Monday, December 08, 2008

புதுச்சேரியில்-ஈழம் அறிய வேண்டிய உண்மைகள் நூல் வெளியீடு

ஈழம் அறிய வேண்டிய உண்மைகள் நூல் வெளியீடு புதுச்சேரியில் நாளை 09-12-2008 புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற உள்ளது.


இக்கூட்டத்திற்கு ஆனந்தக்குமார் தலைமையேற்று நடத்துகிறார். இக்கூட்டத்தில் வே. ஆனைமுத்து அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் பேராசிரியர் த. பழமலை அவர்களும் கலந்து கொள்கிறார்.

மற்றும் மீனவர் விடுதலை வேங்கைகள் இரா. மங்கையர்செல்வம், மதிமு.க தூ.சடகோபன், தமிழர் தேசிய இயக்கத்தின் இரா. அழகிரி பகுஜன் சமாஜ் கட்சியின் தங்க. கலைமாறன், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு கோ. சுகுமாரன், செந்தமிழர் இயக்கத்தின் ந.மு. தமிழ்மணி, இராஷ்டிரிய ஜனதா தளம் தி. சஞ்சீவி, அம்பேத்கர் தொண்டர் படை சி.மூர்த்தி, புரட்சிப்பாவலர் இலக்கிய பாசறை இராம.சேகர், அகில இந்திய பார்வர்டு பிளாக கட்சியின் மாநிலத்தலைவர் உ.முத்து ஆகியோர் உரையாற்றுகிறாகள்.
விடுதலைச் சிறுத்தைகளின் மாநில அமைப்பாளர் சு. பாவாணன் நூலை பெறுகிறார்.

பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் இதழை பெற்றுக் கொள்கிறார்கள்.

அ. சிவக்குமார் நன்றி செல்கிறார்.

No comments: