத் துரத்தியுள்ளனர்.

26.02.2007: நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர் நள்ளிரவு 2.00 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போது சிங்களக் கடற்படைச் சுற்றி வளைத்துச் சுட்டுள்ளனர். இதில் மீனவர்கள் கலியபெருமாள், அஜீசுகுமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலியபெருமாள் சிகிச்சைப் பலன் அளிக்காமல் இறந்துபோனார்.


இவை தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குச் சில சான்றுகள். இதுதவிர, அன்றாடம் மீனவர்கள் சிங்களக் கடற்படையின் தாக்குதலைச் சந்தித்து வருகின்றனர். கடலையே நம்பி வாழும் மீனவர்கள் உயிர் அச்சத்துடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி இந்திய அரசும், தமிழக அரசும் கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

காவிரி நதிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், பாலாறு அணைக்கட்டும் விவகாரம் என அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு மத்திய
அரசு துணைபுரிந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதிலும். தமிழக மீனவர்களைக் காப்பதிலும் இந்திய அரசு தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது.

பாகிஸ்தான் எல்லையில் ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்டால் கூட உடனடியாக நடவடிக்கையில் இறங்கி திரும்பித் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது இந்திய இராணுவம். ஆனால், அண்டை நாடான இலங்கைக் கடற்படை அத்துமீறி இந்தியக் கடலுக்குள் நுழைந்து தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றும் இந்திய கடற்படை அமைதியாக இருப்பது ஏன்? தமிழர்களின் நலன் மீது இந்திய அரசுக்கு உள்ள அக்கறை இவ்வளவுதானா? இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி தமிழினத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.


தமிழகத்தின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களைக் காப்பதற்குப் பதிலாக, இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்கியுள்ளது இந்திய அரசு. அண்மையில்கூட இலங்கைக்குக் கடலோர காவல்படைக்குத் தேவையான கப்பல்களை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள இராணுவத்திற்கு உதவி. தமிழக மீனவர்களைக் கொல்ல சிங்கள கடற்படைக்கு உதவி. இந்திய அரசின் மனதநேயம் இதுதானா?

ஈழத் தமிழர்கள் - தமிழகத் தமிழர்கள் உரிமைகளைக் காக்கவும், தமிழர்களின் குரல் தில்லி செங்கோட்டைச் சுவர்களைத் தாண்டி, மத்திய ஆட்சியாளர்களுக்கு எட்டவும் இந்தக் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

Saturday, February 24, 2007

அனாதையாய் கிடந்த ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்

ஒரு இளம் தம்பதி உலகின் பல்வேறு இடங்களை சுற்றிவரும் நோக்கோடு இந்தியாவிற்கும் வந்தது. இந்தியாவின் வடமாநிலங்கள் சிலவற்றை சுற்றிவிட்டு இறுதியாக புதுச்சேரிக்கு வந்தது. புதுச்சேரி வந்த அன்று மாலையே அவர்களின் கைப்பை தொலைந்து போனது.

அதில் ஒரு கேமரா விலை ரூ 40,000/- மதிப்புடையது, இந்திய ரூபாய் 10,000/-
அமெரிக்க டாலர் 50/- மற்றும் ஒரு கிரிடிட் கார்டு, வங்கியின் ஏ.டி.எம் கார்டு ஒன்று, இரண்டு செல்போன்களின் சிம் கார்டுகள், செல்போன்கள் இரண்டு மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிமோன் என்பவரின் பாஸ்போர்ட், இந்தியாவை விட்டு செல்வதற்கான விமான பயனச்சீட்டு, உள்ளிட்ட பல பொருட்கள் அதில் இருந்தன.




Tuesday, February 06, 2007

கடலூர் மாவட்ட நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கண்டனம்

பண்ருட்டி வழக்கறிஞர்கள் சங்கசெயற்குழு உறுப்பினர் திரு. இரா. வைத்தீஸ்வரன், மற்றும் கடலூர் வழக்கறிஞர் ம. இரவி ஆகியோர் அளித்த கூட்டறிக்கை.


கடலூர் மாவட்ட நீதிபதி திரு கே. பாஸ்கரன் அவர்கள் தனது B.R. No. 78/2007 நாள் 08-01-2007 அன்றைய உத்தரவின் மூலம் பண்ருட்டி சார்பு நீதிபதி நீதிமன்றம் மற்றும் பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிபதி நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களுக்கு INVERTOR மற்றும் UPS ஆகிய கருவிகளை பண்ருட்டி வழக்கறிஞர் திரு.சீனு. ஜெயராமன் அவர்கள் தனது சொந்த பணத்தில் நிறுவுவதற்கான அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேற்படி உத்தரவின் பேரில் மேற்படி சீனு.செயராமன் இரு நீதிமன்றங்களுக்கும், மேற்படி மின்சாதனங்களை சுமார் ரூ. 25, 000/- செலவில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிறுவியுள்ளார்.
  1. உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல், கடலூர் மாவட்ட நீதிபதி இத்தகைய அனுமதி வழங்கியது தவறு.
  2. தனிப்பட்ட ஒருவரின் நிதி கொண்டு நீதிமன்றத்திற்கு வசதி ஏற்படுத்தி தறுவது தவறான முன்னுதாரணம், அதிலும் அந்த தனிப்பட்ட நபர் ஒரு வழக்கறிஞராக இருக்கும் போது நீதிமன்றத்தின் நடுநிலை கேள்விக்குள்ளாகிறது.

  3. நீதிமன்றம் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். நீதிபதிகளின் செயல்பாடுகளும் பொதுமக்கக்கு நம்பிக்கை அளிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். தேவையற்ற சந்தேகங்கள் எழ இடம் அளிக்கக்கூடாது.


எனவே, நாங்கள் கடலூர் மாவட்ட நீதிபதியின் உயர்நீதிமன்ற அனுமதி பெறாமல் தன்னிச்சையாக அவர் மேற்கொண்ட செயலை வன்மையாக ஆட்சேபிக்கின்றோம் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.