Sunday, April 06, 2008

நேபாளம் செல்கிறார் புதுவை கோ.சுகுமாரன்

புதுச்சேரி, ஏப். 5: நேபாள நாட்டில் நடக்கும் தேர்தலையொட்டி சர்வதேச தேர்தல் பார்வையாளராக புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்ட மைப்பின் செயலர் கோ.சுகுமாரன் அங்கு செல்கிறார்.

அரசியல் நிர்ணய சபைக் கான தேர்தல் நேபாளத்தில் இம் மாதம் 10-ம் தேதி நடக் கிறது. இதையொட்டி நேபாளத்தைச் சேர்ந்த 148 அரசுசாரா அமைப்புகள் சார்பில் 92 ஆயிரத்து 245 பேரும், உலக அளவில் 500- க்கும் மேற்பட்டவர்களும் தேர்தல் பார்வையாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்9,801 தேர்தல் மையங்களையும், 20 ஆயிரம் தேர்தல் பூத்துகளையும் பார்வையிடுகின்றனர். கடந்த 1999-ல் நடந்த பொதுத் தேர்லின்போது நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்களை விட இது 30 மடங்கு அதிகம்.

அரசியல் நிர்ணய சபை தேர்தல் பார்வையாளர் கள் அமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் சுகுமா ரன் நேபாளம் செல்கிறார். வரும் ஏப்ரல் 7 முதல் 14- ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து தேர்தல் பணிக ளைப் பார்வையிடுகிறார். பின்னர் திரும்புகிறார்.

தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர தேர்தல் நடக் கும் எந்தப் பகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்கள் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.