இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும், உண்மை நிலையை கண்டறியவும் அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கூட்டமைப்பின் செயலர் கோ. சுகுமாரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமைதிப்பேச்சு வார்த்தையை சீர்குலைத்து ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
இலங்கை அரசு அறிவிக்கப்படாத போரைத் தொடங்கி தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. இதை தடுக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை தமிழ் எம்.பிக்களை அழைத்து இலங்கை நிலவரம் குறித்துப்பேச வேண்டும்.
உலகத்தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்துள்ளது. 'தமிழர்கள் மீது போர்தொடுத்தால் ராணுவத் தளவாடங்களை திரும்பப்பெருவோம்' என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். எனவே இந்திய தளவாடங்களை திரும்பப் பெறவேண்டும்.
அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தி வருகின்றனர். தமிழக அரசு அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து தாக்கிவருகிறது அதனை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை தமிழக அரசு மெளனமாக இருந்த வேடிக்கைப் பார்க்கக்கூடாது.
ஈழத்தமிழர்களை பாதுகாக்க இந்தியா உடனடியாக தலையிட வேண்டும். எனபன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தார்.
இப்பேட்டியின் போது, ஈழமக்கள் ஆதரவு கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. அழகிரி, தந்தைப்பெரியார் தி.க புதுவை தலைவர் திரு. லோகு. ஐயப்பன், இராட்டிரிய சனதா தளம் தலைவர் திரு. சஞ்சீவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Wednesday, June 21, 2006
Friday, June 16, 2006
புதுவையில் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் இன்று மாலை (16-06-2006) 5.00 மணியளவில் புதுவை திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இலங்கை அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
இலங்கை தமிழர்கள் மீது மிகவும் கொடுமையான தாக்குதலை இலங்கை அரசு நடத்தி வருகிறது. தன் சொந்த நாட்டு மக்களையே இரக்கமின்றி தாக்கி வரும் இராணுவம் தமிழ் மக்கள் மீது கொலை வன்புணர்ச்சி உள்ளிட்ட மனித உரிமை மீரல் செயல்களை செய்து வருவது மிகவும் கண்டிக்கத் தக்கது. விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி அப்பாவித்தமிழ் மக்களை அச்சுறுத்தி இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழர் தேசிய இயக்கத்தின் புதுவை பொருப்பாளர் திரு. இரா. அழகிரி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிக்கிறார்.
ம.தி.மு.க. வின் புதுவை பொருப்பாளர் திரு. முத்து, விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் திரு. வணங்காமுடி, திரு.பாவாணன், திரு.அமுதவன், பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் புதுவைச் செயலர் திரு. கோ. சுகுமாரன், செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் திரு. ந.மு. தமிழ்மணி, தந்தைப்பெரியார் திராவிடர்க்கழகத்தின் புதுவைத் தலைவர் திரு அய்யப்பன், இராவணன் படிப்பகத்தின் திரு வீராசாமி, பியூச்சர் அமைப்பைச் சேர்ந்த திரு. இராதா, அம்பேத்கார் தொண்டர் படையைச் சேர்ந்த திரு. மூர்த்தி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் கலந்து கொள்கின்றன.
இரா. சுகுமாரன், ந. இளங்கோ, கோகுல் காந்திநாதி உள்ளிட்ட பலர் இக்கண்ட ஆர்ப்பட்டதில் கலந்து கொள்கின்றனர்.
இலங்கை தமிழர்கள் மீது மிகவும் கொடுமையான தாக்குதலை இலங்கை அரசு நடத்தி வருகிறது. தன் சொந்த நாட்டு மக்களையே இரக்கமின்றி தாக்கி வரும் இராணுவம் தமிழ் மக்கள் மீது கொலை வன்புணர்ச்சி உள்ளிட்ட மனித உரிமை மீரல் செயல்களை செய்து வருவது மிகவும் கண்டிக்கத் தக்கது. விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி அப்பாவித்தமிழ் மக்களை அச்சுறுத்தி இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழர் தேசிய இயக்கத்தின் புதுவை பொருப்பாளர் திரு. இரா. அழகிரி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிக்கிறார்.
ம.தி.மு.க. வின் புதுவை பொருப்பாளர் திரு. முத்து, விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் திரு. வணங்காமுடி, திரு.பாவாணன், திரு.அமுதவன், பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் புதுவைச் செயலர் திரு. கோ. சுகுமாரன், செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் திரு. ந.மு. தமிழ்மணி, தந்தைப்பெரியார் திராவிடர்க்கழகத்தின் புதுவைத் தலைவர் திரு அய்யப்பன், இராவணன் படிப்பகத்தின் திரு வீராசாமி, பியூச்சர் அமைப்பைச் சேர்ந்த திரு. இராதா, அம்பேத்கார் தொண்டர் படையைச் சேர்ந்த திரு. மூர்த்தி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் கலந்து கொள்கின்றன.
இரா. சுகுமாரன், ந. இளங்கோ, கோகுல் காந்திநாதி உள்ளிட்ட பலர் இக்கண்ட ஆர்ப்பட்டதில் கலந்து கொள்கின்றனர்.
Saturday, June 03, 2006
மதங்களும் வன்முறையும்

இந்த படத்தில் ஒரு பெண்ணின் குடலை உறுவி திண்பது போல ஒரு தோற்றம். காலில் ஒரு உடலைப்போட்டு மிதித்துக் கொண்டு சூலத்தால் குத்திக் கொண்டிருக்கிறது.
அதே போல ஆயுதம் இல்லாத கடவுள் இந்து மதத்தில் இல்லை. ஒன்றிரண்டு இருக்கலாம்.
அதே போல இரண்டு மனைவிகள் போன்ற சீரழிவுகள் இந்த கடவுள்களிடம் உள்ளது.
உலகளாவிய முஸ்லீம் மதவாதம் பேசப்படுவது போல் இந்த இந்துமத ஆயுதக் கலாச்சாரம் அதிகம் பேசப்படுவதில்லை.
கிருத்துவின் நம்பிக்கையாளரான புஷ் உலகம் முழுதும் உள்ள மக்களை தம் நாட்டின் ஆயுத பலத்தால் கொன்று குவிக்கிறார். இந்த பயங்கரவாதம் கண்டிக்கத் தக்கது. அவர் ஏற்றுக் கொண்டிருக்கிற மதம் அன்பை மட்டும் போதிக்கும். ஆனால், புஷ்ஷை கண்டிக்காது.
காந்தியை என் கொன்றாய் என்று "கேட்சே"யை கேட்ட போது இந்து மதம் ஆயுதம் ஏந்தியது ஆனால், காந்தி கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது என்று சொல்லி இந்துக்களை கோழையாக்கி விட்டார். எனவே இவரை நீண்ட நாள் விட்டால் இந்துக்களை கோழையாக்கி முஸ்லீம்களின் ஆதிக்கம் பெற்ற நாடாக மாற்றிவிடுவார் எனவே தான் அவரை கொல்ல நேர்ந்தது என்று குறிப்பிட்டார்.
இந்து மதம் ஆயுத கலாச்சாரத்தை ஆதரிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.
காந்தியை கொன்ற ஆர். எஸ், எஸ் காரர்களின் ஆயுதமும், சூலம் தான்.
Subscribe to:
Posts (Atom)