Saturday, February 14, 2009

புதுச்சேரியில் நான்காவது நாளாக பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

புதுச்சேரியில் நான்காவது நாளாக பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் பயிலும் மாணவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்று 4-வது நாளாக நடைபெறுகிறது. இரண்டாவது நாள் போராட்டத்தில் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடிய புகைப்படக்காட்சிகள். பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநில தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் தந்தைபிரியன், வீரமோகன், விஜயசங்கர், இளங்கோ, சுரேசு, சிவமுருகன், பெருமாள் உட்பட்ட தேழர்கள் உடன் இருந்தனர். பல்வேறு கல்லூரி மாணவர்கள், மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

  1. திரைப்பட இயக்குனர் சீமான் மாணவர்களை வாழ்த்திப்பேசினார்.
  2. ம.தி.மு.க வை சேர்ந்த திரு வந்தியத்தேவன்,
  3. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் துணைப் பொதுச்செயலர் திரு வணங்காமுடி,
  4. சமஜ் வாடி கட்சி புதுவைத் தலைவர் தங்க கலைமாறன்,
  5. விடுதலை சிறுத்தைகளின் மாநில அமைப்பாளர் திரு பாவாணன்,
  6. ம.தி.மு.க செல்வராசு,
  7. மக்கள் உரிமைக்கூட்டமைப்பை சேர்ந்த கோ.சுகுமாரன்,
  8. தமிழர் தேசிய இயக்கத்தின் திரு இரா.அழகிரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப்பேசினர்.
  9. செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்.
  10. கடலூர் பெரியார் அரசினர் கலைக்கல்லூரி மாணவர் வாழ்த்தினர்கள்.
  11. புதுச்சேரி அரசுவிரைவு பேருந்து கழகம் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
  12. புதுச்சேரி அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு மேநிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.

அந்த மாணவர்களும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரியில் உள்ள பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.









1 comment:

Anonymous said...

புதுச்சேரி மாணவர்களுக்கு நன்றி!