Saturday, November 13, 2010

ஈழத் தமிழர்களைக் கடிக்கும் நாயாக விளங்குகிறார் சோனியா-தங்கபாலு

ஈழத் தமிழர்களைக் காக்கும் தாயாக விளங்குகிறார் சோனியா என்று தங்கபாலு பொய்யான தகவலைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால் அவரின் செய்தி தலைப்பு நாம் அளித்துள்ள தலைப்பு போல் இருந்திருக்க வேண்டும்.

தமிழர்களை அவர் எவ்வளவு கேவலமானவர்களாக நினைத்து இந்த அறிக்கையை அவர் விட்டார் என்று தெரியவில்லை. மக்கள் எல்லாவற்றையும் அறிவார்கள். இணையம், பத்திரிக்கை, தொலைக்காட்சி என்ற பல்வேறு ஊடகங்கள் இருந்து மக்களுக்கு இந்த செய்திகளை அளித்த போதிலும் தமிழக காங்கிரசு தலைவர் சூடு சொரணை ஏதுமில்லாமல் பொய்யான அறிக்கையை விடுவது அவரின் அயோக்கியத்தனத்தையும் அடிமை புத்தியையும் எடுத்துக் கூறுவதாக உள்ளது.
....................
முழுமையான தகவல் கீழே
சென்னை: சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார். ஆனால் அறிக்கைவிட்டு வாய் வீச்சைக்காட்டும் வைகோ இலங்கை தமிழர்களுக்காக இழந்தது என்ன? என்று கேட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைப்போர் நிகழ்வுகள் தொடங்கிய காலத்திலும், அது நடைபெறும் நேரத்திலும் அது முடிவுக்கு வந்து சுமூக சூழ்நிலை முழுமையாக உருவாகப்போகும் இன்றைய காலக்கட்டம் வரை அனைத்து நிலைகளிலும் சோனியாகாந்தியின் மனிதாபிமான வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளை வைகோ மறந்திருக்கலாம். ஆனால், தமிழக மக்களும், இலங்கைவாழ் தமிழர்களும் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்.
http://thatstamil.oneindia.in/news/2010/11/12/thangabalu-vaiko-sonia-gandhi-eelam-tamils.html

1 comment:

Anonymous said...

நக்குத் தண்ணிக்கு அலையும் நாய்களின் கதைகள் எமக்கு எதற்கு. உண்மை நிலை என்ன என்பது உலகறியும். பதவிக்காக தனது கோவணத்தையும இழந்து நிற்கும் அம்மண அரசியல் வியாதிகளின் குறைப்பால் உணமைகளை மறைக்க முடியாது. யாழ்