Saturday, May 09, 2009

புதுச்சேரியில் திரையுலகினரின் பொதுக்கூட்டம்

புதுச்சேரியில் திரையுலகினரின் பொதுக்கூட்டம்: சீமான்

புதுச்சேரியில் தமிழ்த்திரைப்படத்துறை சார்ந்த இயக்குநர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் இன்று பகல் 2 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, சீமான், வ.கௌதமன், திரைப்பா ஆசிரியர் அறிவுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர்.புதுச்சேரி சிங்காரவேலர் சிலை அருகில் இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்தப் பேச்சைக் கேட்கின்றனர். இந்த நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பப்பபடுகிறது.

மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் காங்கிரசுக்கு எதிராகவும் அ.தி.மு.க அணிக்கு ஆதரவாகவும் திரப்படத்துறையினர் வாக்கு சேகரிக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக சாகடிக்கப்படுவதை கண்டித்து அனைவரும் பேசுகின்றனர். பா.ம.க, அ.தி.மு.க,பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க உள்ளிட்ட அரசியில் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

No comments: