Tuesday, August 08, 2006

புலிகள் ஆதரவு - அடங்கிப்போக வேண்டுமாம்

புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்கு சரியான காரணத்தை இந்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

அதனால் தான் தமிழக முதல்வர் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை விவாதிக்கலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் ஈழம் கிடைத்தால் அது தமிழகத்தில் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணியே இந்திய அரசு தமிழர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறது.

வங்கதேச விடுதலையை எந்த அடிப்படியில் இந்தியா ஆதரித்தது?. முன்பு கூட இலங்கை அரசை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் தான் இலங்கை போராளி அமைப்புகளுக்கு இந்தியா பயிற்சி அளித்தது. வங்க தேசத்திற்கு ஆதரவு அளித்த அதே அடிப்படையில் ஈழப்போராளிகளுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்.

இது அரசியல் சமுகப்பிரச்சனையேத் தவிர தனிப்பட்ட அரசியல் விரோத நடவடிக்கை இல்லை என்பதை உணர வேண்டும்.

  • தேசிய விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக இழிவு படுத்தாதே!
  • விடுதலைப் புலிகள் மீதான் தடையை நீக்கு!
  • தமிழ் ஈழத்தை அங்கீகரி!
  • சிங்கள இனவெறி அரசுக்கு உதவிகள் செய்யாதே!
  • சிங்கள இராணுவமே தமிழ் ஈழப்பகுதியிலிருந்து உடனே வெளியேறு!

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 27-07-2006 அன்று திருவண்ணாமலையிலும், 31-07-2006 அன்று திருப்பத்தூரிலும் புரட்சிகர இளைஞர் முண்ணனி என்ற அமைப்பு பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: சிங்கள இனவெறி அரசை கண்டித்து கடந்த 31ம் தேதி புரட்சிகர இளைஞர் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் பேரணி நடத்த
அனுமதி கேட்டுள்ளனர். பேரணி உட்பட ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 150 பெண்கள் உட்பட 400 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் எந்த பதட்டமும்
இல்லை. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த அளவுக்கு ஆர்ப்பாட்டம் நடப்பது ஏற்கத்தக்கது தான்.

ஜனநாயக்கப்பூர்வமான முறையில் முறியாக காவல்துறையின் அனுமதியின் அடிப்படையில் தான் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டத்தையும் பேரணியையும் நடத்தியுள்ளது. அதனால் தான் முதல்வர் கருணாநிதிகூட இது ஏற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். சட்டப்படி இந்த ஜனநாயக அமைப்பு முறையில் உள்ள முறைகளைப் பயன்படுத்தித்தான் இவர்கள் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

ஆனால், இத்தகைய சனநாயக உரிமைகளைக்கூட மறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதை பிரச்சனையாக்குவது இவர்களின் தமிழர் விரோதப் போக்கையே காட்டுகிறது.

தமிழனை அழிக்க தமிழ் மண்ணில் பயிற்சி கொடுக்கும் போது அதை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஞானசேகரன் சட்ட ஒழுங்கு மீது மிகவும் அக்கரையாக இருப்பதாகவும் இந்திய இரையாண்மை மீது அக்கரை உள்ளவர் போல் பேசி யிருக்கிறார். இந்திரா காந்தி கால கட்டதில் இலங்கை இரையாண்மைக்கு எதிராக காங்கிரசார் செயல்பட்டதை அவர் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

இராசீவ் கொலை காங்கிரசு காரர்களுக்கே தொடர்பு உள்ள நிலையில் மன்மோகன் சிங் அமெரிக்க உளவாளி என்ற தலைப்பில் முன்னணிப் பத்திரிகைகளில் வந்த தகவல் அடிப்படையில் சில தகவல்களை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.

"சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் சி.ஞானசேகரன் இப்பிரச்னையை கிளப்பினார்.

இலங்கையில் தமிழர்கள் போராட்டத்தை ராஜிவ்காந்தி கொலைக்கு முன்பு ஆதரிக்காதவர்கள் யாரும் இல்லை. இப்பிரச்னையில் கி.மு., கி.பி., என்பதைப் போல ராஜிவ் கொலைக்கு முன்பு, ராஜிவ் கொலைக்கு பின்பு என்று தான் பார்க்க வேண்டும். "

என்று அவர் குறிப்பிட்டது சோனியா விதவை ஆகிவிட்டார் என்பது தான் இவரின் வருத்தம். நாமும் அதற்காக வருத்தப்படலாம். ஆனால், இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இலங்கை அரசால் கொல்லப் பட்டு விதவைகளாக்கப் படும் போது அதனை கண்டிக்கக் கூடாது என்று அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி நியாயமாகும்.

Thursday, August 03, 2006

காவிரி நடுவர் மன்றம் - எறுமையில் பயணம்

காவிரி நடுவர் மன்றத்திற்கு மீண்டும் ஆறுமாதம் நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 1991 ஆம் ஆண்டு ஜீன்-25ல் இடைக்கால தீர்ப்பாக 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

அதன் பின் என்னத்தை செய்தார்கள் என்று தெரியவில்லை. மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்க்கை நடத்தி வரும் இவர்கள். மக்கள் பிரச்சனைகள் மீது கொஞ்சமும் அக்கரை இல்லாத போக்கினால் தான் இந்த தீர்ப்பு வழங்க 16 ஆண்டுகளுக்கு மேல் எடுத்து கொள்கின்றனர். ஆனால் இன்னும் தீர்ப்பு வழங்கிய பாடில்லை. மேலும் ஆறு மாதம் வேண்டும் என்று கோரி மத்திய அரசிடம் கேட்டு பெற்றுள்ளனர்.

அப்படி என்ன பெரிய வேலை இந்த நடுவர் மன்றத்தில் என்றால் மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இழுத்தடிக்கும் போக்கின் ஒரு வடிவம் தான் இத்தகைய நீதி மன்றங்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக காவிரி நீர் இருந்து வந்துள்ளது. ஆனால், இவர்களின் மெத்தனப் போக்கால் தமிழக மக்கள் என்ன பதினாறு ஆண்டுகள் பாதி சோறு சாப்பிட்டுவிட்டு (அ) பட்டினிக்கிடந்தா சாகமுடியும்.

இடைக்காலத் தீர்ப்பு வழங்கி இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டிருப்பது இவர்களின் சமூக அக்கரையற்ற தன்மையாக தெரிகிறது.

இத்தனைக்கும் காவிரி நதிநீர்த் தொடர்பாக இந்த மாநில அரசுகள் பல்வேறு புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. இந்த பிரச்சனை நீண்ட நெடும் வரலாறு கொண்டதால் இதுபற்றிய தகவல்கள் பற்றி பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. பல ஆதாரங்கள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றுதான் பெரிய அளவில் தேடி அலைய வேண்டியதில்லை.

இத்தகைய ஆதராம் கண்ணெதிரே கிடந்தாலும் விசாரணைக் கமிசன் என்றால் எப்படி பிரச்சனை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கலாம் என்பதற்கு காவிரி நடுவர் மன்றம் ஒரு சிறந்த உதாரணம்.

16 ஆண்டுகளாக இவர்கள் என்னத்தைக் கிழித்தார்கள் என்றுதான் தெரியவில்லை.

ஆனால், சர்வதேச நதிநீர்ச் சட்டப்படி பல நாடுகளிடையேயான நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஆனால், காவிரி நதிநீர் பிரச்சனை ஏன் தீர்க்கப் படாமல் இருக்கிறது எனத்தெரியவில்லை.

சர்வதேச நதிநீர் சட்டம் இந்த பிரச்சனை தொடர்பாக மிகத் தெளிவான வரையறையைக் கொண்டுள்ளது.

அதாவது, இயற்கையாக வரும் நதிநீரை வரலாற்று ரீதியாக ஒரு பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தால் அந்த நதி நீரை வரலாற்று ரீதியாக பயன்படுத்தும் மக்களுக்கு பதிப்பில்லாத வகையில் அந்த நதியில் மேல் நிலையில் உள்ளவர்கள் நதி நீரைப் பயன் படுத்திக்கொள்ளலாம்.

அந்த நதியின் கீழ் நிலையில் உள்ளவர்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் அனுமதி இல்லாமல் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் அணைகள் ஏதும் கட்டக்கூடாது. நதியில் கீழ்நிலையில் பாதிக்கின்றவகையில் நீரை செயற்கையாக தடுத்து உபயோகிக்கக் கூடாது என்று சர்வதேச நதிநீர்ச் சட்டம் சொல்கிறது. இதன் அடிப்படையில் தான பலநாடுகளில் நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

பல நாடுகளிடையே நதிநீர்ப் பிரச்சனை தீர்க்கப்படும் போது மாநிலங்களிடையேயான நதிநீரை சர்வதேச சட்டத்தின் கீழ் மிக எளிதாக தீர்த்திருக்க முடியும். ஆனால் ஏன் இப்படி இழுத்தடிக்கப்படுகிறது என்றால் தமிழன் தான் எல்லோருக்கும் எமாளி என்பது இவர்களுக்கும் தெரிந்து உள்ளதால் தான் இப்படி நடந்திருக்குமோ என்று தான் கருத வேண்டியுள்ளது.