Saturday, October 10, 2009

இராசபக்சேவின் இந்திய பிரதிநிதிகள் இன்று இலங்கை பயணம்


இலங்கையில் தமிழர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா? என்று பார்ப்பதற்காக இன்று தமிழக எம்.பிக்கள் இன்று இலங்கை புறப்படுகிறார்கள். ஒருவேளை அவர்கள் இன்னும் சாகாமல் உயிருடன் இருந்தால் அவர்களை தங்கள் சொந்த வீடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்வதற்காகவும் அவர்கள் செல்வதாக செல்கிறார்களாம்.
வரலாற்றில் கருணாநிதி தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை அவர் மேற்கொள்வதாக தெரிகிறது. அதன் பின்னர், நூறு ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் தான் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தோம் என்று கருணாநிதியும் பின்னர் ஸ்டாலினும், அதன் பின்னர் கருணாநிதியின் பேரப்பிள்ளைகளும் ஆட்சியில் இருந்து கொண்டு தாங்கள் தான் தமிழர்களுக்கு வாழ்வுரிமை வழங்கியதாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஏற்கனவே, ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் அறிக்கை அளித்த தமிழின துரோகிகளும் இப்பயணத்தில் இடம் பெறுகிறார்கள்.
இராசபக்சே அளிக்கும் விருந்தை சாப்பிட்டு விட்டு இங்கு வந்து தமிழர்கள் சுபீச்சமாய் வாழ்வதாக இங்கு வந்து அறிக்கை விட்டாலும் விடுவார்கள்.
இதனை வாய்பிளந்து கேட்டுக் கொண்டே இருக்கும் இந்த அறிவு கெட்ட தமிழர்கள் மட்டும் திருந்தப் போவதில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

1 comment:

siruthaai said...

பிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள்!


http://siruthai.wordpress.com/2009/10/09/பிரியாணி-தின்ன-தயாராகும்/