Friday, November 14, 2008

புதுச்சேரியில் தமிழீழ ஆதரவு குரல்கள்- சுவரொட்டிகள் மற்றும் நிகழ்வுகள்

1. புதுச்சேரியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்கும் கடந்த நவம்பர் 1, 2008 அன்று முருங்கப்பாக்கத்தில் தொடங்கிய இந்த ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியுள்ளது.

நாளை சனிக்கிழமை 15-11-2008 மாலை ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்து இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தி போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தெருமுனைக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில், சின்னக்கடை, நேரு வீதி, ஆனந்த இன் உணவகம் அருகில், முத்தியால் பேட்டை மணிகூண்டு, லாசுப்பேட்டை, பாக்குமுடையான் பேட்டை, சாரம், பெரியார் சிலை, பழையப் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடை பெற உள்ளது.
இக்கூட்டத்தில் தமீழீழ ஆதரவாளர்கள் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொண்டு தமது கண்டனத்தை பதிவு செய்ய உள்ளன.

2. விடுதலைச் சிறுத்தைகளின் சுவரொட்டி இன்று பரவலாய் புதுச்சேரி முழுவதும் காணப்பட்டது.
சிங்கள இனவெறியால்

எரிகிறது ஈழத்தமிழ்த்தேசம்!

தாய்த் தமிழர்களே!

என்ன செய்வதாய் உத்தேசம்?
3. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த வைகோ கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், இலங்கை அரசை வலியுறுத்தி தமிழீழத்தில் போர் நிறுத்தம் செய்ய இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் இன்று புதுச்சேரி பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இன்று உண்ணா விரதப் போராட்டம் நடந்தது இப்போராட்டத்தை மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக்கழகம் நடத்தியது. இப்போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

1 comment:

Anonymous said...

சுகுமாரனுக்கு
புதுச்சேரியிலும் ஏராளமான நிகழ்வுகள் ஈழம் தொடர்பாக நடந்ததாக செய்தித்தாட்களில் செய்திகள் பார்த்தேன் ஆனால் பதிவுகளில் அதிகம் காணப்படவில்லை. எனவே, எல்லாவற்றையும் பதிவு செய்யவும். நீங்களெல்லாம் செய்திகளை எழுதாமல் விட்டால் ஒரு மாநிலம் அமைதியாக இருந்தது போல் இருக்கும். எனவே நீங்கள் பத்திரிக்கைகள் எழுதாத செய்திகளை பதிவு செய்யும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.