Saturday, February 25, 2006

1,2,3 எப்படி வந்தது தெரியுமா?

௧௨௩௪௫௬௭௮௯௧௰ இவை தமிழ் எண்கள் பொதுவாக ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 1,2,3 என்ற எண்கள் பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். இப்படிப் பயன் படுத்தப்படும் எண்களின் மூலமே தமிழ்தான் என்பதை நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் நமக்கு அச்செய்தி நன்றாக விளங்கும். 1-௧, 2-௨, 3-௩, 4-௪, 5-௫, 6-௬, 7-௭, 8-௮, 9-௯, 10- ௧௰ அதாவது, 1 என்ற எழுத்தில் ௧ உள்ளடங்கியுள்ளதையும் உ என்ற தமிழ் எண்ணில் தற்போது பயன்பாட்டிலுள்ள 2 என்ற எண் அடங்கியுள்ளது என்பதையும் அப்படியே 3-௩, 4-௪ என் 1, 2, 3 என எல்லா எண்களையும் நன்றாக அவதானிதீர்கள் என்றால் இந்த எழுத்துக்கள் அனைத்தும் தமிழிலிருந்து தான் உருவாகின என்பதும் நமக்கு விளங்கும். அது என்ன தமிழிலிருந்து தான் அவை தோன்றியதா? என்றால் ஆம் என்றே கூறமுடியும் எனெனில், டாக்டர் அம்போத்கார் அவர் நூல் ஒன்றில் இந்தியா முழுவதும் தமிழ் தான் பேசும் மொழியாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தொன்மையான மொழியிலிருந்து பல மொழியினர் வார்த்தைகளை தமதாக்கிக் கொண்டு தம்மொழிதான் உயர் மொழி என்று பேசுகின்றனர். பூச்சியத்தை மட்டும் தான் இந்தியர்கள் கண்டுபிடித்தார்கள் என்று கூற கேட்டிருக்கிறேன்.

தமிழ் வார்த்தையான “காசு“ என்பது ஆங்கில மொழியில் எப்படி“கேஷ்“ ஆனதோ, “கட்டுமரம்“ எப்படி “catamaran“ ஆனதோ, மலை என்பது பெருங்கல் - குன்று என அழைக்கக்கப்பட்டு “கல்“ – “hill“ என்று மாறியதாக மொழியியல் அறிஞர்களின் கூறுகின்றனர். ஆங்கிலத்தின் உச்சரிப்பு வழக்கத்தினால் S சேர்க்கப்பட்டு பல தமிழ் சொற்கள் அவர்களால் உள்வாங்கப்பட்டுள்ளன. “பொட்டு“ என்றால் புள்ளி எனலாம் அதையே ஆங்கிலத்தில் pot என்று எழுதி அதில் முன் S சேர்க்கப்பட்டு “spot“ என்று மாறியதைப்போல, “நாகம்“ என்பது ஆங்கிலத்தில் nake என்று எழுதி முன்பு S சேர்க்கப்பட்டு snake என்று மாறியதைப் போல, வாசம் = மல்லிகை => S + mell, பிள = பிளப்பு=> S + pili => split என மாறியதைப்போல தமிழிலிருந்து தான் தற்போது பயன்பாட்டிலுள்ள எண்முறையும் வந்ததுள்ளது.

3 comments:

Anonymous said...

thaangal ampothkaar avarkaLin katturai inaiyathil iruppin inappu kodungkal. uthaviyaaka irukkum. nanri.

Muthu said...

SIR,

WHAT YOU SAID ABOUT VAIKO IS CORRECT..YOU MIGHT HAVE GOT MANY COMMENTS...

(SUGGESTION IS THAT YOU HAVE TO KEEP YOUR TITLES SMALL...OTHERWISE BLOGGER WILL NOT COLLECT YOUR POSTS AND IT WILL NOT ALLOW ANYBODY TO POST COMMENTS)

இரா.சுகுமாரன் said...

தமிழினி தங்கள் ஆலோசனைக்கு நன்றி, நீண்ட நேரம் தலைப்பு பற்றி யோசித்து நண்பர்களிடமும் விவாதித்து
பின்னர் தான் நீண்ட தலைப்பை போட்டேன்.
இருப்பினும் தங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன்.