Thursday, June 03, 2010

புதுச்சேரி தினகரன் செய்தி ஆசிரியர் தருமராசனுக்கு கண்ணீர் அஞ்சலி

தருமராசன் புதுச்சேரி தினகரன் ஆசிரியர்

புதுச்சேரி தினகரன் செய்தி ஆசிரியரும் நண்பருமான தருமராசன் 03-06-2010 இரவு 2 மணியளவில் மரணமடைந்தார். சென்ற 29-05-2010 அன்று இரவு என்னை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நான் பேச இயலவில்லை. மறுநாள் 30-05-2010 காலை 7.00 மணிக்கு அவரோடு பேசினேன். அது தான் அவரோடு நான் இறுதியாக பேசியவை.

அமைதியானவர், பழக இனியவர், எதற்கும் அலட்டிக் கொள்ளாதவர், இன்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தவர்கள் எண்ணிக்கையை பார்த்தால் அவர் எத்தகைய நட்பாளர்  என்பது தெரியும்.

அவருடைய சொந்த ஊரான கடலூரிலிருந்து 15 கீ.மீ தொலைவில் இருக்கும் பூண்டியாங்குப்பத்தில் 100 க்கும் மேற்பட்ட கார்களில் வந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்த காத்திருந்தார்கள்.

புதுச்சேரியின் அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ரெங்கசாமி, பா.ம.க வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார். உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்கள் திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி மற்றும் பலர்  அங்கு கூடியிருந்தார்கள்.

ஜீனியர் விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக சேர்ந்து புதுச்சேரி தினமலர் நாளேட்டில் செய்தியாளராகவும், பின்னர் தமிழன் எக்பிரஸ் உள்ளிட்ட பத்திரிக்கையில் பணியாற்றிய தருமராஜன் இப்போது தினகரன் செய்தி பத்திரிக்கையின் செய்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு எனக்கு நட்பு உண்டு. அவரின் இழப்பு என்னை போன்ற பல நண்பர்களுக்கு பேரிழப்பாகும்.

அவரின் பிரிவால் துயரத்துடன்
கண்ணீருடனும் கவலைகளோடும்

இரா.சுகுமாரன்


No comments: