Saturday, February 14, 2009

புதுச்சேரியில் தொடர் உண்ணாநிலை போராட்டம் இருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளில் நிறைவு

புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து ராஜபக்சே உருவப் படத்தை எரியூட்டினர்.

புதுச்சேரி அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கைப் போரை தடுத்து நிறுத்தக் கோரி அண்ணா சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவப்படத்தை எரியூட்டினர்.

இந்தப் போராட்டத்தை வாழ்த்தி பாமக அரியாங்குப்பம் தொகுதி எம்எல்ஏ ஆர்.கே.ஆர்.அனந்தராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், விடுதலை வேங்கைகள் மங்கையர்ச்செல்வன், பெரியார் திராவிடர் கழகம் லோகு.அய்யப்பன் வாழ்த்திப் பேசினர்.

போராட்டத்துக்கு, சட்டக்கல்லூரி 4-ம் ஆண்டு மாணவர் சக்தி, முதலாம் ஆண்டு மாணவர் அன்பு, முற்போக்கு மாணவரணி செயலாளர் பாஸ்கர், மாணவர் கூட்டமைப்பு அமைப்பாளர் சதீஷ் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

20-க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்