Wednesday, July 23, 2008

அமெரிக்க மோகன் சிங்கின் வெற்றி - பண நாயகத்திற்கு கிடைத்த வெற்றி

அமெரிக்க மோகன் சிங் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். இது இந்திய பணநாயகம் எவ்வளவு பலமானது என்பதை நமக்கு வலியுறுத்தி உணர்த்தியுள்ளது.

வெற்றி பெறுவதற்கு காங்கிரசு அரசு கொட்டிக்கொடுத்த கத்தை கத்தையாகப்பணம் வாக்குமாறி போடுதல், வாக்களிக்க வராமால் இருத்தல், பாராளுமன்றத்திற்கே வராமல் இருத்தல் ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணமெல்லாம் எங்கிருந்து வந்தது? இவையேல்லாம் மக்கள் வரிப்பணத்தில் திருடியவை தான்.............. இவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்தை இந்திய பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டள்ளது. இவர் நடவடிக்கை எடுக்கப்போராராம், ............................... இவரே பதவிவிட்டு விலகத்தயாரில்ல! அவுங்க மேல இவரு நடவடிக்கை எடுக்கப்போராராம்?.................. நீங்க நம்பித்தான் ஆகனும்...........................

இதுக்கு பேருதான் இந்திய பணநாயகத்தின் வெற்றி.

ஆட்சியே போனாலும் பரவாயில்லை, ஆனால் அமெரிக்க எசமானுக்கு சேவை புரிவதில் மட்டும் அமெரிக்க மோகன் சிங் தயங்கியதில்லை. இந்த மோகன்சிங்குக்கு இந்தியாவைவிட அமெரிக்கதான் தேவை. அப்படி என்ன ஆட்சியை விட அமெரிக்க ஒப்பந்தம் தான் முக்கியமா? என்றால் ஆம், எசமான் சொல்வதை ஏவல் சிங் செய்து தான் ஆகவேண்டும்.

இவருக்குத் தெரியும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை என்று அதனால் தான் இவ்வளவு அவசரம் காட்டினார். ஆட்சி போனாலும் பரவாயில்லை அணு ஒப்பந்தந்தத்தை நிறைவேற்று என அமெரிக்க மோகன் சிங்கிற்கு எசமான் அமெரிக்கா உத்தரவை ஏற்று இந்த நாடகம் முடிந்துள்ளது.

இந்தியாவிற்கு உடனடியாக ஒரு அடிமை சாசனம் எழுத அதரவாக 275 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். எதிராக 256 பேர் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

3 comments:

Anonymous said...

//அமெரிக்க மோகன் சிங்//

பொருத்தமான பெயர்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

சரியாக எழுதி உள்ளீர்கள் !
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அது தான் தொல்லை !
கடவுள் நம் நாட்டை காப்பாற்றட்டும் !
அன்புடன்,
அருப்புக்கோட்டை பாஸ்கர்

அரியாங்குப்பத்தார் said...

வணக்கம்,

தொடர்ந்து அடிக்கடி எழுதுங்கய்யா...