Monday, April 27, 2009
கருணாநிதிக்கு இராசபக்சே செருப்படி: போர் நிறுத்தம் என்பது பொய் பிரச்சாரம்
இதனால் இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், அவர் கூறியதைக் கேட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட முதல்வர் கருணாநிதி கூறியதும் கேள்விக்குறியதாகியுள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் பிடியில் சிக்கியுள்ள 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் தமிழர்களையும் மீட்கும் முயற்சியில் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து ஈடுபடும். இவர்களை மீட்கும் முயற்சியில் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும். அப்பாவிகள் தரப்பில் உயிரிழப்பு இருக்கக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில மீடியாக்களில் இலங்கை அரசும், ராணுவமும் போர் நிறுத்தம் செய்வதாக தவறான, அவதூறான, விஷமனத்தனமான செய்தி வெளியாகியுள்ளது. இது முறையல்ல. இந்த செய்தி குப்பையில் போட தகுதியானதாகும். தீவிரவாத ஆதரவாளர்களுக்கு வளைந்து கொடுக்க விரும்புபவர்கள் பரப்பியுள்ள பொய்ச் செய்தியாகும் இது.
அரசு அறிவித்துள்ள முடிவின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், மீதமுள்ள 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் ராணுவம் செல்லும்போது அங்கு அப்பாவி மக்கள் யாரும் பலியாகி விடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. முல்லைத் தீவு வீழ்ந்தது முதலே பாதுகாப்புப் படைகள் மிகுந்த கவனத்துடன்தான் முன்னேறி வருகின்றன.
ஆயிரக்கணக்கான அப்பாவிகளை விடுதலைப் புலிகள் பிணையாளிகளாக பிடித்து வைத்துள்ளனர். தற்போது பாதுகாப்புப் படைகள் வெற்றியை அடைந்து வருகின்றன. தாக்குதல் லட்சியம் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. இனி எந்த வகையிலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் நிம்மதியாக சுவாசிக்க முடியாத அளவுக்கு நிலைமையை ஏற்படுத்தி விட்டோம்.
எனவே கன ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. இதுதான் அரசு அறிவிப்பின் உண்மையான அர்த்தம். எந்தவித வெளிநாட்டு நிர்ப்பந்தம் காரணமாகவும் இப்படி ஒரு அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. உலகின் மிகப் பெரிய பிணையாளிகள் மீட்பு நடவடிக்கை வெற்றியை நெருங்கியதைத் தொடர்ந்தே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறினார்.
நன்றி: தட்ஸ்தமிழ் http://thatstamil.oneindia.in/news/2009/04/27/lanka-sl-army-says-no-ceasefire-offered.html
Thursday, April 23, 2009
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தடா சட்டத்தில் கர்நாடகா போலீசால் கைது உண்மை அறியும் குழு அறிக்கை
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தடா சட்டத்தில் கர்நாடகா போலீசால் கைது உண்மை அறியும் குழு அறிக்கை
Wednesday, April 08, 2009
சிதம்பரத்தின் மீது செருப்பு வீச்சு : வீடியோகாட்சி
டெல்லி: எதிர்ப்பைக் காட்ட தலைவர்கள் முகத்தை நோக்கி செருப்பை வீசுவது இப்போது வழக்கமாக விட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது தைனிக் ஜாக்ரன் பத்திரிகையின் மூத்த சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் இன்று ஷூ வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற பிரபல இந்தி நாளிதழ் தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார்.
அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார்.
ஆனாலும் டைட்லரை விடுவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவேசமாக ஜர்னைல் சிங் பேசிக் கொண்டே போகவே, ‘போதும்…போதும் நிறுத்துங்கள்.. இது குறித்து சிபிஐயை எதிர்த்து சட்டரீதியாக அணுகலாம். அதுவரை பொறுமையாக இருப்போம்’ என்றார் சிதம்பரம்.
ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை.
இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், ‘யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம்’ என்றார் வழக்கமான தனது புன்னகையுடன்.
மேலும் ‘ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர்தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். அதை இத்தோடு விடலாம்’ என்றார்.
ஆனாலும் சிதம்பரத்தின் பாதுகாப்புப் படையினர் அந்த நிருபரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி இழுத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம், ‘ஜர்னைல் சிங்கை ‘ஜென்டிலாக’ நடத்துங்கள்… இப்படி இழுத்துச் செல்லாதீர்கள் என்ற சிதம்பரம்.. ஒரு தனி மனிதரால் இந்த பிரஸ் மீட் தடைபட வேண்டாம். நாம் நமது பிரஸ் மீட்டை தொடரலாம்’ என்றார்.
ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. இப்போது அதே பாணியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டுள்ளது.
ஜர்னைல் சிங் பல காலமாக டெல்லி காங்கிரஸ் அலுவலக செய்திகளை வழங்கி வருபவர் ஆவார். இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர் ஆவார்.
வெளியே இழுத்துச் செல்லப்பட்ட ஜர்னைல் சிங் கூறுகையில், ‘நான் செய்தது தவறில்லை. எனது செயலுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். எனது அனுகுமுறை தவறாக இருந்திருக்கலாம். ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்’ என்றார்.
ஜர்னைல் சிங் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை எழுதும் நிருபராகவும் பணியாற்றியவர்.
நன்றி : என்வழி தளம் http://www.envazhi.com/?p=6179இனி தீக்குளிப்பு வேண்டாம் செருப்படி கொடுங்கள்
தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக முத்துக்குமார் தீக்குளித்ததும் அதனை தொடர்ந்து பலர் தீக்குளித்துள்ளார்கள்,
அதே போல அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்சை தொடர்ந்து சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. பின்னர் இப்போது சிதம்பரத்துக்கு செருப்பு வீச்சு நடந்துள்ளது.
தமிழின விரோதிகளுக்கெல்லாம் இந்த செருப்படி விரைவில் விழும் என்று எதிர்பார்க்கலாம்.
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள அந்த நிகழ்வின் பார்க்க காட்சிப்பட இணைப்பு:
செருப்படி வாங்கிய ஜார்ஜ் புஷ்!
சீனப்பிரதமர் மீது செருப்பு வீச்சு
நீதி கிடைக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? சனநாயகத் தூண்கள் வாய்திறக்குமா?
Monday, April 06, 2009
பித்தம் தலைக்கேறி உளரும் கருணாநிதி
ஈழவிடுதலைப்போரில் தமிழகம் உள்ளிட்ட பகுதியுடன் மொத்தமாக இதுவரை 16 பேர் தீக்குளித்து உயிர் துறந்து இருக்கிறார்கள். உலகநாடுகள் ஈழப்போரின் படுகொலையை கண்டுகொள்ளாமல் இருந்தபோது புலம் பெயர்ந்த தமிழர்கள் தனது ஓயாத போராட்டத்தின் விளைவாக ஈழப்படுகொலையை உலகின் பாரவைக்கு அல்லது உலகம் இந்த படுகொலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தியவர்கள்.
அவர்களின் அயராத உழைப்பின் பின் தான் உலக நாடுகள் கொஞ்சம் திருப்பி பார்த்தது.
ஆனால் கருணாநிதியை பாருங்கள்
இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம்
விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால் இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.
அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் எரி நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.
அதனால் அங்கு நின்ற போராளிகள் அவ் எரி நச்சுக்குண்டு பட்டு எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று இவ்வீரர்களின் உடலங்களைக்க் கைப்பற்றியதாகவும் அறியமுடிகின்றது.
இவ் எரி நச்சுவாயுவை சுவாசித்து தப்பி வந்தவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்று, வாந்தி போன்றன ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.
இராணுவத்தின் தொலைத்தொடர்பு உரைகளை ஒட்டுக் கேட்கப்பட்டபோது இவ் நச்சுக்குண்டை பாவிப்பதற்கு முன் வேறு சில அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அவ்விடத்தில் நின்ற இராணுவத்திற்கு முகத்திற்கு அணியும் முகமூடி(மாஸ்க்) கொடுக்கப்பட்டதாகவும், இராணுவத்தை சற்று பின் நகர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
மேலும் இவ் நடவடிக்கையால் இராணுவத்தினரும் மயக்கமுற்று பாதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆசியும் கிடைத்திருக்கின்றது.
போராளி ஒருவர் மீது நேரடியாக எரி நச்சுக்குண்டு பட்டு அவரின் உடல் கருகியதை படத்தில் காணாலாம்
எரி நச்சுக்குண்டு பட்டு உடல் எரிந்த நிலையில் இறந்துகிடக்கும் போராளிகள்