Tuesday, November 22, 2011

கூடங்குளம் அணு உலை போராட்டத்தை திசைதிருப்பும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு முற்றுகை

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை திசை திருப்பி போராட்டத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி பேசி வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு முற்றுகை போராட்டம் புதுச்சேரி நெல்லித்தோப்பு சுப்பையா சிலையிலிருந்து தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் தலைமையேற்றார். பேராசிரியர் மார்க்ஸ் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் இரா.அழகிரி கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.அ. ஜெகநாதன் தனித்தமிழ் இயக்க தலைவர் க.தமிழமல்லன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாவட்ட த்தலைவர் எம்.ஏ. அஷ்ரப்  செந்தமிழ் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி புரட்சியாளர் அம்பேத்கார் மக்கள் படை சி.மூர்த்தி, மக்கல் சிவில் உரிமைக் கழக தலைவர் இர.அபிமன்னன், உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதில் போராட்டத்தில், மத்திய அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
·        கூடங்குளம் போராட்டத்தைத் திசைத் திருப்பி, தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசிவரும் மத்திய அமைச்சர் நாராயணசாமியை கண்டிக்கிறோம்.

·        போராடும் கூடங்குளம் –இடிந்தக் கரை மக்களுக்கு ஆதரவாக அணிதிரள்வோம்.

·        பாதுகாப்பான அணு உலைகள் எனும் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம்!

·        மன்மோகன் சிங் அரசின் புதிய அனு உலைத் திட்டங்களை வேரறுப்போம்.!

உள்ளிட்ட முழக்கங்களை போராட்டக் காரர்கள் எழுப்பினர்.

1 comment:

HOTLINKSIN.COM said...

உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா...? http://www.hotlinksin.com/ திரட்டியில் உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.