Friday, December 17, 2010

புதுச்சேரியில் குறும்படம், ஆவணப்பட பயிற்சி பயிலரங்கு டிசம்பர் 26 முதல் 31 வரை

நிழல் - பதியம் - நண்பர்கள் தோட்டம்
இணைந்து நடத்தும்
குறும்படம்/ஆவணப்படப் பயிற்சிப் பயிலரங்கு

பயிற்சி நாள்கள்  26.12.2010 முதல் 31.12.2010 வரை,
நேரம்:: காலை 9.00 மணி முதல் இரவு 7.30 வரை, 
இடம் : எஸ்.ஆர். திருமண நிலையம்,
259, திருவள்ளுவர் சாலை,   புதுச்சேரி-13 (மணிமேகலை பள்ளி அருகில்)

பயிற்சிக் கட்டணம் : ரூபாய்: 2000 மட்டும்.,
மாணவர்களுக்கு ரூபாய் 1500 மட்டும்,
மகளிருக்கு ரூபாய் 1000 மட்டும்.

காலை, மதியம், இரவு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேநீர்; காலை 11.00,க்கும் மாலை 4.30 சிற்றுண்டியுடன் தேநீரும் வழங்கப்படும்.

இரவு உணவுக்குப் பின் சிறந்த குறும்படங்கள் மற்றும் உலகப்புகழ் பெற்ற திரைப்படங்கள் காட்டப்படும்.


தமிழகத்தை சேர்ந்த தேர்ந்த திரைப்படத்துறையினர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள்.

பயிற்சி அளிக்கப்படும் பிரிவுகள்
  1. குறும்பட-ஆவணப்பட வரலாறு மற்றும் கோட்பாடு :  நிழல் ஆசிரியர் ப.திருநாவுக்கரசு
  2. நடிப்புக் கலை : சுரேஷ் வரன் கூத்துப்பட்டறை
  3. நடிப்பின் இலக்கணம் : தம்பிச்சோழன் கூத்துப்பட்டறை
  4. ஒளிப்பதிவு : சி.ஜெ ரமேஷ்குமார் ஒலிப்பதிவாளர் 
  5. திரைக்கதை எழுதுதல் : பாலு மணிவண்ணன் - இணை இயக்குனர்
  6. நிழற்படம் எடுத்தல் & ஒளி ஒழுங்கமைவு:  பாரதி வாசன் - தமிழ்நாடு குறும்பட ஆவனப்பட படைப்பாளிகள் சங்க செயலாளர்
  7. படத்தொகுப்பு :
பயிற்சியின் சிறப்பு

தகுதிறன் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களால் நடத்தப்பெறவுள்ள இப்பயிற்சியின் மூலம் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களைத் தாங்களாகவே திரைக்கதை அமைத்து, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்து, இயக்கித் தயாரிக்கும் அளவுக்குப் பயிற்சி பெறுவோர் திறன்படுத்தப்பெறுவர் என்பதே இப்பயிற்சியின் சிறப்பாகும்.

தனியுடைமையாளர்கள் ஊடகங்களை விழுங்கிவரும், இந்த நேரத்தில் மாற்றுத்திரைக்கான அவசியம் ஏற்பட்டுள்ளதால் நண்பர்கள் தோட்டம் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எனவே, நண்பர்கள் இயன்ற அளவு இப்பயிற்சியில் கலந்து கொண்டும், மாணவர்கள் மற்றும் நண்பர்களைப் பங்குபெறச் செய்தும் ஒரு புதிய மாற்றுத்திரைக் கலைஞர்களை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
ப. திருநாவுக்கரசு
தொடர்பு எண்: 99944 55959

Monday, December 13, 2010

மத்திய அரசா? மலையாளிகள் அரசா?

‘‘ஆ.ராசா மீது வந்த புகார்களுக்கு பதிலளிக்காமல் ஒன்றரை வருடமாக மௌனம் காத்தது ஏன்?’’

‘‘மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு ஊழல் குற்றம் சாட்டப்-பட்ட தாமஸையே ஆணையர் ஆக்கியிருப்பது என்ன நியாயம்?’’

-இப்படி அடுத்தடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கின் டர்பனை உருவி தலையில் குட்டிக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

கோர்ட் இப்படியென்றால்... திரும்பிய திசையெல்லாம் ஊழல் வழியும் ஆட்சி என ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட... ஆடிப்போயிருக்கிறார் மன்மோகன் சிங்.

‘‘இப்படியொரு பதவியில் இருப்பதை விட, கவுரவமாக விலகி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் அவர் எந்த நேரமும் ராஜினாமா செய்யலாம்’’ என்கின்றன பிரதமர் அலுவலக வட்டாரத்தினர்.

மேலும் அவர்கள், ‘‘மத்திய நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவி மீது வெகுநாட்களாக மோகம் உண்டு. அதேநேரம் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் பிரதமர் பதவியை எதிர்பார்த்து சோனியாவின் சிபாரிசுக்காக காத்திருக்கிறார்.

பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவி என்பது 2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே பேசப்பட்ட விஷயம். காங்கிரஸின் மூத்த தலைவரான அவருக்கு பிரதமர் பதவி என பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், ஏ.கே. அந்தோணி பிரதமர் பதவிக்கு ஆசைப்பட ஒரே காரணம், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல... மத்திய அரசிலும், சோனியாவைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரும் மலையாளிகள் என்பதால்தான்’’ என்கின்றனர்.

டெல்லியில் நிலவும் மலையாளிகள் ராஜ்யம் பற்றி தலைநகர பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சோனியா காந்திக்கு உதவியாளராக இருக்கும் ஜார்ஜ் கேரளத்துக்காரர். இவர்தான் தன் மாநிலப் பாசத்தில் அரசியல் அதிகாரத்தில் இருந்து நிர்வாக அதிகாரம் வரை அத்தனை இடங்களிலும் மலையாளிகளை நுழைத்து வருகிறார்...’’ என்று கொஞ்சம் எரிச்சலாகவே கருத்துக்களைக் கொட்டினார்கள்.

‘‘நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ், உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது ஆகிய ஐந்து அமைச்சர்கள் இப்போது இருக்கிறார்கள். வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!

அமைச்சரவையில்தான் இப்படி மலையாளிகளுக்கு அதீத முக்கியத்துவம் என்றால், முக்கியத் துறைகள் அனைத்-திலும் உயர்பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் யாவரும் மலையாளிகள்தான்.

மத்திய அரசில் மொத்தம் 40 முக்கியத் துறைகள் இருக்கின்றன. இதில் முக்கியமான 20 துறைகளுக்கும் அதிகமான துறைகளுக்குப் பொறுப்பு வகிப்பவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான்’’ என்றவர்கள், அந்த மலையாள அதிகாரிகளின் பெயர்களை கடகடவென வாசித்தனர். (பார்க்க பெட்டியில்)

பட்டியலை முடித்துவிட்டு தொடந்தவர்கள்...

‘‘இந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த மலையாளிகளுக்குத்தான். மத்திய அமைச்சரவை, மத்திய அரசு மட்டுமல்ல... இரண்டையும் ஆட்டி வைக்கும் சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான்.

சோனியாவின் டிரைவர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், மார்க்கெட்டுக்கு போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக டெல்லி போலீஸார் அறுபது பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்’’ என்று முடித்தனர் அவர்கள்.

மேலும் ‘‘இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் அரக்கத் தனங்களுக்கு ஒருவிதத்தில் மலையாள அதிகாரிகளும் காரணம். சிவசங்கர்மேனன், எம்.கே.நாராயணன், ஜி.கே.பிள்ளை, நிருபமா ராவ் ஆகிய கேரள அதிகாரிகள் தங்களின் தமிழர் எதிர்ப்பு உணர்வை மத்திய அரசோடு இணைந்து ஈழத் தமிழர் பிரச்னையில் காட்டி வருகின்றனர்’’ என்கிறார்கள்.

இது தொடர்பாக காங்கிரஸ் மேல்மட்டத் தலைவர்களிடம் விசாரித்தால், ‘‘நிர்வாகப் பொறுப்புகளில் இப்போது மலையாளிகள் ஆதிக்கம் இருப்பது நிஜம்தான். அதற்காக இன ரீதியிலான சாயம் பூச வேண்டியதில்லை’’ என்றார்கள்.

கேரள அதிகாரிகள் பட்டியல்...

‘‘என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர், வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர், டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர், என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர், பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர், கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர், ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர், மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர், நிருபமா ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர், சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர், ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர், சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர், கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர், பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர், சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர், வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர், ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர், கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர், கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர், ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர், வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர், பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர், ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம், சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர், ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்... இப்படி நீளுகிறது பட்டியல்.