Friday, September 05, 2008

வைத்திலிங்கம் தலைமையிலான புதுச்சேரி அரசுக்கு ஆயுள் குறைவு

புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. எனினும் இந்த அரசுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு இல்லை என்பதே இன்று உள்ள நிலையாகும்.

கடந்த சில தேர்தல்களில் காங்கிரசு அரசு தோற்றுவருவதால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசு அரசு தோல்வியை சந்திக்கும் என்ற நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.


அ.இ.அ.தி.மு.க வின் மாநில அமைப்பாளர் அன்பழகன் சென்ற ஆட்சியில் கிடைத்த நன்மைகள் இந்த ஆட்சியில் கிடைக்கப்போவதில்லை என்று புதிதாக பெறுப்பேற்றுள்ள வைத்திலிங்கம் அரசு பற்றி கருத்து தெரிவித்துள்ளார். ரெங்கசாமி, வைத்தியலிங்கம் தலைமையிலான ஒரே காங்கிரசு அரசு என்றாலும் வைத்திலிங்கம் அரசு மீது பலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

கூட்டணியில் உள்ள தி.மு.க முன்னாள் முதல்வர் ந. ரெங்கசாமிக்கே தனது ஆதரவை தெரிவித்திருந்தது. ஆனால், வைத்திலிங்கம் அரசுக்கு தனது ஆதரவை முழுமனதோடு தெரிவிக்க வில்லை என்றே தெரிகிறது. மத்திய அரசில் அங்கம் வகிப்பதாலும் தி.மு.க தலைமைக்கு கட்டுப்பட்டே அவர்கள் அமைதியாக இருப்பதாகவும் தெரிகிறது.

அதேபோல ரெங்கசாமி வன்னியர் இனத்தை சார்ந்தவர் என்பதால் பா.ம.க கட்சியும் ரெங்கசாமிக்கு எதிராக வைத்திலிங்கம் அரசுக்கு மனப் பூர்வமான ஆதரவை வழங்கவில்லை , மத்தியில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிப்பதால் அக்கட்சியும் வேறு வழி இல்லாமல் வைத்தியலிங்கம் அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளது என்றே தெரிகிறது.

அதேபோல சிபிஅய் கட்சியும் வைத்தியலிங்கம் அரசுக்கு ஆதரவு வழங்கவில்லை. இக்கட்சி மறைமுகமாக முன்னாள் முதல்வர் ரெங்கசாமிக்கே தனது ஆதரவை அளித்து வந்தது. ஆனால், தற்போது அமைந்துள்ள புதிய அரசு பற்றியும் ஒரு அதிருப்தியை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

மொத்தம் 30 சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி சட்டப் பேரவையில் மொத்தமாக 10 உறுப்பினர்கள் மட்டுமே காங்கிரசு கட்சியில் உள்ளனர். இந்நிலையில் கூட்டணி கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைதுள்ள காங்கிரசு கட்சி எதிர்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளது.

கூட்டணி கட்சியின் ஆதரவு  சம்பிரயப்பூர்வமானதே தவிர மனப்பூர்வ மானதாக  காங்கிரசின் வைத்திலிங்கம் அரசுக்கு இல்லை என்பதால் "காங்கிரசு கட்சியின் மத்திய அமைச்சரும் புதுச்சேரி மாநிலங்கள் அவை உறுப்பினரான நாரயணசாமி" எதிர்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

புதுச்சேரி காங்கிரசு கட்சி தலைவர் எ.வி. சுப்ரமணியன் எதிர்கட்சிகள் இனிமேல் காட்டு தர்பார் நடத்த முடியாது என்று கூறியுள்ளார். இனிமேல் என்று சொல்வதன் காரணம் ஏற்கனவே தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆதரவு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இராமதாசுவின் ஆதரவு ரெங்கசாமிக்கு இருந்ததால் புதிய ஆட்சி மாற்றத்திற்கு போதிய ஆதரவு இல்லாமல் இருந்ததால் ஆட்சி அமைத்துவிட்டோம் என்ற தைரியத்தில் "எதிர்கட்சிகள் இனிமேல் காட்டு தர்பார் நடத்த முடியாது" என்று கூறியுள்ளார்.

காங்கிரசு கட்சியின்  உறுப்பினர்களின் ஆதரவை இழந்த முன்னாள் முதல்வர் ரெங்கசாமி உண்மையில் முழுமையான ஆதரவை இழந்தவர் இல்லை. எதிர்கட்சிகளின் ஆதரவு எப்போதும் போல இப்போது உள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் ரெங்கசாமி ஆட்சியை இழந்ததற்கான காரணம் அவரைத்தவிர வேறு யாரையும் சொல்வதற்கில்லை. எல்லா விசயங்களிலும் அளவு கடந்த பொருமை இவரின் ஆட்சிக்கு எதிராக இருந்துள்ளது.

செய்தி ஆதாரங்கள் நன்றி:  தினமலர்