Saturday, May 19, 2012

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இன்றும் சில கேள்விகள்

சென்ற வாரம் என்னைச் சந்தித்த வழக்கறிஞர் நண்பர் கல்விச்செல்வன்  ஒரு கேள்வியை கேட்டார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்று.


இது போன்ற சந்தேகம் பலருக்கு இன்னும் இருக்கிறது. இத்தனைக்கும் அந்த நண்பர் தொடர்ந்து பல பத்திரிக்கைகளை படிப்பவர். சற்று விவரமானவர் கூட. இருப்பினும் இது போன்றவர்களுக்குக் கூட பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற கொஞ்சமேனும் சந்தேகம் எழுவதற்கான காரணம் ஏற்கனவே, அவர் இரண்டு முறை கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அந்த செய்தி உண்மையல்லாமல் போனதும் ஒரு காரணமாகும். உண்மையில் அவர் கொல்லப் படவேண்டும் என்று விரும்பிய இந்திய அமைதிப் படை அவர் கொல்லப் பட்டதாக ஒரு முறை தெரிவித்தது.


நக்கீரன் போன்ற பத்திரிக்கை வெளியிட்ட செய்தி போன்றவை இந்தகைய கேள்வி எழுவதற்கான ஒரு காரணமாகும். மேலும், இது போன்ற செய்திகளை ஈழ இணைய தளங்கள் தொடர்ந்து வெளியிடு வதும் மற்றொரு காரணமாகும்.


ஈழப்பிரச்சனை உச்சநிலையில் இருந்த  போதும் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், கொல்லப் படவில்லை என பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் இணைய பக்கங்களில் தீவிர விவாதம் நடந்து வந்த காலத்தில் அதன் உண்மை நிலையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் இருந்தது.


மே 23 2009 நேரத்தில் கொல்லப் பட்டதாக சிலப் புகைப் படங்கள் வெளியாயின. அந்தப் புகைப் படத்துடன் பிரபாகரன்  அவர்களின் பழைய புகைப்படத்துடன் ஒப்பிட்டு நான் உறுதி செய்து கொண்டிருந்தேன். நண்பரின் சமீபத்தையை கேள்வியால் அந்த ஒப்பீடு படத்தை வெளியிட முடிவு செய்தேன்.

இந்தப் படத்தில் குறிப்பாக  மூக்கு, காதுப் பகுதி, காதுப் பகுதியின் கீழ் உள்ள மடிப்புகள் மற்றும் அவரது உடலில் உள்ள கரும் புள்ளிகள் ஆகியவற்றை ஒப்பிட்டே பார்த்தால் ஒத்திருப்பது தெரியவந்தது.

மே 18 க்கு பின் ஒருவாரகாலம் இதுபற்றி மிகத் தீவிரமான செய்திகள் இணையத்தில் உலவி வந்தன. அதன் பின்பு இணையத்தில் தீவிரமாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் சிலருக்கு அனுப்பினேன். அதன் பின் இந்த கருத்தை அவர்கள் வலியுறுத்தி எழுதாமல் விட்டு விட்டனர்.

எனினும், இன்றுவரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்து கொண்டிருக்கிற நிலையில் இந்த புகைப்படம் சிலருக்கும் முடிவெடுக்க சிலநேரம் உதவலாம். என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்காக பிரபாகரனின் முழுப்படம் மற்றும் அதன் பின் அந்த படத்துடன் ஒப்பிட்டு மற்றொரு படமும் இணைக்கப் பட்டுள்ளது.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இன்றும் சில கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பவர்கள், இந்த படத்தை பார்ப்பார்களேயானால் இதன் மூலம் ஒரு முடிவை எட்டுவார்களா என்பது தெரியவில்லை.

Monday, May 14, 2012

கோரல்டிரா X6 இல் தமிழ் ஒருங்கு குறி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது

அடோப் மற்றும் கோரால் டிரா மென்பொருட்களில் தமிழ் ஒருங்குறி ஆதரவு வழங்கப்படாமல் இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

நூல் வெளியிடு வரைவு பணி ஆகியவற்றுக்கு இந்தியா போன்ற இடங்களில் போட்டோசாப், மற்றும் கோரல் டிரா மென்பொருட்கள் அதிக பயன்பாட்டில் உள்ள மென்பொருட்களாகும். இது போன்ற மென்பொருளில் தமிழ் ஆதரவு வழங்கப்படாமல் இருந்தது செம்மொழியான தமிழ் மொழியை புறக்கணிக்கப்படுவதாக பலர் கருதினர்.

ஆனால், CorelDRAW X5 வரை தமிழ் ஆதரவு வழங்கப்படாமல் இருந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த CorelDRAW X6 இல் தமிழ் ஒருங்கு குறியில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் ஏகலப்பை மென்பொருளின் மூலம் தட்டச்சு செய்ய இயலுகிறது என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தியாகும்.
 
கீழே கோரல் 16 மற்றும் 15 இல் தமிழ் ஒருங்கு குறியில் தட்டச்சு செய்தால் எப்படி வருகிறது என்பதற்கான மாதிரிப்படம் இணைக்கப் பட்டுள்ளது.

கோரல் X6

CorelDraw X5
அடோப் நிறுவனத்திலும் CS5 வரிசையில் பிளாசு, டிரீம்வியூவர் இரண்டில் மட்டுமே தமிழ் ஒருங்கு குறி ஆதரவு உள்ளது. போட்டோசாப் உள்ளிட்டவைகளில் ஆதரவு அளிக்கப்படவில்லை. ஆனால் புதிதாக வெளியிட்டுள்ள CS6 வரிசையில் தமிழ் ஒருங்கு குறிக்கான ஆதரவு  வழங்கப் பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.