Saturday, December 01, 2007

சற்று முன் செய்தி புதுச்சேரியில் குண்டு வெடிப்பு




புதுச்சேரியிலிருந்து திருப்பதி நோக்கி செல்ல இருந்த தொடர் வண்டியை இலக்காக வைத்து மர்ம நபர் புதுச்சேரி தொடர் வண்டி நிலையம் அருகில் வெடிகுண்டு வைத்திருந்தனர். அங்கு விளையாடச் சென்ற சிறுவர்கள் அந்த குண்டை எடுத்த்தால் பிற்பகல் ஒரு மணியளவில் அந்த குண்டு வெடித்து ஒரு சிறுவன் இறந்தான் மூன்று சிறுவர்கள் காயமடைந்தனர்

இந்த தொடர்வண்டி பிற்பகல் 2.45 மணியளவில் திருப்பதிக்கு புறப்பட வேண்டும். அதற்கு சற்று முன்னதாக தொடர் வண்டி சாலையில் அந்த குண்டு வைக்கப் பட்டிருந்தது.

இது பற்றி புதுச்சேரி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: