Thursday, October 04, 2007

அழுக்கு மூட்டை கடவுளை இவர்களே இப்படி போட்டு உடைத்திருக்கிறார்கள்

இந்து மதக்கடவுள்களை இந்து மதத்தினை சேர்ந்தவர்கள் எவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். கடவுள் பெயரால் பல்லாயிரக்கணக்கான தொகைகளை மக்களிடம் வசூலித்து சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த கொடுமைகளை யார்தான் கேட்பது. இந்து மதநடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் இவ்வாறு செய்தால் மதவாதிகள் குய்யோ முய்யோ என கத்தியிருப்பார்கள் இவர்கள், ஆனால் இந்த வாதாபி கொண்ட அழுக்கு மூட்டை கடவுளை இவர்களே இப்படி போட்டு உடைத்திருக்க்கிறார்கள்

இப்போது எங்கேப் போனார்கள் இந்த இராமன் பக்தர்கள் என்று தெரியவில்லை.

கடவுள் நம்பிக்கையை வெறும் பிழைப்புக்குக்காகவே இவர்கள் வைத்துக்கொள்வதால் இந்த பிரச்சனனகளை பற்றி பேசுவதில்லை. மத உணவுகளை தூண்டிவிட்டு மக்களை பிளவு படுத்த மட்டுமே இந்த மதங்கள் இப்போது பயன்படுகின்றன.


மக்கள் கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், ஆனால் அந்த நம்பிக்கையை போலி பிரச்சாரம் கும்மாளம் கூத்து நடத்தி அந்த மக்களின் நம்பிக்கைகளையே கேலிக்கூத்தாக்கும் இந்த போலி மதவாதிகளின் முகத்திரை கிழிப்போம்.

மதவெறிக்கு துணைபோகும் சக்திகளை அழிப்போம்.

மக்கள் நலன் காப்பவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்.

4 comments:

மதுவர்மன் said...

சுகுமாரன்,

இந்த சம்பவம், எங்கே, எப்போது, யாரால், எதற்காக நிகழ்த்தப்பட்டது என்று கொஞ்சம் விபரமாக குறிப்பிடமுடியுமா?

நன்றி!

இரா.சுகுமாரன் said...

நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய படம் இது சமீபத்திய விநாயர் சதுர்த்தியின் போது எடுக்கப்பட்ட படம் இது.

Kasi Arumugam said...

//சுகுமாரன்,

இந்த சம்பவம், எங்கே, எப்போது, யாரால், எதற்காக நிகழ்த்தப்பட்டது என்று கொஞ்சம் விபரமாக குறிப்பிடமுடியுமா?

நன்றி!//

vaaman கேட்பதிலிருந்து, இது என்னவோ விநாயக எதிர்ப்பாளர்களால் சேதப்படுத்தப்பட்டுவிட்டதோ என்ற தொனி இருப்பதாக உணர்கிறேன்.

ஊரெல்லாம் வசூல்பண்ணி சிலை செய்து பெய்ண்ட் அடித்து ஊர்வலம் விட்டு கடைசியில் கரைக்கிறேன் பேர்வழி என்று கடற்கரையில் குப்பையாகப் போட்டிருப்பவர்கள் வேறு யாருமில்லை அவரது ஆத்ம பக்தர்களே! சரிதானே சுகுமாரன் அவர்களே?

இரா.சுகுமாரன் said...

ஆம், காசி அய்யா,

நீங்கள் சொல்வது தான் சரி,